ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
மகிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு கப்பல்களை அரசாங்கம் பலவந்தமாக
அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மைய உதாரணமாக
வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அனைத்தையும் அந்த துறைமுகத்திற்கு
அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த
துறைமுகத்தில் மணல் குவிந்து காணப்படுவதால், கப்பல்கள் உள்ளே செல்வதில்
பிரச்சினைகள் காணப்படுகின்றன. கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை காப்புறுதி
செய்யும் லோயிட் நிறுவனம், மகிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு செல்லும்
கப்பல்களை காப்புறுதி செய்வதை நிராகரித்துள்ளது.
இதனால்
அந்த துறைமுகத்தில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக காட்டுவதற்கே அரசாங்கம்,
கப்பல்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு திசைத் திருப்பி விட
உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில்,
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கார்கள் இறக்கப்பட்டால், அவற்றை கொழும்புக்கு
கொண்டு வர மேலதிக செலவு ஏற்படும் எனவும் ஒரு வாகனத்தை கொழும்புக்கு கொண்டு
செல்ல 40 ஆயிரம் ரூபா வரை செலவாகும் எனவும் வர்த்தகர்கள்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment