Sunday 1 April 2012

சோமாலியாவில் கடும் சண்டை



சோமாலியாவில் சோமாலிலாந்து குடியரசை சுயமாகப் பிரகடனம் செய்த படையினருக்கும், பிரிந்துபோன பிராந்தியமான கட்டுமா மாநிலத்தின் விசுவாசப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்திருக்கின்றன.

சர்ச்சைக்குரிய வடமேற்கு சோமாலிய பகுதியில் இரு முனைகளில் நடந்த இந்தச் சண்டைகளை ஆரம்பித்ததாக இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல மக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் கூறுகின்றன.

இந்த வருட முற்பகுதியில் சோமாலிலாந்தில் இருந்து கட்டுமா மாநிலம் பிரிந்த பின்னர் நடக்கும் மிகவும் மோசமான சண்டை இதுவென அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment