Tuesday, 13 October 2015

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC”! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கப்படும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான்.

இந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன், வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.
பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் கொலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.

இந்த சிக்கனை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்து விடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. இதனை உண்பவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மூளை செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது.


நன்றி: பி.பி.சி

Monday, 12 October 2015

சிரியாவும், உலக போருக்கான போர்முரசும்


Bill Van Auken

காஸ்பியன் கடலில் 900 மைல்களுக்கும் அதிக தூரத்தில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பல்களிலிருந்து சுமார் 26 கப்பற்படை ஏவுகணைகளை வீசி, சிரியாவில் ரஷ்யா அதன் முதல் வார விமானதாக்குதல்களை நிறைவு செய்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டினதும் ஆளும் வட்டார விவாதங்களில் இன்னும் அதிக அபாயகரமான மோதல் குறித்த மற்றும் உலக போர் குறித்த, அச்சுறுத்தல்களின் மற்றும் எச்சரிக்கைகளின் தீவிர போர்முரசு மேலோங்கியுள்ளது.



சிரியாவில் குண்டுவீச பிரெஞ்சு போர்விமானங்களுக்கு உத்தரவிட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹலாண்ட், அந்நாட்டின் சம்பவங்கள் ஒரு "முழுப் போராக" வடிவெடுக்கக்கூடும், அதிலிருந்து ஐரோப்பாவே கூட "தப்பவியலாது" என்று புதனன்று ஐரோப்பிய சட்டவல்லுனர்களை எச்சரித்தார்.

ரஷ்ய போர்விமானங்கள் துருக்கிய வான்எல்லைக்குள் விலகி போயிருந்ததாக கூறப்படும் சம்பவங்களை பற்றிற்கொண்ட துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கையின் ஐந்தாவது ஷரத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், “துருக்கி மீதான ஒரு தாக்குதல் என்பது நேட்டோ மீதான ஒரு தாக்குதலாகும்,” என்று அறிவித்தார். அந்த ஷரத்து துருக்கி மீதான அல்லது வேறெந்தவொரு அங்கத்தவ அரசின் மீதான ஒரு தாக்குதலுக்கு எதிராக ஓர் ஆயுதமேந்திய விடையிறுப்புக்கு, அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டணியின் அங்கத்தவர்களைக் கடமைப்பாடு கொள்ளச் செய்கிறது.

சிரியாவை சூறையாடியுள்ள ISIS மற்றும் அல்-நுஸ்ரா முன்னணி போன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரதான ஆதாரங்களில் ஒன்றான துருக்கிய அரசாங்கம், ஈராக்கில் உள்ள குர்திஷ் முகாம்கள் மீது குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியும் மற்றும் சிரிய எல்லைக்குள்ளே பறக்கும் சிரிய விமானங்களைச் சுட்டுவீழ்த்தியும், அதன் சொந்த அண்டைநாடுகளின் வான்எல்லைகளை அது வழமையாக மீறிவருகிறது.

உயர்மட்ட நேட்டோ அதிகாரிகளும், மாஸ்கோ மீதான போர்வெறியூட்டல் கண்டனங்களுக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார்கள். நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், துருக்கிய வான்எல்லைக்குள் குற்றகரமான ரஷ்ய ஊடுருவல் என்பது "ஒரு தற்செயலான சம்பவமாக தெரியவில்லை" என்று குற்றஞ்சாட்டினார். அவர் தொடர்ந்து, “சம்பவங்களும், எதிர்பாரா நிகழ்வுகளும் அபாயகரமான சூழலை உருவாக்கிவிடும். ஆகவே அதுபோல மீண்டும் ஏற்படாதவாறு உறுதிப்படுத்தி வைப்பது முக்கியமாகும்,” என்று எச்சரித்தார்.

செவ்வாயன்று வாஷிங்டனில் பேசுகையில், இத்தாலியின் நாப்லெஸின் நேட்டோ கூட்டு நேசப்படை கட்டளையகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள மார்க் ஃபேர்குஷன், ஆர்டிக் வட்டாரத்தில் தொடங்கி மத்திய தரைக்கடல் பகுதி வரையில் "எஃகு வளைவை" (arc of steel) கட்டமைத்து வருவதற்காக ரஷ்யாவை கண்டித்தார். வின்ஸ்டன் சேர்ச்சிலின் 1946 “இரும்புத்திரை" உரையிலிருந்து ஆழ்ந்து ஆராய்ந்து எடுக்கப்பட்ட இந்த சாராம்சம், சக்திகளின் நிஜமான உறவுகளைத் தலைகீழாக திருப்புகிறது. இது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் வாஷிங்டனும் நேட்டோ கூட்டணியும் தயவுதாட்சண்யமின்றி ரஷ்யாவைச் சுற்றிவளைத்ததை மூடிமறைக்கிறது.

ரஷ்யாவை நேட்டோ முகங்கொடுக்கும் "மிகவும் அபாயகரமான அச்சுறுத்தலாக" வர்ணித்து, அட்மிரல் ஃபேர்குஷன், நேட்டோ மாஸ்கோவை நோக்கி அதிகரித்தளவில் ஆக்ரோஷமான தோரணையை ஏற்க அழைப்புவிடுத்தார். “நிஜமான உலக நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு உகந்தவிதத்தில்" இராணுவப் படைகளை நிலைநிறுத்தவும் மற்றும் கூட்டணியின் "போர் புரியும் திறன்களை" மெருகூட்டவும் அவர் பரிந்துரைத்தார்.

முன்னாள் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் கண்ணோட்டங்களும் ஐயத்திற்கிடமின்றி அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் பரந்த இராணுவ மற்றும் உளவுத்துறை கூட்டிணைப்பின் சக்திவாய்ந்த பிரிவுகளில் நிலவும் சிந்தனைகளையே பிரதிபலிக்கின்ற நிலையில், அவர்களும் ரஷ்யா உடனான மோதலுக்கு அழைப்புவிடுப்பதில் அழுத்தம் சேர்த்துள்ளனர்.

கார்ட்டர் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்புத்துறை செயலராக இருந்தவரும் நீண்டகால அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதியுமான Zbigniew Brzezinski, பைனான்சியல் டைம்ஸில் பிரசுரித்த கட்டுரை ஒன்றில், சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ரஷ்யா தாக்குவது "அமெரிக்க பதிலடியைக் தூண்டும்" என்று எழுதினார். வாஷிங்டனிலுள்ள ஏனையவர்களைப் போலவே, அவரும் இத்தகைய போராளிகள் குழுக்களில் மிக முக்கியமான ஒன்றாக சிரியாவில் அல் கொய்தாவுடன் இணைப்புகொண்ட அல்-நுஸ்ரா முன்னணி உள்ளது என்பதைக் குறிப்பிடாமல் தவிர்த்துக் கொண்டார்.

“சிரியாவில் ரஷ்ய கடற்படை மற்றும் விமானப்படையின் பிரசன்னம், அவர்களது தாய்நாட்டிலிருந்து புவியியல்ரீதியில் தனிமைப்பட்டு இருப்பதால் பலவீனமாக இருப்பதாகவும்", "அவர்கள் அமெரிக்காவை விடாது தூண்டினால், 'ஆயுதம்களைய' செய்யலாம் என்றும் Brzezinski ஆலோசனை வழங்கினார். புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில், அவர் "இராணுவரீதியில் துடைத்தழிக்கும்" ஒரு வழக்குமொழியைப் பயன்படுத்தியதற்கு அறிகுறியாக, "ஆயுதம்களைய செய்தல்" என்பதை மேற்கோளிட்டு காட்டியிருந்தார்.

அதேபோல, 2013 மத்தி வரையில் நேட்டோவிற்கான ஒபாமாவின் தூதராக இருந்த Ivo Daalder, Politicoக்கு கூறுகையில், “அங்கிருந்து அவர்களது இராணுவப் படைகளை நாம் வெளியேற்ற விரும்பினால், ஒப்பீட்டளவில் அனேகமாக நமது தரப்பிலிருந்து குறைந்த விலை கொடுத்தோ அல்லது விலை கொடுக்காமாலேயோ கூட அதை செய்துவிட முடியும். புட்டினின் விடையிறுப்பு என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி. சூழ்நிலை வரும் போது நீங்கள் இதை கொண்டு விளையாட வேண்டியிருக்குமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

இதற்கிடையே சிரியா மாற்றத்திற்கான ஒபாமாவின் முன்னாள் சிறப்பு தூதர் ஃப்ரெட்ரிக் ஹோஃப், 1962 அக்டோபரில் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது நிகிடா குருஷேவின் நடவடிக்கைகளோடு புட்டினின் நடவடிக்கைகளை ஒப்பிட்டார், அந்நெருக்கடி உலகை அணுஆயுத போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்திருந்தது. “50 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு முன்னிருந்தவரைப் போலவே, இவரும் [புட்டின்] அமெரிக்க ஜனாதிபதியின் பாகத்தில் பலவீனத்தை உணர்கிறார். அவருக்கு முன்னிருந்தவரைப் போலவே, இவரும் அமெரிக்காவுடன் அற்பத்தனமாக நடந்துகொள்வது ஒரு ஆரோக்கியமான நகர்வல்ல என்பதைக் கண்டறியும் அபாயத்தில் இறங்குகிறார். ஆனால் அதுபோன்றவொரு அபாயம் எல்லா ஆபத்தான விவகாரங்களையும் உள்ளடக்கியுள்ளது,” என்றார்.

பைனான்சியல் டைம்ஸின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை கட்டுரையாளர் Gideon Rachman, இத்தகைய சர்ச்சைகளின் அச்சுறுத்தலான விளைவுகளைத் தருவித்து, சிரியா சண்டையை 1930களின் ஸ்பானிஷ் உள்நாட்டு போருடன் ஒப்பிட்டார். அவர் எழுதினார்: “அதேபோன்றவொரு பினாமி போர்தான் சிரியாவில் இன்று நடந்து கொண்டிருக்கிறது—ரஷ்யா மற்றும் அமெரிக்கா இரண்டினது விமானப்படைகளும் அந்நாட்டின் இலக்குகள் மீது குண்டுவீசி வருகின்றன, அன்னியநாட்டு போராளிகள் உள்ளே பெருக்கெடுத்து வருகின்றனர்,” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “1930களில் ஸ்பெயினில் எதிரெதிர் தரப்புகளை ஆதரித்துவந்த அந்நாடுகள், 1940களில் நேரடியாக ஒன்றையொன்று தாக்கத் தொடங்கியிருந்தன. சிரியா சண்டை, ஈரானியர்களுக்கும் சவுதியர்களுக்கும் இடையிலான, அல்லது ரஷ்யர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையிலான ஒரு நேரடி மோதலுக்கே கூட இட்டுச் செல்லும் அபாயத்தை உதறிவிட முடியாது".

ரஷ்ய அரசையும் மற்றும் ரஷ்யாவின் எரிசக்தித்துறை பகாசுர நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற செல்வந்த தட்டுக்களின் ஆளும் வர்க்கத்தினது நலன்களையும் பாதுகாப்பதற்காக தொடங்கிய ரஷ்யாவின் தலையீடு, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான மற்றும் தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து மத்திய கிழக்கு வரைபடத்தைத் மாற்றி வரைவதற்கான, அமெரிக்காவின் திட்டங்களை நடைமுறையில் தடுத்துள்ளதால் இந்த அபாயம் நிலவுகிறது.

அம்மண்ணில் பினாமி படைகளை ஆதரித்து சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும் பரிந்துரை, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே அப்போதைய இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹுவால் ரிச்சார்ட் பேர்ல், டக்ளஸ் ஃபெத் மற்றும் டேவிட் உர்ம்சர் உள்ளடங்கிய ஒரு ஆய்வு குழுவால் வரையப்பட்ட, "ஒரு தெளிவான முறிவு: அதிகார எல்லையைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய மூலோபாயம்" என்று தலைப்பிட்ட ஒரு ஆவணத்தில் முன்வைக்கப்பட்டது. அம்மூவரும் பின்னர் புஷ் நிர்வாகத்தில் உயர்மட்ட பதவிகளைப் பெற்றதுடன், ஈராக்கிற்கு எதிரான ஆக்ரோஷமான அமெரிக்க போரைத் தொடங்குவதற்கான சூழ்ச்சியிலும் பங்குபற்றினர்.

விக்கிலீக்ஸால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்று, ஆட்சி மாற்றத்திற்கான செயலூக்கமான அமெரிக்க திட்டமிடல், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்காவது சிரிய உள்நாட்டு போர் வெடிப்பில் சூறையாட இருந்ததை நிறுவிக்காட்டியது. டமாஸ்கஸில் உள்ள அமெரிக்க தூதரக தலைமையகத்திலிருந்து வந்திருந்த அந்த இரகசிய செய்தி, வாஷிங்டன் பாவித்துக்கொள்ளத்தகுந்த சிரிய அரசாங்கத்தின் "பலவீனங்களை" விவரித்திருந்தது. “எல்லைகடந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரசன்னத்தை" ஆதாயமாக்கி, வகுப்புவாத மோதலை ஏற்படுத்த, "ஈரானிய மேலாதிக்கம் குறித்து சுன்னி பிரிவினரிடையே அச்சங்களைத்" தூண்டிவிடுவதே அப்பட்டியலில் முதலில் இடம் பெற்றிருந்தது.

அமெரிக்க படையெடுப்பு மற்றும் வாஷிங்டனின் பிரித்தாளும் தந்திரங்களால் உருவாக்கப்பட்டிருந்த ஈராக்கின் வகுப்புவாத படுகொலைகளின் உச்சத்தில் 2006 இல் அந்த ஆவணம் எழுதப்பட்டிருந்த நிலையில், அத்தகைய பரிந்துரைகள் ஒரு இரத்த ஆறை ஓடச் செய்யுமென்பதை முழுமையாக அறிந்தே முன்வைக்கப்பட்டது. அண்மித்தளவிற்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இக்கொள்கையின் கோரமான விளைபயன்களில் சுமார் 300,000 சிரியர்களின் மரணங்களும், கூடுதலாக 4 மில்லியன் பேர் அந்நாட்டை விட்டு விரட்டப்பட்டமையும் மற்றும் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டமையும் உள்ளடங்குகின்றன.

அமெரிக்க இராணுவவாதத்தின் தீவிரப்பாட்டை நியாயப்படுத்த, எரிச்சலூட்டும்விதமாக சிரிய மக்களின் துன்பங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், வாஷிங்டன் அந்த எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கின் மீதும் ஒட்டுமொத்த பூமியின் மீதும் அதன் மேலாதிக்கத்தை திணிக்கும் அதன் முனைவை ரஷ்யா தடம் புரள செய்ய விட்டுவிடாது.

ரஷ்யாவுடனான போருக்கு இட்டுச்செல்லும் பாதை எவ்விதத்திலும் தற்செயலானதல்ல. டமாஸ்கஸில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அமெரிக்க தலையீடு, ஆரம்பத்திலிருந்தே, சிரிய அரசாங்கத்தின் பிரதான கூட்டாளிகளான ஈரான் மற்றும் ரஷ்யாவை நேரடியாக தாக்குவதற்கான தயாரிப்புடன், அவ்விரு நாடுகளையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளும் மேலும் மேலும், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில் வேரூன்றிய அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போரின் பேராபத்துடன் மனிதயினத்தை எதிர்கொள்கிறது.

Tuesday, 6 October 2015

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!



இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம்
3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது.


3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.


இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே
இருக்கி றது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால்
‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

Sunday, 4 October 2015

குறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது.
 
இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி தான் இந்த இரகசியத் திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
 
சனல்4 க்கு கிடைத்திருந்த இரகசிய ஆவணம் ஒன்றில் இலங்கை அரசாங்கத்தினால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐநாவின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கும் திட்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்த விசாரணையை பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலில் வெளிவிவகார அமைச்சு நெறிப்படுத்தும் என்றும் ஐநாவின் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
வடக்கு மாகாண சபையும் இலங்கை அரசாங்கமும் இதனை பங்காளர்களாக இருந்து செயற்படுத்துவதென அந்த இரகசிய ஆவணம் கூறுவதாக சனல்4 குறிப்பிட்டுள்ளது.
 
இந்த இரகசிய ஆவணம் இப்போதைய சூழலில் கசிய விடப்பட்டுள்ள நோக்கம் இதனைத் தயாரித்தமைக்கான நோக்கம் எல்லாமே குழப்பங்களையும் சந்தேகங்களையும் எழுப்ப வைக்கின்றன.
 
குறிப்பாக எதிர்வரும் செப்படம்பர் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த இரகசிய ஆவணம் கசிந்திருக்கிறது.
 
இது ஐநா விசாரணை அறிக்கையின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையின் மீது கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.  அதைவிட இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போகின்ற வேளை இது இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தல், பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளல் என்பன இருதரப்பிலும் தாக்கம் செலுத்தும் விடயங்களாக உள்ளன.
 
ஏற்கனவே ஐநா விசாரணை அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்துக்கு ஓகஸ்ட் 21ம் திகதி அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் கிடைத்த நிலையில் தான் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமென்று அவசரமாக பாராளுமன்றைக் கலைத்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அப்படியிருக்கையில் ஐநா அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாகவும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவும் இந்த ஆவணம் கசிந்திருப்பது சற்று நெருடலான விடயமாகவே தெரிகிறது.
 
இன்னொரு பக்கத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஐநா அறிக்கை போன்ற போலி விசாரணை அறிக்கையை வெளியிட்டு சிங்கள மக்களை திசைதிருப்ப மகிந்த ராஜபக்ச தரப்பு முயற்சிகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
 
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 42  பேரை போர்க்குற்றவாளிகளாக அந்த அறிக்கையில் கூறப்படவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ஐநா அறிக்கையை வைத்து சிங்கள வாக்காளர்களைக் கவரும் உத்தியை முன்னரே எதிர்த்தரப்பு வகுத்திருப்பதாக தகவல்கள் உலாவின.
 
இந்த பின்னணியில் ஐநாவும் இலங்கை அரசும் இணங்கியிருப்பதாக ஓர் ஆவணம் கசிந்திருப்பதும் அது எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாயந்தது என்பதுவும் கேள்விக்குரியது.
 
கடந்த மார்ச் மாதம் இலங்கை வந்திருந்த, ஐநா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தான் இலங்கை அரசுடன் இந்தத் திட்டம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதேவேளை சனல் 4 வெளியிட்ட ஆவணம் குறித்து கருத்து வெளியிட மறுத்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே, எனினும் இது பெரும்பாலும் உண்மையாக இருக்காது என்று கூறியிருக்கிறார். அத்தகைய எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
 
அதுபோலவே ஐநா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்கும் இதுபற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லையெனத் தெரிவித்திருக்கிறார்.
 
இருந்தாலும் இந்த இரகசிய ஆவணக்குறிப்பில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு விசாரணையின் பங்காளர்களாக குறிப்பிடப்பட்டிருந்த வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் இதுபற்றித் தன்னுடன் கலந்துரையாடப்படவில்லை என்று நிராகரித்திருக்கிறார்.
 
இந்தநிலையில் ஒருவேளை இத்தகைய இரகசிய ஆவணங்களின் மூலம் அரசியல் நலன்களை அடையும் முயற்சிகள் ஏதும் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
தற்போதைய அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காகவும் உள்நாட்டு விசாரணையே மேற்கொள்ளப்படும் என்று நம்ப வைப்பபதற்காகவும் இந்த ஆவணம் கசிய விடப்பட்டிருக்கலாம்.
 
இதன்மூலம் மகிந்த ராஜபக்சவின் பிரசாரங்களை பலவீனப்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
ஆனால் கொழும்பில் இது சூடு பிடிக்க முன்னரே வடக்கில் இது எதிர்மறையான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த ஆவணம் கசிந்த மறுநாளே ஐநா விசாரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பே, உள்நாட்டு விசாரணையாக குறுக்கி விட்டதாக குற்றச்சாட்டை வீசியிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்ற நிலையிலும் உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பு இணங்கியுள்ளதான ஒரு குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் சுமத்தியிருக்கிறார்.
 
எவ்வாறாயினும் உள்நாட்டு விசாரணை என்ற விடயம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இரகசிய ஆவணத்தின் உள்ளடக்கம் அதிகம் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
 
ஐநாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அந்த ஆவணம் கூறியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் அமைப்பதாகக் கூறிய உள்நாட்டு விசாரணை மே, யூன், யூலை என்றும் இப்போது செப்படம்பர் என இழுபறிக்குள்ளாகி நிற்கிறது. அதுகூட ஜெனிவா அமர்வு செப்படம்பரில் நடக்காது என்று உறுதியானால் பிற்போடப்பட்டு விடும்.
 
ஏனென்றால் ஜெனிவா அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று கூறிய அரசாங்கம் இப்போது ஐநா அறிக்கையை பார்வையிட்ட பின்னரே அதை அமைப்போம் என்று கூறியிருக்கிறது.
 
இலங்கையில் ஆட்சியில் அமரும் எந்த அரசாங்கமுமே, போர்க்குற்றங்கள் குறித்து எந்தவொரு விசாரணையிலும் அக்கறையின்றியெ உள்ளது.
 
முன்னைய அரசாங்கமானாலும் சரி, தற்போதைய அரசாங்கமானாலும் சரி அதுதான் நிலைமை.
 
இன்னமும் ஐநா அறிக்கை வெளியாகாத நிலையில் எதற்காக இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கான இரகசியக் கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
 
ஐநா அறிக்கையில் ஒருவேளை, சர்வதேச விசாரணைகள் வலியுறுத்தப்பட்டால் இந்த உள்நாட்டு விசாரணை அதனைப் பலவீனப்படுத்திவிடும்.
 
இந்த அச்சம் தான் தமிழர் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. உள்நாட்டு விசாரணை மீது தமிழர்கள் தமக்கு நம்பிக்கை இல்லை என்று உறுதியாக கூறிவரும் நிலையில் அதனைக் கருத்தில் எடுக்காமல் ஐநா ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுக்கத் துணிந்திருக்கிறதா என்ற சந்தேகம் மனித உரிமை அமைப்புகளிடையே எழுந்திருக்கிறது.
 
போரில் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தமிழர்கள். அவர்களின் நியாயத்தையோ அவர்களின் ஒப்புதலையோ பெறாமல் தன்னிச்சையாக நடத்தும் உள்நாட்டு விசாரணையால் ஐநா எதைச் சாதிக்க நினைக்கிறது என்று தெரியவில்லை.
 
பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒத்துழைக்காத எந்த விசாரணையும் முழுமை பெறாது.
 
அத்தகையதொரு கட்டத்திற்குள் தமிழர்களைத் தள்ளுவதற்குத்தான் இலங்கை அரசு முனைவதாகத் தெரிகிறது. அதற்கு ஐநாவும் துணை போகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
 
உள்நாட்டு விசாரணை என்று இதுவரை எத்தனையோ மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் உருப்படியான நன்மைகளும் கிட்டவில்லை.
 
உதாரணத்திற்கு ஏற்கனவே மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்று இருக்கிறது.
 
அது பேருக்கு அமர்வுகளை நடத்தியது. ஒரு இடைக்கால அறிக்கையையும் கொடுத்ததாக கூறியது.
 
இப்போது சில சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட புதிய அதிகாரிகளை அந்தக் குழு நியமித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது காணாமற்போனோருக்கு என்ன நடந்தது என்று கண்டறிவதற்கான மேல் விசாரணை நடத்துவதற்கான ஒரு நடவடிக்கை.
 
இந்தநிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முடிந்த பின்னர் காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான செயலணி ஒன்றை அமைக்கவுள்ளதாக கூறியிருந்தார்.
 
தனது மேற்பார்வையில் இது செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எதற்காக இந்தச் செயலணி? அவ்வாறாயின் முன்னைய விசாரணைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லையா? நம்பிக்கையில்லா விசாரணையை எதற்காகத் தொடரவேண்டும்? இது போல எத்தனை ஆணைக்குழுக்கள், செயலணிகள் நியமிக்கப்படவுள்ளனவோ தெரியவில்லை. ஆனால் ஒன்றில்கூட உண்மைகள் வெளிவரவில்லை.
 
காணாமற்போனவர்களில் ஒருவர் தானும் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அவருக்கு என்ன நேரிட்டது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
 
அடுக்கடுக்கான விசாரணைக் குழுக்களை அமைத்து மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதே இலங்கை அரசின் வாடிக்கையாகி விட்டது. அதற்கு சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரிபால சிறிசேன என்று எந்த சிங்கள தலைமையுமே விதிவிலக்கானவர்களல்ல.
 
அனைவருமே தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை வேடிக்கை பார்த்தவர்கள். அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காதவர்கள் தான்.
 
இப்படியான நிலையில் தான் தமிழர்கள் சர்வதேச விசாரணையின் மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று அசையாத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர் இந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தான் ஐநாவின் இரகசிய ஆவணத்தின் தகவல்கள் அமைந்திருக்கின்றன.
 
போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்களை கருத்தில் கொள்ளாமல் ஐநாவோ அல்லது அமெரிக்காவோ தன்னிச்சையாக உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு இணங்கினாலும் கூட இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை.
 
ஏனென்றால் இந்த விசாரணைகள் உண்மையானதாக, நேர்மையானதாக, நம்பகமானதாக, நடுநிலையானதாக அமைய வேண்டும். அதற்குப் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம்.
 
தமிழர்களின் நம்பகத் தன்மையை சோதனைக்குள்ளாக்கி நடத்தப்படும் எந்த விசாரணையும் போலியானதொன்றாக பேருக்கு நடத்தப்படும் ஒன்றாகவே இருக்கும்.
 
அமெரிக்கா, இந்தியா அல்லது ஐநா, எந்த நாடாகவோ, எந்த அமைப்பாகவோ இருந்தாலும் நியாயமான பொறுப்புக்கூறல் மூலம் இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எண்ணினால் பாதிக்கப்படவர்களின் பக்கம் அவர்கள் நிற்க வேண்டியிருக்கும்.
 
இவ்வாறு இலங்கை அரசுடன் செய்யும் இரகசிய உடன்பாடுகளின் மூலம் அந்த நல்லிணக்கம் ஒருபோதும் சாத்தியப்படாது.
 
சுபத்ரா

சிரியாவில் அமெரிக்க-ரஷ்ய மோதலும், போர் அபாயமும்

வாஷிங்டனின் போர்வெறியூட்டும் கண்டனங்களை அடுத்து, ரஷ்யா சிரியாவினுள் உள்ள இஸ்லாமிய போராளிகளது இலக்குகளுக்கு எதிராக அதன் வான்வழி தாக்குதல்களைத் தொடங்கியிருப்பது, சிரியாவில் தாக்குதல் தீவிரமடைவதை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே இன்னும் மிகவும் அபாயகரமான இராணுவ மோதல் ஏற்படுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

ஒபாமா நிர்வாகமும் சரி புட்டின் அரசாங்கமும் சரி இரண்டுமே பயங்கரவாதத்திற்கு எதிரான பரந்த சண்டையின் பாகமாக ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) எதிராக போர் நடத்தவே, தங்களின் இராணுவங்களைச் சிரியாவிற்குள் அனுப்பி இருப்பதாக வாதிடுகின்றன. இரண்டுமே பொய்யுரைக்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் முக்கிய பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி, பாரசீக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் மேலதிக நோக்கங்களுக்காக, ISIS வளர்த்து முன்கொண்டுவந்ததுடன், சிரியாவினுள்ளும் வாஷிங்டன் தலையீடு செய்துள்ளது. அவர்கள் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைப் பதவியிலிருந்து இறக்கி அவர்களது நலன்களுக்கு அடிபணியும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டு அவரை பிரதியீடு செய்ய முயல்கின்றன.

சிரியாவில் மாஸ்கோவின் பிரதான நோக்கம் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக அல்ல, மாறாக அசாத் ஜனாதிபதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அசாத் அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருப்பதும் மற்றும் அதன்மூலமாக மத்திய கிழக்கில் அதன் ஒரேயொரு கூட்டாளியை பேணுவதும் மற்றும் அங்கே காலூன்றி இருப்பதுமே ஆகும். முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கடற்படை துறைமுக தளமாக சிரியா விளங்குகிறது.
ஒரே எதிரியை எதிர்த்து சண்டையிடுவதாக தனித்தனியே வாதிட்டுக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான அந்நிய இராணுவ சக்திகள், உண்மையில், நேரெதிரான நோக்கங்களுக்காக சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. இந்த எதிர்விரோத சக்திகளின் பல போர்விமானங்கள், அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தை விட சற்றே பெரிதாக இருக்கும் ஒரு நாட்டில் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன. அவற்றிற்கு இடையிலேயே ஆயுத மோதல்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறை மறுக்கவியலாது.

சிரியாவில் புட்டின் அரசாங்கத்தினது தலையீட்டுக்கான காரணங்கள் தெளிவானவை. அசாத்தைத் தூக்கியெறியும் அதன் நடவடிக்கையில் வாஷிங்டன் வெற்றியடைந்தால், அது ரஷ்யாவைச் சுற்றி வளைக்க, பலவீனப்படுத்த மற்றும் இறுதியில் அதை உடைப்பதற்கான அமெரிக்க முனைவைத் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றுமென அது அஞ்சுகிறது. செசென்யா மற்றும் காகசஸின் ஏனைய பகுதிகளிலிருந்து சிரியாவிற்குள் வெள்ளமென பாய்ந்துள்ள ஆயிரக் கணக்கான இஸ்லாமிய போராளிகள், ஐயத்திற்கிடமின்றி அமெரிக்கா, சவுதிஅரேபியா, கடார் இதர பிறவற்றின் ஆதரவோடு மாஸ்கோவிற்கு எதிராக பிரிவினைவாத கிளர்ச்சிகளுக்குத் தலைமை கொடுக்க உள்நாட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். இரண்டு போர்களின் போக்கில் செசென் மக்கள் மீதான மாஸ்கோவின் மூர்க்கமான ஒடுக்குமுறை அதுபோன்றவொரு நடவடிக்கைக்கு வளமான களத்தை உருவாக்கியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக அசாத் ஆட்சியைப் பதவியிலிருந்து நீக்குவதென்பது, எண்ணெய் வளம்மிக்க ஒட்டுமொத்த மத்திய கிழக்கு எங்கிலும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கான வாஷிங்டனின் முனைவை மேற்கொண்டும் தீவிரப்படுத்தும், அதேவேளையில் ரஷ்யாவின் எண்ணெய் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு குழிபறிக்கும் விதமாக மேற்கத்திய ஐரோப்பிய சந்தைகளை மிகவும் நேரடியாக அணுகுவதற்கு கட்டாருக்கு வழிவகை செய்யக்கூடிய ஒரு புதிய எரிவாயுக்குழாய் பாதைக்கு வழிவகுக்கும்.

சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ தலையீட்டுக்கு அங்கே ஒரு தற்காப்பு குணாம்சம் இருக்கிறதென்ற போதினும், அது முற்றிலும் பிற்போக்குத்தனமாக உள்ளது. அது சிரியாவின் மக்களைக் காப்பாற்றுவதை நோக்கியோ, அல்லது உண்மையில் ரஷ்யாவின் உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதை நோக்கியோ திரும்பி இருக்கவில்லை. அதற்கு மாறாக, அது புட்டின் ஆட்சி பிரதிநிதித்துவம் செய்கிற ரஷ்ய ஆளும் உயரடுக்கின் நலன்களைத் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததிலிருந்து மற்றும் அரசு சொத்துக்களைக் களவாடியதிலிருந்து மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குட்படுத்தியதிலிருந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கி கொண்டுள்ள இந்த குற்றகரமான செல்வந்தர்களின் வர்க்கம், உலக அரங்கில் எந்த முற்போக்கான நடவடிக்கையும் எடுக்க அமைப்புரீதியில் இலாயகற்றது. ஒரு தரகு முதலாளித்துவ ஆட்சியாக உள்ள அந்த ஆட்சியால் ஏகாதிபத்தியத்திலிருந்து எந்தவித உண்மையான சுதந்திரமும் பெறவியலாது.

மாஸ்கோ தலையீட்டின் பிற்போக்குத்தனமான குணாம்சம் ரஷ்யாவின் பழமைவாத தேவாலயத்தால் புதனன்று கச்சிதமாக தொகுத்தளிக்கப்பட்டது, அது அதையொரு "புனித போர்" என்று பிரகடனப்படுத்தியது.

அது ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் குறித்த வாஷிங்டனின் கண்டனங்கள் பாசாங்குத்தனத்திற்கும் மேலானது என்று கூறுகிறது. அதன் [ரஷ்யாவின்] வான்வழி தாக்குதல்கள் "எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கின்றன" என்று கூறி அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ்டன் கார்ட்டர் புதனன்று ரஷ்யாவை கண்டித்தார்.

வாஷிங்டன், சவூதி முடியாட்சி மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான கூட்டாளிகளாக உள்ள ஏனைய பிற்போக்குத்தனமான எண்ணெய் ஷேக் ஆட்சிகளால் தான் அந்நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. சண்டையிட்டு வருவதாக அமெரிக்கா கூறும் அந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அதன் சொந்த உருவாக்கங்களாகும். லிபியாவில் செய்ததைப் போலவே சிரியாவிலும் ஆட்சி மாற்றத்திற்கான போரில் பினாமி தரைப்படை துருப்புகளாக சேவையாற்றுவதற்காக, அது தான் அவர்களை ஆயுதமேந்த செய்து, நிதியுதவி வழங்கி ஆதரித்தது.

ரஷ்யா அதன் வான் தாக்குதல்களை ISIS இலக்குகளோடு நிறுத்திக்கொள்ளாமல், மாறாக அசாத் ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டுவரும் ஏனைய போராளிகள் குழுக்களையும் தாக்குகிறதென கார்ட்டரும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர். “அது (ISIS) இல்லாத பகுதிகளிலும் அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்,” கார்ட்டர் தெரிவித்தார். அவரது அந்த கடுமையான வாசகம், அமெரிக்காவிற்காக அங்கே பிரசன்னமாகவிருக்கும் அல் கொய்தாவின் இணைப்பான சிரியாவில் உள்ள அல் நுஸ்ரா முன்னணி மீதான அதன் கவலைகளை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அமெரிக்க இராணுவம் பயிற்சியளித்து, ஆயுதமேந்த செய்து, சிரியாவிற்குள் திரும்ப அனுப்பியுள்ள "விழிப்பான" போராளிகள் என்றழைக்கப்படுபவர்கள் திரும்பி வந்தவுடனேயே மீண்டும் மீண்டும் அவர்களது ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அல்-நுஸ்ரா உடன் இணைந்துள்ளனர். இதுதான் "பயங்கரவாதத்திற்கு எதிரான போராகும்".

அமெரிக்கா உலகளவில் ஒரு முடிவில்லா போர் கொள்கையில் ஈடுபட்டுள்ளது, அது ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை அழித்துள்ளது, இந்த உண்மை அமெரிக்கா முதன்முதலில் படையெடுத்து 14 ஆண்டுகளுக்குப் பின்னரும், அங்கே சுமார் 10,000 அமெரிக்க துருப்புகள் தங்கியிருப்பார்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து, ஆப்கான் நகரமான குண்டூஸை இவ்வாரம் தாலிபான் கைப்பற்றியுள்ளது.

உலகளாவிய இந்த இராணுவவாத கொள்கையின் சாத்தியத்திறன் ரஷ்யாவுடனான ஒரு நேரடி மோதலில் செறிந்தெழுகிறது என்பது நிஜமானதும், தற்போது நடந்து கொண்டிருப்பதுமாகும். அமெரிக்க ஆதரவிலான "போராளிகளைத்" தாக்கும் எந்தவொரு படைக்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக, பெண்டகன் நடவடிக்கைகளுக்கான அமெரிக்க கொள்கைகளை சிரியாவில் மாற்றிவிட்டிருப்பதாக அறிவித்தது. இதற்கிடையே வாஷிங்டனின் கூட்டாளிகளும் அதேபோன்ற அச்சுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர், சவூதி அரேபியா நேரடியான இராணுவ தலையீட்டைக்கு அச்சுறுத்தி வருகிறது, பிரான்ஸ் இவ்வாரம் அதன் சொந்த குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதுடன், அதன் வான் தாக்குதல்கள் வெறுமனே ISIS மட்டுமல்ல, மாறாக சிரிய ஆட்சியையும் இலக்கில் கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளது, இவ்விதத்தில் இருக்கையில் தான் ரஷ்யர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த ஆண்டின் மேற்கத்திய-ஆதரவிலான உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், அமெரிக்காவும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் அவற்றினது இராணுவ பிரசன்னத்தை மற்றும் சண்டைக்குரிய ஆயத்தநிலையைத் துரிதமாக தீவிரப்படுத்தி உள்ளன. ரஷ்யாவும் அந்நாடுகளது மேற்கத்திய எல்லைகளுக்கு அருகே அதன் படைகளைக் குவித்துள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், ஓர் அணுஆயுத போரைத் தூண்டிவிடக்கூடிய ஓர் இராணுவ மோதல் அச்சுறுத்தல் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவில் அதிகரித்துள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வழிவகைகளைக் கொண்டு சிரியா மீதான தாக்குதலையும் உலக போர் அச்சுறுத்தலையும் எதிர்க்க வேண்டும். அது ரஷ்ய தலையீட்டுக்கோ அல்லது மற்ற எந்தவொரு முதலாளித்துவ அதிகாரத்திற்கோ ஒரு சிறிய ஆதரவைக் கூட வழங்கக்கூடாது. டிரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், “போர் வரைபடத்தை அல்ல, மாறாக வர்க்க போராட்ட வரைபடத்தைப் பின்தொடர்வது" அவசியமாகும்.

தொழிலாளர்கள், ஈராக், சிரியா மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலிருந்தும் அன்னிய இராணுவ படைகள் அனைத்தையும் திரும்பப்பெற போராட வேண்டும். சர்வதேச சோசலிச புரட்சிக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மத, இன, தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்காவால் நடத்தப்பட்டதைப் போன்ற ஏகாதிபத்திய தலையீடுகளின் தோற்கடிப்பைப் பாதுகாக்க முடியும்.

Bill Van Auken