ஐ.நா.: ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிரியாவை பாராட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இது இலங்கையைப் போன்று இரகசியமான முறையில் அதிகளவுக்கு சாதகமாக செயற்படும் விடயமா? என்று நியூயோர்க்கில் ஐ.நா.வை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ தனது செய்தி ஆய்வில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது;
இன்றைய ஐ.நா.வில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பங்களிப்பு பலவழிகளில், (சிலர் கூறுகின்றனர் வெட்கக் கேடான) ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சிரிய அரசாங்கத்தை பான் கீ மூன் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார் என்று ஐ.நா.வுக்கான சிரியாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பஸார் ஜவாரி இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட் தனது மனிதத்துவ உணர்வை இழந்துவிட்டார் என்று பான் கீ மூன் தெரிவித்த பகிரங்க அறிக்கைகளுக்கு இந்த விடயம் அசௌகரியமானதாகும். ஆனால், சாந்தப்படுத்துவதுஆனால், சிலர் இதனை சரணாகதி என அழைக்கின்றனர். சக்திவாய்ந்த மனிதர்களை பான் கீ மூனின் தன்மையையொத்ததாக உருவாக்குகிறது. 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நியாயமற்ற குற்றச்சாட்டு என்று தனது சொந்த அலுவலர்களை பான் கீ மூன் கடிந்து கொண்டதை இன்னர் சிற்றி பிரஸ் பிரத்தியேக செய்தியாக வெளியிட்டிருந்தது.
கட்டாரி அரசிற்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்வதை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டிருந்தார். அவரின் பங்களிப்பு குறித்து ஜவாரி என்ன நினைக்கிறார் என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.
ஏனைய விடயங்கள் குறித்து இவை உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்த விடயத்தில் அவர் வேறுவிதமாக செயற்படுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் அது ஏன்? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. சிரியாவிடம் பான் கீ மூன் இரகசியமாக சரணாகதி வாலென்று வகைப்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜவாரி அவரை நியாயப்படுத்தியுள்ளார். பான் கீ மூன் பல வீனமாக இருக்கிறார் என்று சகல தரப்பும் கூற முடியுமென இதனை சிலர் எடுத்துக்கொள்வார்கள்.
பான் கீ மூனை பகிரங்கமாக முபாரக்கின் தூதுவர் மகெட் அல்டெலாஸிஸ் சாடியிருந்தார். தனிப்பட்ட முறையில் அதிகார மோசம் என்று அவர் கூறியிருந்தார்.
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவர் பதவி அவருக்கு வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளதென இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை சிரியா தொடர்பாக இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் எகிப்தின் ஆசனத்தில் மகெட் அமர்ந்திருந்தார். அக்கூட்டத்தை ஐ.நா. தொலைக்காட்சி காண்பித்தது. ஆனால், சிரியா பற்றி ஜவாரி பேச ஆரம்பித்ததும் தொலைக்காட்சி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தணிக்கையின் ஒரு வடிவமென பலர் பார்க்கின்றனர்.
சிரியாவில் பாதிக்கப்பட்ட சகலருக்குமாக ஒருநிமிட மௌனாஞ்சலி செலுத்துமாறு ஜவாரியின் கோரிக்கைக்கு பான் கீ மூன் அனுமதி அளித்திருந்தாரா என்று வியாழன் நண்பகல் செய்தியாளர் மாநாட்டின் போது இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. பான் கீ மூனின் பேச்சாளரால் பதிலளிக்க முடியவில்லை. பொதுச் சபையின் தலைவருடைய பெண் பேச்சா ளரிடம் இக்கேள்வியை அவர் பாரப்படுத்தினார். ஆனால், இது பான் கீ மூனுக்கான கேள்வியாகும். சிரிய அரசினால் விடுக்கப்பட்ட இந்த மௌனாஞ்சலியை பான் கீ மூன் அனுட்டித்தாரா? இல்லையா? என்பதே கேள்வியாகும். ஏனைய விடயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு அவை உறுப்பு நாடுகளைப் பொறுத்த விடயம் என்பது பான் கீ மூனின் பதிலாக உள்ளது. அமைதி காக்கும் பணியில் விசேட ஆலோசகராக இலங்கையின் சவேந்திர சில்வாவை வைத்திருக்க வேண்டுமென அவர் நினைக்கிறார் என்பது பான் கீ மூனின் பதிலாக இருக்கிறது. ஆனால், அவர் இது பற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. இது உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று அவர் கூறுகிறார்.
விசேட ஆலோசனைகள் குழுக்கூட்டங்களில் சில்வா இப்போதும் கலந்துகொள்கிறாரா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அண்மையில் அவரின் செயலகம் கடுமையாக முயற்சித்திருந்தது.
No comments:
Post a Comment