Friday 25 December 2015

மங்குணி அரசியும், லகுடபாண்டியும்.

பெருமழை வெள்ளம், தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறதோ இல்லையோ, ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. எப்போதும் ஆணவமும் அதிகாரமும் கொண்டு பேசும் ஜெயலலிதா முதன் முதலாக “எனக்கென்று யாருமே கிடையாது” என்று கழிவிறக்கத்தோடு புலம்புகிறார்.   தலைமறைவான குற்றவாளி யுவராஜ் வாட்ஸப்பில் ஆடியோ வெளியிடுவது போல, வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டு அதில் “எனக்கு சுயநலமே கிடையாது” என்று பச்சையாக பொய்யை பரப்புகிறார்.

IN21_JAYA_1296f

தமிழகமே வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்தவர், மக்கள் சாக்கடை நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் ஒய்யாரமாக பார்வையிட்டவர், “உங்கள் துன்பங்களை நான் சுமக்கிறேன்” என்று பசப்புகிறார்.    ஆட்சி செய்யவும், தமிழகத்தின் நலனை பேணவும் மக்கள் வாக்களித்தால், வருடத்தில் நான்கு முறை, கொடநாட்டில் ஓய்வெடுக்கும் கோமலவள்ளி, “என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்” என்று பொய்யுரைக்கிறார்.

1991 முதல், மன்னார்குடி மாபியா தமிழகத்தை அடித்த கொள்ளை நாடறியும்.    அந்தக் கொள்ளை சற்றும் குறையாமல், தற்போதும் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த மன்னார்குடி குடும்பம் பல்வேறு தியேட்டர்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறது.   மன்னார்குடி குடும்பம் நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை குவித்து வருவது குறித்து சவுக்கு தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.   சசிகலா இளவரசி, சுதாகரன், சிவக்குமார், கார்த்திகேயன் என்று தற்போதும் மன்னார்குடி குடும்பம் வளைத்துச் சேகரிக்கும் சொத்துக்களின் பட்டியல்கள் வெளியானபடியே உள்ளன.

இந்தச் சொத்துக்களையெல்லாம்  அள்ளிக் குவிக்கும் இந்த மன்னார்குடி கும்பல் இன்றளவிலும் ஜெயலலிதாவோடு போயஸ் தோட்டத்திலேதான் வசித்து வருகிறது.   1996ல் ஒரு முறையும், டிசம்பர் 2011ல் ஒரு முறையும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை வெளியேற்றிய ஜெயலலிதா, மீண்டும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை போயஸ் தோட்டத்தில் அனுமதித்து, இந்தக் கொள்ளையை தொடரச் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  இப்படி இருக்கையில் எனக்கென்று யாருமே இல்லை என்று ஜெயலலிதா வடிக்கும் முதலைக் கண்ணீரை மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை.

மேலும் ஜெயலலிதா வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.   ஜெயா குழும தொலைக்காட்சிகள் ஜெயலலிதா கட்டுப்பாட்டிலேதான் உள்ளது.  அது தவிரவும், அவர் முதல்வர் என்பதால், அவருக்கு சொம்படிக்கும் கூடகங்களை உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் அவர் உரையை வெளியிடும் என்பதில் சந்தேகம் இல்லை.  அப்படி இருக்கையில், மிக எளிதாக ஒரு வீடியோ பதிவை உருக்கமாக வெளியிட்டிருந்தால், அது மக்களை இன்னமும் அதிகமாக சென்றடைந்திருக்கும்.   ஆனால், அப்படிச் செய்யாமல், ஆடியோ பதிவாக வெளியிட்டது ஏன் என்று கேள்விகள் எழுகின்றன.  இதற்கு ஒரே விடை, வீடியோ பதிவில், அரசு செய்தித் துறை புகைப்படங்களில் செய்வது போல போட்டோ ஷாப் செய்ய முடியாது என்பதே காரணமாக இருக்க முடியும்.

இப்படி போட்டோ ஷாப் செய்யாமல், ஒரு வீடியோவைக் கூட வெளியிட முடியாத நிலையில்தான் ஜெயலலிதா இருக்கிறார்.   வெள்ளத்தை பார்வையிட பிரதமர் ஹெலிகாப்டரில் வருகை தருகிறார் என்ற தகவல் வராமல் இருந்திருந்தால், ஜெயலலிதா நிச்சயமாக வெள்ளத்தை பார்வையிட வந்திருக்கவே மாட்டார்.  அந்த அளவுக்கு எதிலும் ஆர்வமில்லாமல், சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த கட்டத்தை நினைத்து மன உளைச்சலில் இருக்கிறார்.   ஒரு மணி நேரம் தலைமைச் செயலகத்தில் செலவிட்டு அலுவலகப் பணிகளை தினந்தோறும் பார்க்க முடியாத ஒரு நபருக்கு, வரலாறு காணாத வெள்ளத்தில் மக்களை சந்திக்க முடியாத ஒரு நபருக்கு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க திராணியில்லாத ஒரு நபருக்கு,  மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை மட்டும் எதற்கு என்பதுதான் புரியவில்லை.    மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிப்பதற்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

செம்பரம்பாக்கம் ஏரியை டிசம்பர் 1 அன்று இரவு திறந்து  விட்டதன் காரணமாகவே சென்னை தத்தளித்தது என்ற உண்மை சமூக வலைத்தளங்கள் மற்றும் நேர்மையான சில ஊடகங்கள்  மூலமாக அனைவரிடத்திலும் பரவியதையடுத்து, வேறு வழியேயின்றி, மங்குணி அரசியின் லகுடபாண்டியான தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வைத்து ஒரு நீண்ட விளக்க அறிக்கையை அளித்துள்ளார்.

K__Gnanadesikan_2230438e

அணையைத் திறந்து விடுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.   சம்பந்தப்பட்ட அதிகாரிகளே திறந்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை கடந்த நாண்காண்டுகளாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பை பார்த்தாலே தெரியும்.   “மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரே ஒரு செய்திக் குறிப்பு கூட வெளியானது கிடையாது.   இப்படி ஒரு நிலையில், எந்த அதிகாரிக்கு தன்னிச்சையாக ஏரியைத் திறந்து விட துணிவு வரும் ?

தமிழக பொதுப்பணித்துறையின் விதிகளின் படி, ஏரிகள் மற்றும் அணைகளைத் திறந்து விடுவதற்கான அதிகாரம், பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளர் வசம் உள்ளது.   ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடைமுறையில் தலைமைப் பொறியாளர் உத்தரவு பிறப்பித்ததே கிடையாது.  அனைத்தும் மாண்புமிகு அம்மாவின் ஆணைதான்.

29 நவம்பர் 2015 அன்று, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட அனுமதி கோரி பொதுப்பணித் துறை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால், யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருந்த தலைமைச் செயலாளர் டிசம்பர் 1 இரவு வரை அனுமதி அளிக்கவில்லை என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.    வழக்கமாக இப்படி ஒரு செய்தி வெளியிட்டால், தமிழக அரசு உடனடியாக எடுக்கும் நடவடிக்கை அவதூறு வழக்கு பதிவு செய்வதே.   ஆனால், இந்தச் செய்திகள் தொடர்ச்சியாக வெளி வந்து பல நாட்கள் ஆகியும், எந்த ஊடகத்தின் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை.    200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை பதிவு செய்த தமிழக அரசுக்கு, கூடுதலாக ஒன்றிரண்டு வழக்குகள் பதிவு செய்வது ஒன்றும் சிரமமே அல்ல.   ஆனால், அவ்வாறு செய்யாமல், பத்து நாட்கள் கழித்து லகுடபாண்டியை வைத்து விளக்கம் அளித்திருப்பதே இதில் உள்ள உண்மைக்கு சான்று.

லகுடபாண்டியின்  விளக்க அறிக்கையின்படியே, நவம்பர் 17 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 22.3 அடியாக இருந்தபோது 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.   நவம்பர் 30 அன்று ஏரியின் நீர் மட்டம் 22.05 என்றும், அப்போது 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.   அடுத்த இரு நாட்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையங்கள் குறிப்பிட்டும், வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் 50 சென்டி மீட்டர் மழை என்று குறிப்பிட்டிருந்தும், நவம்பர் 30 அன்று வெறும் 800 கன அடி நீரை வெளியேற்றியது பச்சை அயோக்கியத்தனமா இல்லையா ?

எத்தனையோ  எச்சரிக்கைகள் இருந்தும், தமிழக அரசின் தவறான நடவடிக்கையினால்தான் சென்னை நகரம் மூழ்க நேர்ந்தது என்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.
இதற்கு பொறுப்பாக்கப் படுவது யார் என்பதுதான் தற்போது எழும் கேள்வி.   நவம்பர் 2011ல், டேம் 999 என்ற திரைப்படம் கேரளாவில் வெளியானது.     முல்லைப் பெரியாறு அணை குறித்து அத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  அணை உடைவது போல காண்பித்தால், இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்வு உருவாகும்.  அதனால் திரைப்படத்தை தடை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது.  இந்தத் தடையை நியாயப்படுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழக அரசு.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில், ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து இறந்து விட்டான்.   அது விபத்துதான் என்றாலும், பள்ளித் தாளாளர் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.   பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தின் பார்ப்பன செல்வாக்கு காரணமாக அப்போது கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட அன்றே விடுவிக்கப்பட்டனர்.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளின்போது, நடந்த இடிபாட்டில் 10 கட்டுமானத் தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.   இதையொட்டி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, ஜேப்பியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னாளில் 25 கோடி மன்னார்குடி மாபியாவுக்கு செலவு செய்து, சிறையிலிருந்து வெளியேறினார் ஜேப்பியார்.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 1 அன்று இரவு முன்னறிவிப்பின்றி 29 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டதற்கும் என்ன வேறுபாடு ?  முந்தைய இரு வழக்குகளையும் விட, இது இன்னமும் தீவிரமானது.

பொதுப்பணித் துறை ஏரியை திறந்து விடலாம் என்று 29ம் தேதியே கடிதம் எழுதியும், கடுமையான மழை பெய்யும் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணி வரை காத்திருந்து திடீரென்று 29 ஆயிரம் கன அடியை திறந்து விட்டதற்கு ஒரே பொறுப்பு லகுடபாண்டி ஞானதேசிகன் மட்டுமே.    ஒரு அரசில் தலைமைச் செயலாளர் பதவிக்கு முதலமைச்சரை விட கூடுதலான பொறுப்பு உண்டு.  ஒரு மாநிலத்தின் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவரே தலைவர்.   ஒரு நிர்வாகத்தின் தலைவராக கருதப்படுவது தலைமைச் செயலாளரின் பதவி மட்டுமே.   உச்சநீதிமன்ற உத்தரவாகட்டும், மத்திய அரசின் கடிதங்களாகட்டும், அனைத்தும், தலைமைச் செயலாளருக்கே வரும்.    அந்த வகையில் நிர்வாகத் தலைமையாக இருக்கும் ஞானதேசிகன், முதலமைச்சரை கலந்தாலோசித்தோ, ஆலோசிக்காமலேயோ செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்திருந்தால், பல நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, பல கோடிக்கணக்கான பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை கேட்காமல் ஏரியைத் திறக்க உத்தரவிட்டிருந்தால் அதிகபட்சம் என்ன நடந்திருக்கும் ?    யாரைக் கேட்டு எரி திறக்கப்பட்டது என்று கோபப்பட்டு, மீசை நட்ராஜ் ஐபிஎஸ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டது போல, ஞானதேசிகனும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.  மன்னிக்கவும்.  தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.  அவ்வளவுதானே ?  தூக்கிலா போடப்பட்டிருப்பார் ?


ஆனால், கேவலம் தன் தலைமைச் செயலாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலை வரை தாமதித்து, மிகத் தாமதமாக திறக்க உத்தரவிட்டு, லட்சக்கணக்கான உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கிய பதவி வெறி பிடித்த ஞானதேசிகனை கழுவில் ஏற்ற வேண்டுமா வேண்டாமா ?     தற்போது தமிழக மின் வாரியம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனில் மூழ்கி இருப்பதற்கும் ஒரே காரணம் இந்த லகுட பாண்டி மட்டுமே.

இப்படிப்பட்ட இந்த அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டுமா வேண்டாமா ?

தவறான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்புக்கு காரணமான தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது.

மங்குணி அரசியும், லகுடபாண்டியும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.   இப்படி கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் இவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டரின் மூன்று விருப்பங்கள்

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.



1)என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !

2)நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!

3)என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!

தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

*தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !

*நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!

*எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!

நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய “நேரம் மட்டுமே:”

உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

Thursday 3 December 2015

பெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்?

சுனாமியையே நேரடியாக எதிர்கொண்ட பகுதிகள் தான் சென்னையும் கடலூரும் நமது மாநிலமான தமிழகமும். ஆனால், திடீரென ஏற்பட்ட அந்த பாதிப்பால் ஏராளமான உயிர் சேதம். அரசு நிர்வாகம் உள்பட யாரும் எதிர்பாராத அந்த சீற்றத்தின் வடுக்கள் இன்னும் கூட நம் மனதை விட்டு அகலவில்லை. ஆனால், இப்போதைய மழை வெள்ளம் அந்த சுனாமி பாதிப்பையே மிஞ்சி நிற்கிற கோரக் காட்சிகளைப் பார்க்கிறோம். தெருக்களில் வெள்ளம், வீட்டுக்குள் தண்ணீர், மாடிகளில் தஞ்சம். குடி நீர்- பால்- அடிப்படை உணவு - மருந்துகளுக்காக அலைபாயும் மக்கள். 
 
 
 
வீடுகளில் தங்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்போம் என்ற திக் திக் பயம் ஒரு பக்கம், அம்மா பசிக்குது என குழந்தை கேட்டுவிடுமோ.. என்ன பதில் சொல்வது என்ற அச்சம் மறு பக்கம், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மருந்து மாத்திரைகள் கூட வாங்கித் தர முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற மனதை நொறுங்க வைக்கும் வேதனை இன்னொரு பக்கம், இத்தனை காலம் குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பாத்திரம், பண்டம், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பைக், கார் என எல்லாமே கண் முன்னே தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போய்விட்டதை நினைத்து, இதையெல்லாம் மறுபடியும் சீர் செய்வதையும் முழுவதும் வீணானதை மீண்டும் எப்படி வாங்குவோம் என்ற பெரும் பீதியான நினைவுகளுடனும் வினாடிகளைக் கழிக்கும் சென்னை, கடலூர், திருவள்ளூரின் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகள், வீட்டை நிர்வகிக்கும் மகன்கள், மகள்கள். 
 
 
அன்று உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், வேலைகளுக்குப் போக முடியாமல், வேலைகளே கிடைக்காமல் அடுத்த வேலை உணவுக்குக் கூட கந்து வட்டிக்கு வரிசையில் நின்று காசு வாங்கும் அவலம். ரேசன் கார்டுகள், படித்த படிப்பின் அடையாளங்களான சான்றிதழ்கள், காப்பீட்டு பாலிசிகள், வீட்டுப் பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்ட நிலையில், இதையெல்லாம் எப்படி மீண்டும் பெறுவது என்ற தவிப்பு ஒரு பக்கம். மொட்டை மாடிகளில் நின்று கொண்டு வானத்திலிருந்து தண்ணீரையோ, பாலையோ, உணவுப் பொட்டலங்களையோ போட மாட்டார்களா என ஹெலிகாப்டர் சத்தத்துக்காகவும், தெரு வழியே படகோ, அல்லது யாராவதோ வர மாட்டார்களா என கண்களின் கண்ணீருடன் எட்டிப் பார்க்கும் அவலம்.
 
 
 
  இப்படி அவரவரர் கண் முன்னே வாழ்க்கையை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு போய்விட்டது மழையும் வெள்ளமும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல பாலங்கள் வெள்ளத்தை தாங்கி நிற்க, பாலாற்றில் சமீபத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் உடைந்து போய் அரசியல்வாதிகளின் கமிஷன், காண்ட்ராக்டர்களின் பேராசை அசிங்கத்தை நேரடியாக பார்த்து நொந்து கொள்ள வேண்டிய சூழல். டவுன் பிளானிங் ஆக்ட் போன்ற சட்டங்களை ஓட்டுக்காக திருத்தி, திருத்தி.. நீங்கள் முதலில் நிலத்தை ஆக்கிரமிக்கலாம், இத்தனை ஆண்டுகள் இங்கே இருந்தற்காக ஆதாரத்தைத் தந்தால் (அதாவது விஏஓவுக்கு லஞ்சம் தந்து சான்றிதழ் வாங்கி) பட்டா தந்துவிடுவோம் என்ற ஓட்டு அரசியல். இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்கள், ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள். வெள்ளம் எங்கே போகும்? 
 
எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லாத அமைச்சர்கள், அதிகாரிகள். டிவி கேமரா ஓட ஆரம்பித்து ஸ்டார்ட் சொன்னவுடன் வேட்டியை லேசாக மேலே தூக்கியபடி கரை வேட்டிகளுடன் லைனாக நடந்து வந்து போஸ் தரும் அமைச்சர்கள். பின்னால் முதல்வர் ஜெயலலிதா படத்தை தூக்கிப் பிடித்தபடி ஒருவர். கடும் வெள்ளத்தில் அமைச்சரின் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்ற நிலையில், வாிக்கு வரி, மாண்புமிகு புரட்சித் தலைவி, இதய தெய்வம் அம்மா அவர்களின் உத்தரவுப்படி இந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை நடக்கிறது என்ற நீட்டி முழக்கும் அம்மா புராணம். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் அம்மாவின் ஆணைப்படி இதைச் செய்கிறோம், அதை செய்கிறோம் என்று உளறும் நிலை. உங்களது ஒவ்வொரு வேலைக்கும் அம்மா உத்தரவு வர வேண்டுமா? ஜெயலலிதா தான் வெள்ளப் பகுதிகளை பார்க்க வரவில்லை என்ற கேள்விக்கு, அதையெல்லாம் நீங்க கேட்கக் கூடாது என பதில் தரும் ஆளும்கட்சிப் பிரமுகர். ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள் இதைத் கூட கேட்கக் கூடாதா?. உங்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா?. 
 
  புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்று நீட்டி முழக்கி நீங்கள், பதவிகளைப் பிடித்து சம்பாதித்துக் கொண்டு இருக்க, உங்களை இந்த மழை வெள்ளத்தில் கூட கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா? தொடர் மழை என்பது தெரியும். பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை தந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு தினந்தோறும் நாளை விடுமுறை, நாளை விடுமுறை என நீட்டித்துக் கொண்டு இருக்கிறது கல்வித்துறை. காரணம், அந்தத் துறைக்கான அமைச்சர்களிடம் எந்த முன் யோசனையும் இல்லை, அதை விட முக்கியம் அவர்களால் எந்த முடிவும் தானாக எடுக்க முடியாது என்பதும் தான்.
 
 தலைமைச் செயலாளர் கூட முடிவு செய்வது மாதிரி தெரியவில்லை. அவருக்கு மேல் தான் அரசு ஆலோசகர்கள் இருக்கிறார்களே. ஒரு சாதாரண விஷயத்தைக் கூட மேலிடத்துக்குக் கொண்டு செல்ல இடையில் எத்தனை பூசாரிகள்... இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள் எத்தனையோ. நாம் காவல் துறை கணக்கை வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது. 
 
அதே போல வெள்ளத்தோடு போன கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் எத்தனையோ. பழுதாகி நிற்கும் இந்த வாகனங்களுக்கு மீண்டும் உயிர் தர ஆயிரக்கணக்கான மெக்கானிக்குகள் இரவு- பகலாக உழைத்தாலும் பல மாதங்கள் ஆகும். வீட்டுக்குள் வெள்ளம் வராத மக்கள் தப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் எதையும் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை. செப்டிக் டாங்குகள் எல்லாம் நிரம்பி, டாய்லெட்களில் இருந்து எல்லாமே ரிவர்சில் மேலே ஏறி வீடுகளுக்குள் கழிவும் வாசனையும். குழந்தைகள் மருத்துவமனைகள் உள்பட பல மருத்துவமனைகளுக்குள் நீர் புகுந்து பச்சிளம் பிஞ்சுகளையும், நோயாளிகளையும் கொட்டு மழையில் நனைய நனைய வெளியேற்றிய காட்சிகளை பார்த்தபோது நெஞ்சு வெடித்துவிட்டது. அந்த மருத்துவமனை ஊழியர்களையும், பெரும் வெள்ளத்தில் டாக்சிகள், ஆட்டோக்கள் வர முடியாத சூழலில், பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், டெப்போ ஊழியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.
 
 எங்க வீட்டுல 3 பேர் தங்கலாம், நான் ப்ரீயா ரீசார்ஜ் செய்றேன், என்கிட்ட எக்ஸ்ட்ரா கேஸ் சிலிண்டர் இருக்கு, என் வீட்டில் 30 பேருக்கு சாப்பாடு ரெடி.. என்னை தொடர்பு கொள்ளுங்கள் என அழைக்கும் உள்ளங்கள், தெருத் தெருவாய் உணவுப் பொட்டலம் ஏந்தியபடி சென்று மக்களுக்கு தரும் இதயங்கள், தனது உயிரை ஒரு கயிற்றிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை வலிந்து சென்று மீட்டு வரும் கடவுள்கள்... என சென்னையின் வெள்ளம் மனித நேயத்தையும் வெள்ளமாய் ஓட விட்டிருக்கிறது. மக்களுக்காக திறக்கப்பட்ட திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஒரு பக்கம் என்றால் மக்கள் வந்து தங்கலாம் என அறிவித்த கோவில் கூடங்கள், மசூதிகள் என எல்லா புறமும் மதம் வென்ற நிகழ்வுகள். ட்விட்டர், பேஸ்புக்கை ஒரு சமுதாயம் எப்படி உண்மையிலேயே உருப்படியாக உபயோகிக்கலாம் என செல்ஃபி புள்ளைகளுக்கு பாடம் கற்பித்துள்ளது இந்த மழை. அங்கே மாடியில் ஒரு கர்ப்பிணி சிக்கியுள்ளார், இதோ இங்கே ஒரு குழந்தைக்கு பால் தேவை.. தர முடியுமா?. என்னிடம் உள்ள இந்த உணவை யாராவது எடுத்துச் சென்று மற்றவர்களுக்குத் தர முடியுமா என்ற கோரிக்கைகள், ஏக்கங்களை ஏந்திச் சென்று வருகின்றன சமூக வலைத்தளங்கள். 
 
கண்மாய்களை அந்ததந்த கிராம மக்களே தூர் வாரி வந்த விதியை மாற்றி, இனி அதை அரசே செய்யும் என அறிவித்து, தூர் வாராமல், அப்படியே தூர் வாரினாலும் அதையும் அரைகுறையாக செய்து, அதில் 45 சதவீதம் கமிஷன் அடித்துத் தின்று, உடம்பை வளர்த்து, தங்கள் குடும்பப் பெண்களுக்கு நகை, சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்ட ஒன்றியச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், கட்சியின் பிற பிரிவுகளின் கரைவேட்டிகள், கூடவே சேர்ந்து கொள்ளையடித்த காண்ட்ராக்டர்கள் ஆகியோரை சகித்துக் கொண்டதால் மக்களுக்கு இந்த தண்டனை. தூர் வாரப்படாத கண்மாய்கள், ஏரிகள் அதிக நீரை தேக்கி வைக்க முடியாமல் அதை வெளியேற்ற, அந்த நீர் செல்லும் வழிகளான ஓடைகள், கால்வாய்களை கமிஷன் வாங்கிக் கொண்டு, பட்டா போட்டுத் தந்து வீடு கட்ட வைத்த அரசியல்வாதிகளால், ஒழுங்காக- நேர்மையாக வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர். இவ்வளவு பிரச்சனையில் சென்னையில் ஒருவர் மட்டும் தான் மிக அதிகமாக பேசியிருக்க வேண்டும். அவர் பெயர் சைதை துரைசாமி. இவர் தான் இந்த மாநகரத் தந்தை எனப்படும் மேயர். ஆனால், அவர் கடைசியாக பேசிய வெள்ளத்துக்கு முன்பு தான். காரணம், அவரை அம்மா ஓரம் கட்டி வைத்திருக்கிறாராம். இது தெரியவந்ததால் அவரை அதிகாரிகள் முதல் அடிமட்டம் வரை யாரும் மதிக்காமல் போக, அவரும் உத்தரவு போடுவதை நிறுத்திவிட்டார். 
 
மேயர் ஏன் வெளியே வரவில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல் போடும் என்பதால் மழை, வெள்ளப் பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிடும்போது (கேமரா.. ஆக்ஷன்) கூடவே ரெயின்கோட் அணிந்தபடி உலா வருகிறார். யாராவது கேள்வி கேட்டால் அவர் படும்பாடு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைவிட பரிதாபம்... அமைச்சர்களின் வாயில் எப்போதும், இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மாவின் ஆணைப்படி நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்ற ஓட்டை ரெக்கார்ட் பாட்டு. வெள்ளம் பாதித்த பகுதியில் வேனில் இருந்தபடி வாக்காளப் பெருமக்களே என்று அழைத்தவர் தான் இவர்களது தலைவியான ஜெயலலிதா. அப்புறம் இவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்..? இப்படி ஒரு பக்கம் மழை கொடுமை என்றால், இன்னொரு பக்கம் கேடுகெட்ட நிர்வாகத்தின் கொடுமை.. பாவம் வாக்காள பெருமக்கள்!

Sunday 29 November 2015

அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!

அமெரிக்கா, உலகின் மாபெரும் வல்லரசு நாடு. யார் வீட்டுக்குள்ளும் புகுந்து அட்டூழியம் செய்யும் உரிமத்தை தங்களுக்கு தாங்களே அளித்துக் கொண்டு, அ….’ராஜ’கம் செய்யும் பண்புடைய முடிசூடா மன்னர்கள். தொழில்நுட்பத்தை அவ்வளவு நுட்பமாக கையாளும் திறன் கொண்டவர்கள்.



உலகின் முதன்மை தொழில்நுட்பங்கள் மற்றும் வேறு யாரும் அறிந்திராத அறிவியலை எல்லாம் தங்களது இராணுவப்படையில் வைத்திருக்கும் ஆணவம் தான் அவர்களை, அழையா விருந்தாளியாக போர் தொடுக்க வைக்கிறது.

திமிர் மட்டுமின்றி திறமையும் நிறைய உள்ளவர்கள். அமெரிக்க இராணுவத்தைக் கண்டு அஞ்சும் படை நிறையவே உண்டு. இனி, அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்….

“ரே பேன்” – Ray Ban கண்ணாடிகள்

“ரே பேன்” – Ray Ban கண்ணாடிகள் கடந்த 1929ஆம் ஆண்டு அமெரிக்க வான்படை லெப்டினன்ட் ஜெனரல் ஜான், ஓர் நிறுவனத்திடம், விமான ஓட்டும் விமானிகளுக்கு தலைவலி, குமட்டல் வராமல் இருக்க, சூரிய கதிர்களை எதிர்க்க ஓர் சிறப்பு கண்ணாடி வடிவமைக்க கேட்டுக்கொண்டார். அந்த கண்ணாடி தான் இப்போது உலக புகழ்பெற்று திகழும் “Ray-Ban” ஆகும், கதிர்களை தடுப்பது என்பது இதன் பொருள்.

சத்தம் குறைவான வெல்க்ரோ

பொதுவாக நாம் அணியும் செருப்பகளில் இருக்கும் பொருள் தான் வெல்க்ரோ (ஒட்டப பயன்படுவது). இதில் நல்ல சத்தம் வரும். ஆனால், அமெரிக்க இராணுவத்தில் 95% குறைவான சத்தம் வரும் ஸ்பெஷல் வெக்ரோவை பயன்படுத்துகின்றனர்.

அதிக இராணுவவீரர்கள் டிசம்பர் 31, 2013 வரை 1,369,532 பேர் அமெரிக்க இராணுவத்தில் இருந்துள்ளனர் மற்றும் 850,880 பேர் ரிசர்வ் படையில் இருந்துள்ளனர். மொத்தமாக சேர்த்தால் 2.2 மில்லியன் பேர் ஆவார்கள். இது, வெர்மான்ட் (Vermont), அலாஸ்கா (Alaska) மற்றும் வியோமிங் (Wyoming) போன்ற பகுதிகளின் மக்கள் தொகையை விட அதிகமானது ஆகும்.

சொந்தமான நிலம்

அமெரிக்க இராணுவத்திற்கு மட்டுமே 24,000 சதுர மைல் தூர அளவு நிலம் சொந்தமாக இருக்கிறது. இதை ஒன்று சேர்த்தல், அமெரிக்காவில் இதுதான் 42வது மாபெரும் பகுதியாக இருக்கும்.

அதிக செலவு

2014 ஆம் ஆண்டின் கணக்கின்படி, அமெரிக்கா தங்கள் நாட்டின் இராணுவத்திற்காக 580 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. இதுவே, உலகில் ஓர் தனி இராணுவப்படைக்கு செய்யப்பட்ட அதிகபட்ச செலவாகும். இதற்கு அடுத்த இடத்தில சீனா உள்ளது (129 பில்லியன் டாலர்கள்)

“டாப் கன்” திரைப்படம்

கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த “டாப் கன்” (TOP GUN) என்ற திரைப்படத்தை கண்டு, 500% அதிகமானவர்கள் கடற்படை விமானிகளாக சேர முன் வந்தார்களாம்.

சிறப்பு ஆணுறை

அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு ஆணுறை ஒன்று வழங்கப்படுகிறதாம். அது ஒரு லிட்டர் தண்ணீரை கொள்ளும் அளவு திறன் வாய்ந்ததாம் (அதுல எதுக்கு தண்ணி… புடிக்கணும்!!!!)
உலகம் முழுதும் உள்ளது

சமீபத்திய தகவல்களின் படி, அமெரிக்க இராணுவத்தின் அமைப்பிடம் உலகம் முழுதும் 74 நாடுகளில் இருக்கிறதாம்

ரோபோட்

கடந்த 1968ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவம் “வாக்கிங் டிரக்” என்ற ஓர் ரோபோட்டை உருவாக்கியது. இதன் வலிமையைக் கொண்டு ஓர் காரையே தூக்கிக்கொண்டு ஐந்து மைல் வேகத்தில் நடக்க முடியுமாம். ஆனால், இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை என கூறப்படுகிறது.

ரோபோட் கடந்த 1968ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவம் “வாக்கிங் டிரக்” என்ற ஓர் ரோபோட்டை உருவாக்கியது. இதன் வலிமையைக் கொண்டு ஓர் காரையே தூக்கிக்கொண்டு ஐந்து மைல் வேகத்தில் நடக்க முடியுமாம். ஆனால், இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை என கூறப்படுகிறது.

அதிக உயிர்சேதம் ஏற்பட்ட போர்

அமெரிக்க உள்நாட்டு போர் தான் மிகவும் கோரமானது என்று கருதப்படுகிறது, இந்த போரில் ஏறத்தாழ 7,50,000 போர் வீரர்கள் உயிரிழந்தனர். அதிகபட்சமாக போர் வீரர்கள் இறந்த போராக இது கருதப்படுகிறது.

ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?


அண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

                               ravi.jpg


நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் அனைவரையும் ஈர்த்தது, இந்த திருமணம்தான். சரி யார் இந்த ரவி பிள்ளை என்பவர் யார்? 
கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.

எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை.  பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும்  சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான்  கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்றது.

                 
                                            marr.jpg


இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. 'பாகுபலி 'பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்படமாக உருவாக்கப்பட்டது. பின் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ‘மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.
திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.

திருமணத்திற்காக பாதுகாப்புக்காக மட்டும் கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவுவகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்ததிருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ''எனது மகள் திருமணத்தை பிரமாண்டமான நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்'' என்றார். 

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.....பொட்டு அம்மான்......

விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த  ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.



புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன  ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!
பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,
”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு.

ராஜீவ் காந்தி கொலையின் போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள்.

யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது இராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கையின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் இராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட இராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை இராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”இராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் இராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமே மிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு.

கருணா, சிங்கள அரசோடு லேசான தொடர்பில் இருந்த போதே, அது குறித்துப் பிரபாகரனிடம் எச்சரித்திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை இராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள இராணுவமும் நம்பிவிட்டது.
பிரபாகரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, இராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட்டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பிலிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் இராணுவம் இதுவரை அடையாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இராணுவத்துக்கே புரியாத புதிர்தான்.

ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றிதழைக் கேட்டு இந்திய அரசு, இராணுவத்தை நச்சரித்து வருகிறது.

பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும்,  அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் இராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது.

இராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிறநாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்படவிருந்தஎபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை  இராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

Tuesday 17 November 2015

இந்தியாவின் உதவி கேட்டு 'க்யூ'வில் நிற்கும் உலக நாடுகள்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, சமீபத்தில் அமெரிக்கவின் 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களையும், அதை தொடர்ந்து இந்தோனேஷியாவின் செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்த உதவி இருந்தது.

அது மட்டுமின்றி 2015 தொடங்கி 2016 வரை என்ற ஓராண்டு கால இடைவெளியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..!

17-1447744079-25-1443170042-04-144135856

இந்தியாவின் உதவி :

பிற நாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவின் இஸ்ரோ புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்தி இருக்கும் நிலையில் மேலும் சில உலக நாடுகள் இந்தியாவின் உதவியை நாடிய படி தான் இருக்கிறது.

17-1447744062-25-1443170041-04-144135856

விண்வெளி தொழில்நுட்பம் :

இந்தியாவுடன் இணைந்து செயற்கைகோள்களை செலுத்துவது மிகவும் சுலபம் என்பதை விட இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தில் தோல்வி என்பதே கிடையாது என்பதற்காகவே பிற உலக நாடுகள் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றனர்.

17-1447744100-25-1443170047-06-143883486

மொத்தம் : 

அப்படியாக இதுவரை மொத்தம் 75 இந்திய செயற்கைகோள்களையும், 53 அந்நிய நாட்டு செயற்கைகோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

17-1447744087-25-1443170044-06-143883486

பட்டியல்:

அந்நிய நாட்டு செயற்கைகோள்கள் என்ற பட்டியலில் அமெரிக்க இந்தோனேஷியா போன்ற நாடுகளை தொடர்ந்து இப்போது சிங்கப்பூரும் இணைய உள்ளது.

17-1447744140-25-1443170056-23-144299305

சிங்கப்பூர் :

வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டின் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ.

17-1447744160-main-qimg-8143da45d170d365

ஜிபிஎஸ் :

சிங்கப்பூரின் செயற்கைகோள்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள ஜிபிஎஸ் சேவைகளுக்காக (GPS Service) விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

17-1447744147-fl02-kiran-kumar-2548586g.

இஸ்ரோ தலைவர் :

இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஏஎஸ் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

17-1447744131-25-1443170053-23-144299304

சேவை :

மேலும் இஸ்ரோ, இதுவரை ஒலிபரப்பு, கல்வி, தகவல் தொடர்பு, அளவியல் சேவை மற்றும் பல என ஆகிய காரணகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிக கவனம் :

முக்கியமாக பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சிரிகைக்கு (Disaster management) அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

17-1447744113-25-1443170048-06-143883486

வெற்றி :

அப்படியாக, ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதில் 95% - 96% வரை வெற்றிகரமாக செயல்பட செயற்கைகோள்கள் உதவிக்கொண்டிருக்கிறது.

நஷ்டம் :

இந்தியாவின் 7,000 கிலோ மீட்டர் நீள கடலோர பகுதிகளில் சரியான மீன்பிடி இடங்களை கண்டறிந்து, மீனவர்களுக்கு உதவி செய்து. ஆண்டுதோறும் சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்டத்தை செயற்கைகோள்கள் தவிர்த்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் தீவிரவாதிகளும் அதன் காரணகர்த்தாவும்

பாரிஸ், பாக்தாக், பெய்ரூட் என ஒரு நாளில் (14-11-2015) தன் மொத்த பயங்கரவாத நடவடிக்கையால் பல நூறு பேர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது அவர்களின் விருப்பம் இல்லாமல்.

உலகம் இன்று மும்பை தாக்குதலின் போதோ, இரட்டை கோபுர தகர்ப்பின் போதோ, செங்கன்யா குண்டு வெடிப்பின் போதோ அடையாத சோகம் பூண்டுள்ளது. ஏனெனில் இன்று சர்வதேச பயங்கரவாத இயக்கங்களே பயப்படும் அளவுக்கு மத்திய கிழக்கில் ஒரு கொலைவெறியுடைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கமாக மாறிவிட்டது அந்த இயக்கம்.

isis_600
ஐ.நா அவைக்கு 70 ஆண்டுகள் வயதாகி விட்டது. பனிப்போர் காலகட்டத்தை கூட புத்திக்கூர்மையுடன் சமாளித்த அந்த அமைப்புக்கு இந்த இஸ்லாமிய ஸ்டேட் தீவிரவாதிகளை சமாளிக்க முடியவில்லை. வெறும் வங்கிக் கணக்கு முடக்கம், பயணம் செய்யத் தடை, பாதுகாப்பு சபையில் தீர்மானம், செல்லும் இடமெல்லாம் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என சொல்வது என ஒன்றுக்கும் உதவாத செயல்களை செய்து கொண்டிருக்கிறது.

காலம் மாறிவிட்டதை உணரவில்லை போலும் இந்த ஐ.நா. தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் நாடே இருக்க வங்கி கணக்கு முடக்கமாம், மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைகள் அத்துமீறி சத்தமில்லாமல் உள்நுழையும் அளவுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்க பயணம் செய்ய தடையாம். இன்னும் டிவிட்டர், பேஸ்புக் என தீவிரவாதிகள் பிராச்சாரம் செய்யும் போது ஐ.எஸ் இயக்கத்தில் சேரக்கூடாதாம்.

எவ்வளவு வேடிக்கை. அமெரிக்கா இலவசமாக மில்லியன் டாலர் கணக்கில் பணம் தருகிறது என்பதற்காக அமெரிக்காவுக்கு எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடுவதும் என மாறிவிட்டது ஐ.நாவின் பிழைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் செல்வ செழிப்பு உள்ளவர்கள். ஆனால் சன்னி பிரிவினர் இன்னும் பழங்குடியினர் போல வறுமையில் வாழ்ந்து வருபவர்கள். அதிகமாக பல நாடுகளில் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களே ஆட்சியில். இதுவே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது. இதில் தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. அமெரிக்கா தனது நாட்டின் தேவைகளுக்குகாக பணக்கார ஷியா முஸ்லீம்களுக்கு ஆதரவு வழங்க, சன்னி பிரிவினர் புறக்கணிக்கப்பட, காழ்ப்புணர்ச்சி ஆரம்பமானது.

ஏற்கனவே மத்திய கிழக்கே தன் தீவிர விசுவாசியான இஸ்ரேல் உடன் பகை போக்கைக் கொண்டுள்ள இரான், சிரியா போன்ற நாடுகளை சமாளிக்க வழி தேடிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இந்தப் பிரிவினை ஒரு வாய்ப்பாக அமைந்தது. ரஷ்யாவை கட்டுப்படுத்த வழி தேடிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் கடற்படை தளம் சிரியாவில் இருப்பதும் சிரியா, இரான் போன்றவை ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடுவதும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அமெரிக்காவின் சென்ட்காம்(CENTCOM)இன் பரவலைத் தடுக்கும் விதமாக ரஷ்யாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதும், அமெரிக்காவை கவலையடைய வைத்தது. மேலும் தென் அமெரிக்கா நாடுகள் பலவும் கம்யூனிசத்தை ஆட்சி முறையாக தேர்ந்தெடுக்க, அமெரிக்காவின் செல்வாக்கு குறைய ஆரம்பிக்க, இறுதியில் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏவை பயன்படுத்தி தன்னைப் பிடிக்காத நாடுகளின் ஆட்சியைக் கவிழ்த்து, தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொம்மை ஆட்சியை நிறுவ ஆரம்பிக்க, ஹியுகோ சாவேஸ் மரணம், அரபு வசந்தம் புரட்சிகள், கடாபி படுகொலை, எகிப்தில் ஆட்சி மாற்றம் என மத்திய கிழக்கில் பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, இறுதியில் சிரியாவில் அந்த முயற்சியை ஆரம்பிக்க, இராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைத்திருக்க ரகசியமாக பயிற்சியளிக்கப்பட்ட அல்-கொய்தாவின் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டது தான் இந்த ஐ.எஸ் அமைப்பு. இது ரகசியமாக அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவைப் பெறுகிறது என தாய் இயக்கமான அல்-கொய்தாவுடன் மோதல். இதுவரை பெரிய அளவில் இஸ்ரேலை தாக்காமல் இருப்பதிலிருந்து இது ஒரளவுக்கு அமெரிக்க ஆதரவைப் பெறுவதை அறியலாம்.

மேலும் இந்த அமைப்பானது அமெரிக்காவின் ஒரு அதிகாரபூர்வமற்ற கருவியாக செயல்படுவதைக் காணலாம். பிரான்ஸ் தனது சக்தி மிக்க ஆயுதங்களையும், போர்க்கப்பலையும் ரஷ்யாவுக்கு விற்பதாக இருந்தது. இதற்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுக்கும் விதமாகத் தான் இந்த பாரிஸ் தாக்குதல் அரங்கேறியிருக்க வேண்டும். மேலும் தன் படைகளை ஆப்பிரிக்காவில் நிலைநிறுத்த எபோலா வைரஸ்ஸைப் பரப்பி, மக்களை காப்பாற்ற என நுழைந்த படை அங்கேயே ராணுவ தளம் அமைத்து தங்கிவிட்டதும் நாம் கவனிக்க வேண்டியது.

இராக், சிரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் ராணுவ நடவடிக்கைகளைக் காணும் போது முறையாக பயிற்சியளிக்கப்படாமல் இந்த மாதிரியான ராணுவ யுக்திகளைக் கையாள முடியாது. அவர்களுக்கு ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை ஏவத் தெரிந்திருக்கிறது. பீரங்கிகளை பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. இத்தனையும் எப்படி சாத்தியம்? உயர் ராணுவ ஆயுதங்களை பயன்படுத்த யார் பயிற்சி அளித்தது?

இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் மூலம் சிரியாவின் ரஷ்யா ஆதரவு அல்-பசாத் ஆட்சியைத் தூக்கி எறிவது, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தை அழிப்பது, ஷியா முஸ்லீம்களின் ஆதரவைப் பெறுவது, இரானை தனிமைபடுத்துவது, மத்திய கிழக்கு நாடுகளில் யூத நாடான இஸ்ரேலை பலப்படுத்துவது, இராக் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது, சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுக்கு மாற்றாக தன் ஆதரவில் ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்குவது என பல கனவுகள், ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்தது. எப்படியாவது சோவியத் ரஷ்யாவை விரட்ட வேண்டும் என்பதற்காக அங்கு போராடிக் கொண்டிருந்த உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஒன்றிணைத்து தாலிபான் இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதனுடன் இணைந்து போரிட்டு சோவியத் ரஷ்யாவை விரட்டியது என வரலாறு சொல்கிறது. உலகமெங்கும் உள்ள பல தீவிரவாதக் குழுக்களின் ஆரம்பம் அமெரிக்கா என அறியவும்.

தன் தோழமை நாடுகளையே உளவு பார்த்ததாகவும், தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்டதாகவும் பல ஆவணங்களை விக்கிலீக்ஸ், எட்வர்டு ஸ்நோடன் போன்றவர்கள் வெளியிட்டதும் உலகறியும். அந்த அளவுக்கு ஏகாதிபத்ய வெறிகொண்ட நாடாக அமெரிக்கா நிலவிவருகிறது.

அமெரிக்கா என்றென்றும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது. ரஷ்யா தனது பழைய ராணுவ ஒப்பந்தங்களான வார்சா உடன்படிக்கையை கைவிட்டாலும் அமெரிக்கா இன்னும் அந்த நேட்டோ உடன்படிக்கையை கைவிட்டதாக இல்லை. சோவியத் யுனியன் சிதறலைத் தொடர்ந்து ரஷ்யா பல பாடங்களை கற்றுக்கொண்டு தனது மிகப்பெரிய உளவு அமைப்பான கே.ஜி.பி(KGB) ஆகியவற்றை கலைத்துவிட்ட பின்பும் அமெரிக்கா விடுவதாக இல்லை.

உலகில் ஏற்பட்ட பல உள்நாட்டு போர்களுக்கும், யுத்தங்களுக்கும் முக்கிய காரணம் அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. சீனா அணு ஆயுதம் வைத்திருந்தால் ஏன் அமெரிக்காவிற்கு வலிக்கிறது? இரான், சிரியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலோ, அல்லது ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சினை? இந்தியா-பாக்கிஸ்தான் மோதிக்கொண்டால் அமெரிக்காவிற்கு என்ன கவலை? உலகமெங்கும் தன் ராணுவத்தையும், ஆயுதங்களையும், கப்பற்படையையும் குவித்து வைக்க அமெரிக்காவிற்கு என்ன உரிமை உள்ளது?

“அதுவும் ஒரு நாடு தான்; இராக்கும் ஒரு நாடுதான். அமெரிக்கா ஒன்றும் உலகமில்லை. 196 நாடுகள் சேர்ந்ததே உலகம். அந்த அந்த நாட்டின் எல்லை, பரப்புக்கள் அவர்களுக்குரியது. மேலும் அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கவேண்டும். சும்மா எல்லா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது” போன்ற பாடங்களை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும் .

உலகில் அதிக பகைவர்கள் உள்ள நாடு அமெரிக்கா என்றே சொல்ல வேண்டும். இரான், சிரியா, கியூபா, வெனிசுலா, பொலிவியா, சீனா, ரஷ்யா என பட்டியல் நீளுகிறது. இவை அனைத்தும் மறைமுகமாக அமெரிக்காவின் மீது பகைமை கொண்ட தேசங்களாகும். எந்த விவகாரங்களிலும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை உடையவை. இது போதாது என அமெரிக்காவின் எண்ணெய் வள பேராசையால் பகைவர்களாக மாற்றப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாதக் குழுக்கள் என இந்தப் பட்டியல் நீளுகிறது.

ஒன்று மட்டும் அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி பல தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி விட்டு, அதை எதிர்க்க மற்ற தீவிரவாத குழுக்களுக்கு கொம்பு சீவி விடுவதுமாக, தொடர்ந்தால் நிச்சயம் அமெரிக்கா ஒரு பல்முனை பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதன் வெள்ளோட்டம் தான் பாரிஸ் தாக்குதல். கொஞ்சம் தன் நாட்டு விவகாரங்களை மட்டும் கவனித்து வந்தால் நலம். இல்லை நான் சர்வதேச போலிஸ் என பிதற்றிக்கொண்டு திரிந்தால் நிச்சயம் ஒரு பிடிபடாத திருடன் தோன்றுவான். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் ஏகாதிபத்ய அமெரிக்காவை.

– நேதாஜிதாசன்

26 ஆண்டுகளுக்கு பின் 'விழித்துள்ள' பிளாக் ஹோல்..!

மாபெரும் அண்டவெளி புதிர்களில் ஒன்று தான் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள். உள் சென்ற ஒளி கூட வெளியேற முடியாத ஒற்றை வழிப்பாதையான பிளாக் ஹோல்களின் வலுவான ஈர்ப்புச் சக்தியானது கற்பனைக்கு அடங்காததாகும். 

1*XJ68DBhH_oJIBEHih98IUA.jpeg
Add caption

கண்களுக்கு புலப்படாத பிளாக் ஹோல்களின் இருப்பை தாக்கங்கள் மூலமாகவே உணர்ந்து கொள்ள முடியும் அதனால் தான் இவைகளை கருங்குகுழி என்று அழைகின்றனர். அந்த அளவு ஆபத்தான பிளாக் ஹோல்களில் ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விழித்து கொண்டுள்ளதை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

16-1447650986-1.jpg

பிளாஸ்மா வெடிப்பு : 

சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள பிளாக் ஹோல் ஒன்று விண்வெளியில் மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

Hyperspace.jpg

அளவு :

மேலும் அந்த வெடிப்பானது ஒளியின் வேகத்தோடு ஒப்பிடும் அளவு நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

16-1447650990-3.gif

பதிவு : 

மிகவும் அரிதான இந்த செயலின் நம்பமுடியாத காட்சிகளை நிகழ்விற்கு பின், விண்வெளி வீரர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

16-1447650991-4.jpg

பகுதி : 

வி404 சிக்னி (V404 Cygni) என்ற நட்சத்திர அமைப்பின் ஒரு பகுதி தான் இந்த பிளாக் ஹோல் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

16-1447650993-5.jpg

12 மடங்கு :

மேலும் இந்த குறிப்பிட்ட பிளாக் ஹோல் ஆனது சூரியனை விட 12 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

16-1447650999-30-1443585792--85199721-c0

46 க்வாட்ரில்லியன் மைல்கள் : 

மேலும் இந்த பிளாக் ஹோல் ஆனது பூமியில் இருந்து சுமார் 46 க்வாட்ரில்லியன் மைல்கள் (quadrillion miles) தொலைவில் உள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

16-1447651012-30-1443585807-black-hole-i

அமைதி : 

கடந்த சில ஆண்டுகளாக தனது நட்சத்திர அமைப்பில் இருக்கும் நட்சத்திரங்களிடம் இருந்து பிளாஸ்மாக்களை அமைதியாக உறிஞ்சு கொண்டுருந்துள்ளது.

16-1447650995-8.jpg

வெப்ப வாயு : 

விளைவாக பிளாக் ஹோல் தனை சுற்றி அளவுக்கு அதிகமான வெப்ப வாயு சுருளாயமைந்து (hot gas spiraled) கொண்டதால் வெடிப்பை நிகழ்த்தியுள்ளது.

16-1447650996-9.jpg

பிளாக் ஹோல் ஜெட் : 

இது போன்ற வெடிப்பை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிளாக் ஹோல் ஜெட் (black hole jet) என்று குறிப்பிடுவார்கள்.

16-1447651005-30-1443585797-article-1277

பாய்ச்சசப்பட்டன : 

அந்த வெப்பமான பிளாஸ்மாவில் வெடிப்பில் இருந்து ரேடியோ அலைகள், எக்ஸ்-ரே ஒளி, மற்றும் புலப்படும் ஒளி பாய்ச்சசப்பட்டன.

16-1447651007-30-1443585799-back-hole-ga

தொலைநோக்கி : 

இந்த வெடிப்பானது மிகவும் பிரகாசமாக புலப்படும் என்பதால் இதை பூமியில் இருந்து கொண்டு 14 இன்ச் தொலைநோக்கி மூலம் கூட பார்க்க முடியும் என்று கூறியுள்ளது ஆக்ஸ்போர்டு அறிவியல் வலைப்பதிவு பல்கலைக்கழகம்.

16-1447651010-30-1443585806-black-hole.j

செயற்கைகோள் எச்சரிக்கை : 

விண்வெளி வீரர்கள் இந்த பிளாக் ஹோல் வெடிப்பின் ஆரம்பத்தை தவறவிட்டனர் என்பதும், வெடிப்பில் இருந்து வெளியேறிய எக்ஸ்-ரே தாக்கத்தினை பதிவு செய்து செயற்கைகோள் ஒன்று எச்சரிக்கை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு : 

எச்சரிக்கை கிடைத்ததும் அனைத்து வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனமும் அதன் மீது திரும்பி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

16-1447651019-30-1443588190-supermassive

சம்பவம் : 

சுமார் 7800 ஆண்டுகளுக்கும் முன் இதே போன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

16-1447650998-15.jpg

வெளிப்பாடு : 

வி404 சிக்னி நட்சத்திர அமைப்பு 1989, 1956, மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் சில வெளிப்பாடுகளை நிகழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 நாட்கள் : 

மேலும் இந்த பிளாக் ஹோல் இன்னும் 30 நாட்களுக்கு பிளாஸ்மா வெடிப்பை நிகழ்த்திக் கொண்டே இருக்கும் என்றும் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 நாட்கள் கழித்து இந்த பிளாக் ஹோல் மீண்டும் பழைய நிலைக்கு அதாவது அமைதியான தூக்கத்திற்க்கு சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, இது போன்ற பிளாக் ஹோல் ஜெட் சம்பவங்களை சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

16-1447651003-30-1443585795-652349main-a

புரிதல் : 

அதன் மூலம் தான் நமது பால்வெளி மண்டலம் பற்றிய அதிகப்படியான புரிதலை பெற முடியும் மற்றும் வருங்கால நிகழ்வுகளை அதிகம் கணிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நடுப்பகுதி : 

நமது பால்வெளி மண்டலத்தின் நடுப்பகுதியிலும் ஒரு மாபெரும் பிளாக் ஹோல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் பதில்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரமும் பின்வருமாறு,

இனப்படுகொலையும் நாமும் 
 
எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார்.

அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது.  முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார்.
உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார்.

காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
பல மக்கட் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார்.
அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை.

எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வெவற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம்.

அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்பட வேண்டியது. 

உண்மையும் நல்லிணக்கமும் 

மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது.

எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது.
உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி உருவாகும்?

உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது. முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான் நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்?

எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி 

அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.
இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன்.

சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1,33,000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன்.
ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம்.

எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு.

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும் 

அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை.
நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்களே, எனது கட்சி.

அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும்.

நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது.
அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை.

எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச் சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான்.

அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை.

அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன்.

எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும்.

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது?
பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள், அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள், பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும்.

தேர்தல்கால அறிக்கைகள் 

அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை.

ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில் நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது?

அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது.

இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ ரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம்.

அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம் 

நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ ரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் - “நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்” என்றார்.

பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன்.
கௌரவ ரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது “இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்” என்பதே அது.

அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம்.

நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன்.

அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ ரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன்.

ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ ரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார்.

நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை. 

கௌரவ ரணிலும் நம்மவர்களும் 

அதன் பின் கௌரவ ரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார்.

அதையுந் தாண்டி “விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்” என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோ, கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை.

பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து “நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை.

இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ ரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.” என்றேன்.

இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா?

பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில், கௌரவ ரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையது, உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான் 

மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு,
அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு “இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்” என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாண  சபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு 

மேலும் வடமாகாண சபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன்.
அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள், வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து,

வடமாகாண சபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வெவர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாண சபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அரசியல் தீர்வு பரம இரகசியம் 

மேலும் வடமாகாண சபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.

அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
உள்ள+ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள+ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது.

செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது.

தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு?

மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு?

பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் “நான் ஊமை” என்று கூறினேன்.

அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது.

நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்?

பாராளுமன்றத் தேர்தலும் நாமும் 

ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை.

அவ்வாறு இருந்திருந்தால், நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.
கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல.

ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது.
மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் “நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்பது.

இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்க, அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது.

ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம்.
கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் 

பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும்.

சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும்.

கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.

மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு.

வடமாகாண சபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல.

இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம் தெரிவித்து வந்துள்ளேன்.

ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்து,

எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன்.

ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது.

எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Sunday 15 November 2015

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை

2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.

அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

01.ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் இறுதிநிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள்;. இது தடுப்பில் இருந்து வந்தவர்கள் மீது தமிழ் மக்களுக்குள்ள அன்பை வெளிகாட்டுவதாயுள்ளது.
02.அதிக தொகை அரசியல் பிரமுககர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரேயொரு அரசியல்வாதி -திருமதி பத்மினி சிதமம்பரநாதன் -மட்டும் இடுகாடு வரை சென்றிருக்கிறார். மற்றவர்கள் இடையிலேயே சென்றுவிட்டார்கள் என்று தமிழ் மிரர் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்;.

03.தமிழினியின்; தாயாhருடைய வீடு அதாவது இறுதி நிகழ்வு நிகழ்ந்த வீடு கீழ்மத்தியதர வர்க்கத்துக்குரிய குறைந்த வளங்களுடனேயே காணப்பட்டது.

04.தமிழினியின் ஒரு சகோதரி நோர்வேயில் வசிக்கிறார். எனினும் அவருடைய குடும்பத்தின் நிதி நிலை அப்படியொன்றும் பெரிய செழிப்பாகக் காணப்படவில்லை. அதாவது தமிழனி புலிகள் இயக்கத்தில் பெற்றிருந்த முதன்மையைப் பயன்படு;த்தி அவருடைய குடும்பம் தன்னை வுளர்த்துக் கொள்ள முற்படவில்லை. அதுமட்டுமல்ல அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னரும் அவருடைய குடும்பத்திற்கு போதிளவு உதவிகள் கிடைத்திருக்கவில்லை.
05. அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னர் அவரை அரசியல் பிரமுகர்கள் என்று கூறத்தக்கவர்கள் பெரும்பாலும் சந்தித்திருக்கவில்லை.

06. அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அரசியற் பிரமுகர்கள் எவரும் அவரை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்திருக்கவில்லை.

07. இறுதிக்கட்டத்தில் அவருக்குரிய மருத்துபவச் செலவுக்காக பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதைத் திரட்டுவதற்கு அவருடன் நெருக்கமான சிலர் முயற்சித்திருக்கிறார்கள். நோர்வேயைச் சேர்ந்த ஒரு மகளிர் அமைப்பும் ஒரு இணையத்தளமும் சில தனிநபர்களும் நிறுவனங்களும் உதவியுள்ளன.

08. நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும், “எனது மகள் ஒரு பயங்கரவாதி” என்ற படத்தைத் தயாரித்த ஒரு நோர்வீஜிய பெண் திரைப்படவியலாளரும் தமிழினிக்கு தனிப்பட்டமுறையில் உதவியுள்ளார்கள்.

09. அவருடைய சிகிச்சைக்குத் தேவையான நிதியைத் திரட்ட முற்பட்டபோது ஒரு பகுதியினர் உதவியிருக்கிறார்கள். ஒரு பகுதியினர் மறுத்திருக்கிறார்கள். அவர் சயனைட் அருந்தாமல் சரணடைந்தது ஒரு வீழ்ச்சி என்ற தொனிப்படக் குற்றம் சாட்டும் ஒரு தரப்பினர் அவருக்கு உதவிகள் எதையும் செய்ய விரும்பவில்லை.

10.அவருடைய இறுதி நிழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் மலரஞ்சலி செலுத்தியிருந்தது. இது ஜனவரி 08 இற்குப் பின்னரான ஒரு புதிய தோற்றப்படாகும்.
11.செஞ்சோலை படுகொலை மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் தமிழினியின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் தடுப்பில் இருந்து வந்தபின் அவர் தனது இறந்தகாலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்துகொண்டார் என்பது எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. அவரைப் போன்ற அரசியல் விளக்கமுடைய , உயர் பிரதானியாக இருந்த ஒருவர் தனது இறந்த காலத்தைக்குறித்து மனம் திறந்து பேசும் போது அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்திருக்கும். ஆனால் தமிழினி அவ்வாறு மனம் திறந்து பேசமுன்பே இளவயதில் இறந்துபோயுள்ளார். அண்மையிவ் வெளியான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்டது பாடசாலை மாணவிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை யாவும் தமிழினியின் மறைவின் பின் அவருடைய இறுதி நிகழ்வில் அவதானிக்கப்பட்ட மற்றும் அவருடன் பரிவோடு பழகியவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும்.
அவர் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டப் பிரதானியாக இருந்தவர். ஆதிக பிரபல்யத்தோடுமிருந்தவர். எனவே அவருடைய பிரிவு, அதிகரித்த ஊடக அவதானிப்பைப் பெற்றது ஆனால் அவரைப் போல பிரபல்யம் அடைந்திராத தடுப்பிலிருந்து வந்த முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களின் கதி எவ்வாறுள்ளது? அவர்களுக்கு யார் உதவுகிறார்கள்?

அவர்களுக்கு யார் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்கள்? இலங்கை அரச புலனாய்வுத்துறை தவிர வேறு எந்த ஒரு தமிழ் அமைப்பாவது அவர்களுடன் உறவை பேணுகிறதா? புடைத்துறைப், புலனாய்வாளர்களிடம் தடுப்பால் வந்தவர்கள் பற்றிய துலக்கமான புள்ளிவிபரங்கள் இருக்க முடியும். இதுதவிர வேறு எந்த தமிழ் அமைப்பிடமாவது அல்லது கட்சியிடமாவது இது தொடர்பான புள்ளிவிபரங்கள் உண்டா? நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருந்து தனிப்பட்ட முறையில் கிடைக்கும் உதவி மற்றும் ஆறுதலைத் தவிர நிறுவனமயப்பட்ட உதவிகள் அல்லது ஆறுதல் ஏதும் அவர்களுக்குக் கிடைக்கின்றதா? இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? தமிழ்க்கட்சிகளா? மாகாணசபையா? சிவில் அமைப்புக்களா, மதநிறுவனங்களா? தொண்டுநிறுவனங்களா? புத்திஜீவிகளா, ஊடகங்களா? படைப்பாளிகளா? யார் பதில் சொல்வது;?

2009 மே இக்குப் பின் நோர்வே ஒஸ்லோப் பல்கலைக்கத்தைச் சேர்ந்த கலாநிதி சர்வேந்திரா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பாப்பரசர் தனது பொறுப்புக்களைக் துறந்ந்துவிட்டு திருச்சபையைக் கலைத்துவிட்டால் குருவானவர்களின் நிலை எப்படியிருக்கும்? அப்படியொரு நிலைதான் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது என்று.

அது உண்மைதான். புலிகள் இயக்கம் ஒரு நடைமுறை அரசை நிர்வகித்தது. தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக அது காணப்பட்டது. அதன் இயக்க உறுப்பினர்களின் இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் கௌரவத்துக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த இயக்கம் தன்னாலியன்ற அளவுக்குச் செய்து கொடுத்திருந்தது. ஆனால் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு அதன் உறுப்பினர்கள் அரசியல் அனாதைகள் அல்லது பாவித்த பின் கழற்றி எறியப்பட்ட உதிரிப்பாகங்களை போலாகிவிட்டனர். ஒரு காலம் அதிகாரத்தோடு ஆளணிகள், வாகன வளங்களோடு மதிக்கப்படும் ஒரு நிலையிலிருந்த பலரும் 2009 மேக்குப் பின் தடுப்பால் வநதவர்கள் என்ற ஒரு புதிய வகுப்பாக மாறினர்..

அரச புலனாய்வுத்துறை அவர்களை விடுதலை செய்த பின்னரும் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தது. இதனால் இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் மிகவும் பாதுகாப்பிழந்த ஒரு பிரிவாக அவர்கள்; மாறினர். ஏந்த ஒரு சமூகம் அவர்களை ஒரு காலம் மதித்துப் போற்றயதோ அந்த சமூத்தின் ஒரு பகுதியினர் அவர்களை சந்தேகிக்கலாயினர். ஒரு பகுதியின் அவர்களை நெருங்கி வரவே அஞ்சினர். கடந்த தேர்தலின் போது போட்டியிட முயற்சித்த தடுப்பிலிருந்து வந்தவர்களில் ஒரு பகுதியினரை எல்லாக் கட்சிகளுமே சந்தேகித்தன..

தடுப்பிலிருந்து வந்தவர்கள் முக்கியமாக மூன்று சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதலாவது அரச புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பும் இடையீ+டுகளும.; இரண்டாவது அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் தடுப்பிலிருந்து வந்த இணைந்து கொள்வது. மூன்றாவது அரசியல் விலங்குகுளை எதிர்கொள்வது.

முதலாவது – அரச புலனாய்வுத்துறையினரிடமிருந்து வரக் கூடிய நெருக்கடிகள.; அவர்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்பட்டார்கள். அடுத்தகட்டம் எப்படியிருக்கும் என்ற நிச்சயமின்மை எல்லாருக்கும் முன் விகாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. ஜனவரி 8 இற்குப் பின் இந்த நிலைமைகள் சற்று மாறி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தொடர்கிறதுதான் என்றாலும் அது அதிகபட்சம் மெருகானதாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தவிதமான ஆபத்து இலங்கைத் தீவுக்குள் மட்டும்தானுண்டு என்பதல்ல. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் கூட இந்த விதமான அச்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டு. முன்னால் புலி இயக்கத்தவர்களை இந்திய புலனாய்வுக் கட்டமைப்பும் பின் தொடர்கிறது. அதேசமயம் மேற்கத்தேய புலனாய்வுக் கட்டமைப்புக்கள் அதை மிகவும் நாகரிகமான, மெருகான விதங்களில் முன்னெடுக்கின்றன. போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது தடுப்பிலிருந்து வந்தவர்களும் விசாரிக்கப்படலாம் என்ற ஒரச்சம் எங்குமுள்ளது. தமிழ்த்தரப்பு போர்க்குற்ற விசாரணைகளை கோரும்போது அந்த விசாரணைகள் தடுப்பிலிருந்து வந்தவர்களின் மீதும் பாயும் என்ற ஒரு அச்சுறுத்தலைப் பேணுவதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை அடக்கி வாசிக்கச் செய்யலாம் என்பது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது.. எனவே, தடுப்பிலிருந்து வந்தவர்களுக்கு இலங்கைத்தீவில் மட்டும்தான் பயமுண்டு என்பதல்ல. உலகுபூராகவும் அந்தப் பயம் உண்டு.

இரண்டாவது அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் திரும்பி வருவது. தடுப்பில் இருந்து வந்த ஒரு பெண் சொன்னார் தனது வீட்டு மதிலுக்கு அருகே நின்ற ஒரு பப்பா மரத்தில் பழம் பிடுங்குதற்கக கதிரையை வைத்து மதிலில் ஏறியிருக்கிறார். வீட்டிலிருந்த தயார் கத்தினாராம் “இறங்கு இறங்கு பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தால் என்ன சொல்லுவினம்” என்று. அந்தப் பெண் தனது நண்பர்களிடம் சொன்னாராம் “நாங்கள் தென்னைமரம் ஏறி இளனி பிடுங்கினாங்கள்.; இஞ்ச வந்து மதில் ஏறிப் பப்பாப்பழம் பிடுங்க சமூகம் ஒரு மாதிரிப் பார்க்கிறது ஏன்று.

இது ஒரு குரூரமான யதார்த்தம். தடுப்பில் இருந்து வீடு திரும்பும் பலருக்கும் வீடு புரட்சிகரமான ஒரு புகலிடமாக இல்லை. அவர்களில் பலர் இயக்கத்துக்குப் போகும் போது இருந்த அதே வீடுதான் அப்படியே மாறாமல் இப்பொழுதம் இருக்கிறது. அங்கு சாதியுண்டு, சமயம் உண்டு, மூட நம்பிக்கைகள் உண்டு. பால் அசமத்துவமுண்டு. இல்லத்துவன்முறைகள் உண்டு. ஆக மொத்தம் போரிலிருந்து எதையும் கற்றுத் தேறாத வீடுகளே அதிகம். ஆதாவது அரசியல் மயப்படுத்தப்படாத வீடுக்கள், அரசியல் மயப்படுத்தப்படாத கிராமங்கள் இந்த வீடுகளும் கிராமங்களும் தடுப்பிலிருந்து வருபவர்களை எப்படி எதிர்கொள்ளும?;. குறிப்பாக பெண் பிள்ளைகளே இதில் கூடுதலாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.

2009 மேக்குப் இற்குப் பின் பிரபல்யமடைந்துவரும் எழுத்தாளர்களில்; குறிப்பாக தடுப்பு முகாம் அனுபவங்களை அதிகம் வெளிப்படுத்திய ஓர் எழுத்தாளர் இப்பொழுது ஐரோப்பாவில் வசிக்கிறார். இவர் தடுப்பில் இருந்து வந்த பின் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பின்வருமாறு கூறியிருக்கிறார். “சாதாரண சனங்கள் எங்களோடு அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால் அரச அதிகாரிகள்தான் அவமதிக்கிறார்கள்.ஒருகாலம் எங்களுடைய அதிகாரத்திற்குக் கீழ் இருந்த அதிகாரிகளிடமே இப்பொழுது எல்லாத் தேவைகளுக்கும் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது” என்று.

பெரும்பாலான ஆயுதமேந்திய இயக்கங்கள் மக்களை ஆட்சேர்ப்புத் தளங்களாகவே பார்த்தன. மிகக் குறைந்தளவு சனங்களே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். போதிய பட்டறிவு உண்டுதான். ஆனால் அரசியல்மயப்படுத்தப்படவில்லை. ஈழத்தமிழர்கள் மிகக்குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆனால் அதேசமயம் ஆகக்கூடியளவு அரசியல் விலங்குகளைக் கொண்ட ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள்.

மூன்றாவது அரசியல் விலங்குகளை எதிர்கொள்வது. இங்கு அரசியல் விலங்குகள் என்ற வார்த்தை அரிஸ்ரோட்டல் கூறியதைவிட விமர்சனபூர்வமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினராகக் காணப்படும் படித்த நடுத்தவர்க்கத்தில் ஒரு பகுதியினரையும் அரசியல் வேட்கை கொண்ட பிரிவினரையும் இது சுட்டுகிறது. இதற்குள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மத குருக்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் அடங்குவர். அரசியலை அதிகம் விளங்கி வைத்திருப்பவர்கள் போலத் தோன்றுமிவர்கள் தமது அரசியல் இலக்குகளுக்காக எதையும் இதுவரையிலும் அர்ப்பணித்ததில்லை. மிகப்பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றதனால் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறிய பலரும் இதில் அடங்குவர். தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு , அல்லது தமது பிள்ளைகளை போதியளவு படிப்பித்து உயர்நிலைகளில் பத்திரப்படுத்திவிட்டு மிகத் தீவிரமாக அரசியல் கதைப்பவர்கள் இவர்கள். 2009 மே க்கு முன்பு வரை படுகோழைகளாக இருந்த இவர்களிற் பலர் இப்பொழுதும் வீரர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தமது இறந்தகாலத்தைக் குறித்த குற்றவுணர்ச்சியே இவர்களை ஆட்டுவிக்கிறது. அக்குற்றவுணர்ச்சியிலிருந்து நீதியுணர்ச்சி ஊற்றெடுத்திருந்தால் அவர்கள் அரசியல் விலங்குளாக மாறியிருந்திருக்கமாட்டார்கள். மாறாக அவர்களுடைய குற்றவுணர்;ச்சியை மறைக்க அவர்களில் பலர் நீதிபதிகளாக மாறிவிட்டார்கள். குற்றவுணர்ச்pயின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு.

மிகக் குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் மிகக் கூடுதலான அளவு அரசியல் விலங்குகள் பெருகிவிட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்காக தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்க, ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை அரசியல் விலங்குகளே இட்டு நிரப்புகின்றன. தடுப்பிலிருந்து வருபவர்களைத் தமது தராசுகளில் வைத்து நிறுக்கும் பலரும் இந்த வகையினர் தான்.
தமிழினியை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்காதவர்களும் இவர்கள்தான். துமிழினி தடுப்பில் இருந்து வந்தபொழுது ஊகச் செய்திகளை உருப்பெருக்கிப் போட்டவர்களும் இவர்கள்தான். ஆனால் தமிழினியின் இழப்பை வைத்து பிழைப்பை பெருக்கிக் கொண்டவர்களும் இவர்கள்தான்.

தடுப்பிலிருந்து வருபவர்களை மட்டுமல்ல 2009 இற்குப் பின் நலன்புரி நிலையங்களிலிருந்து வந்தவர்களையும் மேற்படி அரசியல் விலங்குகள் தமது நியாயத்தரசுகளில் வைத்து நிறுத்தார்கள். ஆனால் கேவலம் என்னவென்றால் நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தமது உறவுகளை அல்லது நண்பர்ளை போய்ப்பார்த்தவர்கள் மத்தியில் இவர்களை அநேகமாக் காண முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களை அவர்களுடைய உறவினர்களான சாதாரண சனங்கள் வாஞ்சையோடு வந்து சந்தித்தார்கள். வகை தொகையாகச் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து விருந்தோம்பினார்கள். ஆனால் இப்பொழுது தீவிர தேசியர்களாகக் காட்சியளிக்கும் பலரும் நலன்புரி நிலையங்களின்; பக்கம் வரவேயில்லை. இவர்களு ள் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் பிரபல மூத்த படைப்பாளிகளும் அடங்குவர்.
போதிய அரசியல் விளக்கமற்ற அப்பாவிச் சனங்கள் நலன்புரி நிலையங்களுக்குத் தவிப்போடு ஓடி வந்தார்கள். தடுப்பிலிருந்த வருபவர்களை ஒப்பீட்டளவில் பரிவுடன் அணுகுவதும் அவர்கள்தான். ஆவர்களுடைய மூளைகள் அதிகம் அரசியல் சித்தாந்தங்களால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களுடைய இதயமோ பரிசுத்தமான அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறது.

இதுதான் நிலமை. தடுப்பிலிருந்து வந்தவர்களும் 2009 மே18 இற்குப் பின் வன்னியிலிருந்து வந்தவர்களில் ஒரு தொகுதியினரும் எதிர்கொள்ளும் முப்பெரும்சவால்கள் இவை. தமிழினியும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டவர்தான். அவரைப்பற்றி தீர்ப்பெழுதிய பலரும் அவரைத் தடுப்பில் சென்று பார்க்கவில்லை. வைத்தியசாலைக்கும் சென்று பார்க்கவில்லை. தடுப்பில் இருந்தபோது அவருக்குச் சுவையாகச் சமைத்துக் கொண்டுபோய் கொடுப்பதற்கு யாருமற்ற நிலமைகளே அதிகமிருந்ததாக அவருடன் தடுப்பில் இருந்த ஒரு மருத்துவர் சொன்னார்.
2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.

தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.