ராஜபக்சேவின் விருந்தில் இந்திய
எம்.பிக்கள் கலந்து கொள்ளுமா என்பது தொடர்பில் விளக்கம் இல்லாத நிலையில்
இலங்கை செல்லும் இந்திய எம்.பி.,க்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது என
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு செல்லும் இந்திய
எம்.பி.,க்கள் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எம்.பி.,க்கள் குழு ராஜபக்ஷே அளிக்கும்
விருந்தில் கலந்து கொள்ளும் என தெரிகிறது. எனவே இலங்கை செல்லும்
எம்.பி.,க்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது என கூறியுள்ளார். இதனிடையே
இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குழு சுஷ்மா சுவராஜ் தலைமையில் செல்கிறது.
இந்தக்
குழுவில் சுஷ்மா சுவராஜ்(பா.ஜ.,), ரவி பெர்னார்ட்(அ.தி.மு.க.,),
டி.கே.எஸ்.இளங்கோவன்(தி.மு.க.,), சித்தார்த்மொகபத்ரா(பீஜூ ஜனதா தளம்),
சைலேந்திர குமார்(சமாஜ்வாடி), ஹல்தார்( திரிணமுல் காங்கிரஸ்), ஜேசுதாஸ்
சீலம்(காங்.,), எம்.கிருஷ்ணசாமி(காங்.,), சுதர்சன நாச்சியப்பன்(காங்.,)
மாணிக் தாகூர்(காங்.) என்.எஸ்.வி.சித்தன்(காங்.,),
டி.கே.ரங்கராஜன்(சி.பி.எம்), பல்பீர் பஞ்சி ( பா.ஜ.,) பிரகலாத்
வெங்கடேஷ்ஜோஷி, சிவானந்த் திவாரி ஆகியோர் செல்வார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment