Thursday 5 April 2012

இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை



தெற்கு சீனக் கடல்பகுதியில் எண்ணெய்வளம் குறித்த ஆய்வுக்காக இந்தியாவுக்கு எதிராக சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்கு சீன கடல் பகுதி குறித்த சர்ச்சை ஏசியன் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதை தடைசெய்ய சீனா பலவழிகளிலும் முயன்றது. ஆனால் அதையும் மீறி விவாதிக்கப்பட்டதையடுத்து சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தெற்கு சீனா கடல்பகுதியில் இந்தியா 2 தொகுப்புகளை பெற்றுள்ளது. ஒரு தொகுப்பில் முன்னதாக ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் வியட்நாம் எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆய்வு மேற்கொண்டுவந்தது. அதில் எண்ணெய் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.எனினும் இந்த விவகாரத்தை தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ விவாதிக்கவில்லை.

வியட்நாம் தொகுப்புகளில் எண்ணெய்வளம் குறித்து ஆய்வை மேற்கொள்வது குறித்து மார்ச்சி்ல்கூட இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்று இந்தியாவை சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார்.தெற்கு சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 

ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணை மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

No comments:

Post a Comment