Tuesday 13 October 2015

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC”! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கப்படும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான்.

இந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன், வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.
பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் கொலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.

இந்த சிக்கனை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்து விடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. இதனை உண்பவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மூளை செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது.


நன்றி: பி.பி.சி

No comments:

Post a Comment