இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, சமீபத்தில் அமெரிக்கவின் 9 நானோ
மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களையும், அதை தொடர்ந்து இந்தோனேஷியாவின் செயற்கை
கோள்களையும் விண்ணில் செலுத்த உதவி இருந்தது.
அது
மட்டுமின்றி 2015 தொடங்கி 2016 வரை என்ற ஓராண்டு கால இடைவெளியில்
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின்
உதவியை அமெரிக்கா நாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..!


இந்தியாவின் உதவி :
பிற
நாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவின் இஸ்ரோ புதிய
மைல்கல் சாதனையை நிகழ்த்தி இருக்கும் நிலையில் மேலும் சில உலக நாடுகள்
இந்தியாவின் உதவியை நாடிய படி தான் இருக்கிறது.


விண்வெளி தொழில்நுட்பம் :
இந்தியாவுடன்
இணைந்து செயற்கைகோள்களை செலுத்துவது மிகவும் சுலபம் என்பதை விட
இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தில் தோல்வி என்பதே கிடையாது
என்பதற்காகவே பிற உலக நாடுகள் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றனர்.


மொத்தம் :
அப்படியாக
இதுவரை மொத்தம் 75 இந்திய செயற்கைகோள்களையும், 53 அந்நிய நாட்டு
செயற்கைகோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பட்டியல்:
அந்நிய நாட்டு செயற்கைகோள்கள் என்ற பட்டியலில் அமெரிக்க இந்தோனேஷியா போன்ற நாடுகளை தொடர்ந்து இப்போது சிங்கப்பூரும் இணைய உள்ளது.


சிங்கப்பூர் :
வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டின் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ.


ஜிபிஎஸ் :
சிங்கப்பூரின்
செயற்கைகோள்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள ஜிபிஎஸ் சேவைகளுக்காக (GPS
Service) விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்ரோ தலைவர் :
இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஏஎஸ் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.


சேவை :
மேலும்
இஸ்ரோ, இதுவரை ஒலிபரப்பு, கல்வி, தகவல் தொடர்பு, அளவியல் சேவை மற்றும் பல
என ஆகிய காரணகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை
விண்ணில் செலுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிக கவனம் :
அதிக கவனம் :
முக்கியமாக
பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சிரிகைக்கு (Disaster management) அதிக கவனம்
செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி :
அப்படியாக, ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதில் 95% - 96% வரை வெற்றிகரமாக செயல்பட செயற்கைகோள்கள் உதவிக்கொண்டிருக்கிறது.
நஷ்டம் :
நஷ்டம் :
இந்தியாவின்
7,000 கிலோ மீட்டர் நீள கடலோர பகுதிகளில் சரியான மீன்பிடி இடங்களை
கண்டறிந்து, மீனவர்களுக்கு உதவி செய்து. ஆண்டுதோறும் சுமார் 20,000 கோடி
ரூபாய் நஷ்டத்தை செயற்கைகோள்கள் தவிர்த்து கொண்டிருக்கிறது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment