ஆக்கிரமிப்புக்கு அதிகாரமளிக்கின்றது ஐப்பானின் அமைச்சரவை !! பிராந்திய ரிதியில் பதட்டம் !!!
அந்நிய மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய வகை சட்டமூலங்களுக்கு ஜப்பான் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் நேற்று நடைபெற்ற ஜப்பான் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமைச்சர்கள் பரிபூரண ஆதரவு வழங்கியுள்ளனர். இதேவேளை ஐப்பானின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
2ஆம் உலகப் போருக்கு பின்னர் அந்நிய மண்ணில் ஜப்பான் இராணுவ
நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டதில்லை. இந்நிலையில், அந்நிய மண்ணில்
முப்படைகளையும் ஒருங்கிணைத்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் 2
சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்ற என்று கூறப்படாத நிலையில் காலத்தின் தேவை கருதி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள சீனா, வரலாற்றுத் தவறுகளிடமிருந்து ஜப்பான் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளதுடன் தேவையற்ற இராணுவ நடவடிக்கைகளை முறியடிக்க தங்களால் முடியும் என்றும் கூறி எச்சரித்துள்ளது.
இந்த முடிவுகளும் பேச்சுக்களும் பிராந்திய ரீதியில் நாடுகளிடையே பெரும் பதட்டத்தை தோற்றுவித்துள்ளது
அந்நிய மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய வகை சட்டமூலங்களுக்கு ஜப்பான் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் நேற்று நடைபெற்ற ஜப்பான் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமைச்சர்கள் பரிபூரண ஆதரவு வழங்கியுள்ளனர். இதேவேளை ஐப்பானின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்ற என்று கூறப்படாத நிலையில் காலத்தின் தேவை கருதி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள சீனா, வரலாற்றுத் தவறுகளிடமிருந்து ஜப்பான் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளதுடன் தேவையற்ற இராணுவ நடவடிக்கைகளை முறியடிக்க தங்களால் முடியும் என்றும் கூறி எச்சரித்துள்ளது.
இந்த முடிவுகளும் பேச்சுக்களும் பிராந்திய ரீதியில் நாடுகளிடையே பெரும் பதட்டத்தை தோற்றுவித்துள்ளது
No comments:
Post a Comment