Friday 6 April 2012

ஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தியுள்ள கிளர்ச்சிக்குழுவினர்



ஆப்பிரிக்காவில், மாலி நாட்டின் வட பகுதியில் "அசாவாத்" என்ற தனி நாட்டுக்காக போராடிய
துராக் விடுதலை இயக்கம் (MNLA) தனது இலக்கை அடைந்து விட்டதாக அறிவித்துள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் முக்கிய நகரமான திம்புக்டுவின் வீழ்ச்சியின் பின்னர், தான் உரிமை கோரிய பகுதிகள் யாவும் தனது கைக்கு வந்து விட்டதாகவும் 'அசவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதாகவும் அவ்விடுதலை இயக்கம் நேற்று (ஏப்ரல் 05) அறிவித்துள்ளது.

தற்போது அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் படுத்தியுள்ளதுடன், உலக நாடுகள் 'அசாவாத்' ஐ ஓர் தனிநாடாக அங்கீகரிக்குமாறு வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.



ஐ.நாவின் பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கான சபை, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் தமது அண்டைய நாடுகளுக்கு ஆகியவற்று National Movement for the Liberation of Azawad (MNLA) இக்கோரிக்கையை வலியுறுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையையும் அனுப்பியுள்ளது.

அத்துடன் தமக்கு எதிராக மாலி நாட்டு படைகள் நடத்தும் இராணுவ தாக்குதலில் இருந்து தமை பாதுகாக்குமாறும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

துவாரெக் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அசவாத் பகுதி பிராந்தியம் இதுவரை மாலியின் திம்பக்து, கிடால், காவோ மற்றும் மோப்தி ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்து வந்தது.

இப்பகுதியில் எண்ணெய் வளம் மற்றும் யுரேனியம் உட்பட கனிம வளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment