Friday 6 April 2012

2050 இல் நகர சனத்தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை பெறும் : ஐ.நா



உலக மக்கள் தொகை பற்றிய ஐ.நாவின் புதிய கணிப்பின் படி எதிர்வரும் 40 ஆண்டுகளில், நகர சனத்தொகை வளர்ச்சி வீதம்  கூடிய நாடுகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
2010-2050 வரையிலான காலப்பகுதியில் இந்திய நகர மக்கள் தொகையில் கூடுதலாக 49.7 கோடி பேர் புதிதாக இணைந்து கொள்வார்கள் எனவும், அடுத்து சீனாவில்  34.1 கோடி பேர் இணைந்து கொள்ளாவர்கள் என
 உலக நகரமயமாக்கல் பற்றிய ஐ.நாவின் மறுபார்வை அறிக்கை கணிப்பிட்டுள்ளது.






இம்மக்கள்  தொகை வளர்ச்சியான அந்நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் எனவும், வேலைவாய்புக்கள், எரிசக்தி, உட்கட்டமைப்பு, விட்டு வசதி  என்பவற்றை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதில் பாரிய பிரச்சினைகள்  தோன்றலாம் எனவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து சீனா, நைஜீரியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருக்கும் எனவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment