Thursday 5 April 2012

படிச்சு முடிச்சுட்டு ஊருக்கு போங்க... மாணவர்களை விரட்டும் இங்கிலாந்து.



இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு முடித்த உடன் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து மாணவ விசாவில் இங்கிலாந்திற்கு வந்து உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த உடன், மேலும் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலையும் செய்யலாம்.

இந்த வசதியால் சுயநிதியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு செலவை ஈடுகட்ட 2 ஆண்டுகள் வேலை செய்து சரிக்கட்டலாம்.

அதுமட்டுமல்லாது, இங்கிலாந்தில் வேலை செய்த அனுபவம், இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற பெரிதும் உதவும்.

ஆனால், இந்த சலுகைகளை நாளை (6-4-2012) முதல் நிறுத்தப்படுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால், மாணவ விசாவில் வந்தவர்கள் படித்து முடித்து உடனே நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment