Thursday 21 January 2016

தமிழர்களின் போலி ராஜதந்திரத்தால் ஏற்பட்டது என்ன?

மனித நாக­ரிகம் தோன்­றிய காலந்­தொட்டே மனி­தர்கள் விடு­த­லைக்­காகப் போரா­டி­வ­ரு­கி­றார்கள். அடக்கு முறைக்கும் அநீ­திக்கும் எதி­ராக, பல்­வேறு வடி­வங்­களில் யுகம் யுக­மாக விடு­தலைப் போராட்­டங்கள் நிகழ்ந்து வந்­துள்­ளன. உலகில் அநீ­தியும் அடக்­கு­மு­றையும் தொட­ரும்­வரை விடு­தலைப் போராட்­டங்­களும் தொடர்ந்­த­வண்ணம் தான் இருக்­கின்­றன.



ஒடுக்­கப்­படும் மானிட வர்க்கம் விடு­த­லை­ய­டையும் வரையில் ஏதோ­வொரு வகையில் போராடிக்­கொண்­டி­ருப்­பது தான் மனித வர­லாற்று யதார்த்­த­மா­கவி­ருக்­கின்­றது. தேசிய இன­மா­க­வி­ருந்தும் உரி­மை­க­ளுக்­கா­கவும் அபி­லா­ஷை­க­ளுக்­கா­கவும் நீதி நியா­யத்­திற்­கா­கவும் தற்­போதும் போரா­டிக்­கொண்­டி­ருக்கும் தமி­ழி­னமும் மேற்­கு­றிப்­பிட்ட யதார்த்­தத்­திற்கு விதி­வி­லக்­கில்லை. 2009ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் துன்­பியல் சம்­பவம் நிகழ்ந்து ஆறரை ஆண்­டுகள் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன.

அறு­பது ஆண்­டு­க­ளாக பல்­வேறு வடி­வங்­களில் போரா­டிக்­கொண்­டி­ருக்கும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் நிகழும், விடியல் பிறக்கும், நிம்­ம­தி­யான வாழ்க்கை மலரும் என்ற நம்­பிக்­கை­யுடன் ஒவ்­வொரு பொழு­து­க­ளையும் கடந்து வந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்­த­வையில் இவ்­வ­ருடம் ஜன­வரி 8ஆம் திக­தியும் ஒரு மாற்றம் நிகழ்ந்­தது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வுடன் புதிய ஜனா­தி­பதி அரி­யா­ச­ன­மே­றினார். தொடர்ந்து பொதுத்­தேர்­தலும் நடை­பெற்­றது.

அதிலும் மாற்றம் நிகழ்ந்­தது. வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யாக பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகிய இரண்டும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை ஸ்தாபித்­தன. திக்கித் திணறி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யா­னது. அர­சாங்­கத்­திற்கு வெளியில் இருந்து கொண்டு நல்­லெண்ணச் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­தது. ஜனா­தி­பதித் தேர்தல் முடிந்து தற்­போது 11 மாதங்கள் உருண்­டோ­டி­விட்­டன.

ஆட்சி மாற்­றத்தால் மாற்றம் நிகழ்ந்து விடு­மென அதீத நம்­பிக்கை கொண்­டி­ருந்த தமி­ழி­னத்­திற்­காக எவ்­வா­றான விட­யங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்ற வினா முன்­வைக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் ஒரே வார்த்­தையில் எது­வு­மே­யில்லை என கூறி­வி­டக்­கூ­டிய நிலை­மையே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வா­றி­ருக்­கையில், ஆயு­தப்­போ­ராட்ட மௌனிப்­புக்கு பின்னர், தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆணை­பெற்­ற­வர்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர். ஆகவே, தமி­ழர்­களின் எதிர்­கா­லத்தை உறு­தி­செய்­ய­வேண்­டிய பாரிய வகி­பாகம் அவர்­க­ளி­டத்­தி­லேயே உள்­ளது என்­பதை மறு­த­லிக்க முடி­யாது.

சர்­வ­தேச சமூகம் எம்­முடன் இருக்­கின்­றது. எமது விட­யங்கள் சர்­வ­தேச சமூ­கத்தில் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்­களின் துணை­யுடன் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­ கண்டு நிரந்­தர தீர்­வுக்­கான இலக்­கு­களை அடைந்து விட­மு­டியும். அது­நோக்­கிய கரு­மங்­களை இரா­ஜ­தந்­தி­ர­மாக முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென ஆணித்­த­ர­மாகக் கூறி­வ­ரு­கின்­றார்கள். மூன்று தசாப்த ஆயு­தப்­போ­ராட்­டத்தால் விலை­ம­திப்­பற்ற இழப்­புக்­களை தமிழ் மக்கள் சந்­தித்­தி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே மீண்­டு­மொ­ரு­முறை அத்­த­கைய இழப்­புக்கள் ஏற்­ப­டு­மாயின் அது மேலும் தமிழ் மக்­களை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். அந்த அடிப்­ப­டையில் உரி­மை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் வென்­றெ­டுப்­ப­தற்­காக இரா­ஜந்­தி­ர­மான அணு­கு­மு­றை­களை அல்­லது நகர்­வு­களைக் கையா­ளு­கின்றோம் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யா­க­வி­ருக்­கின்­றதில் தவ­றொன்றும் இல்லை. எனினும் சர்­வ­தே­சத்தின் துணை­யுடன் இரா­ஜ­தந்­தி­ர­மாக நகர்­வு­களைச் செய்­கின்றோம் அல்­லது அணு­கு­மு­றை­களை மேற்­கொள்­கின்றோம் என பகி­ரங்­க­மா­கவே தெரி­விக்­கப்­பட்டு விட்­டது.

அந்­நி­லையில் மலர்ந்­தி­ருக்கும் புதிய ஆட்­சியில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ­மை­வு­களை சற்றே ஊடு­ருவி பார்க்­கையில் இரா­ஜ­தந்­தி­ர­மான நகர்­வு­களை, அணு­கு­மு­றை­களை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டி­ருப்­பது அந்த வார்த்­தை­களை கூறி­ய­வர்கள் அல்ல. மாறாக, பெரும்­பான்­மை­வாத ஆட்­சி­யாளர்­களே என்­பது கசப்­பா­ன­தாக இருந்­தாலும் தற்­போ­தா­வது ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டித்தான் உள்­ளது. ஆம், பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து இலங்கை 1948களில் சுதந்­திரம் பெற்­றி­ருந்­தது. எனினும் பெரும்­பான்­மை­வாத ஆட்­சி­யா­ளர்கள் அவர்­க­ளி­டத்­தி­லி­ருந்த பிரித்­தாளும் தந்­தி­ரத்­தையும் முறை­யாக பயின்­றி­ருந்­தார்கள்.

உள்­நாட்டில் சிங்­கள–பௌத்த வாதத்தை விதைத்து இந்த நாட்டை சிங்­கள–பௌத்த நாடாக கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக பிறி­தொரு தேசிய இன­மான தமி­ழி­னத்தை அடக்­கி­யா­ள­வேண்­டு­மென்ற திட­சங்­கற்­பம் பெரும்­பான்­மை­வா­தி­களால் எடுக்­கப்­பட்டு விட்­டது. அதனை தீர்க்­க­த­ரி­ச­ன­மாக உணர்ந்து தனது உரி­மை­க­ளுக்­கா­கவும், அபி­லா­ஷை­க­ளுக்­காகவும் போராட்­டத்தை தமிழ்த் தேசிய இனம் ஆரம்­பித்­தி­ருந்­தது. அகிம்சை ரீதி­யா­கவோ அல்­லது ஆயுத ரீதி­யா­கவோ போராட்­டங்­களின் வேட்கை வலுக்கும் போது பிரித்­தாளும் தந்­தி­ரத்தை மிகச்­செவ்­வனே பயன்­ப­டுத்­தி­வந்­துள்­ளார்கள் பெரும்­பான்­மை­வாத ஆட்­சி­யா­ளர்கள்.

ஆரம்­ப­கா­லத்தில் ஒப்­பந்­தங்­களை செய்­து­கொண்டு சிறு­நம்­பிக்­கை­ய­ளிப்­பதும் பின்னர் அவற்றை கிழித்­தெ­றி­வ­து­மாக இருந்த பெரும்­பான்­மை­வாத ஆட்­சி­யா­ளர்கள் 80களில் ஆயு­தங்­க­ளுடன் எழுச்சி கொண்ட இளை­ஞர்­களை குழுக்­க­ளாகப் பிரித்து, உள்­ளக முரண்­பா­டு­களை வலுப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். குறிப்­பாக இதனால் சகோ­த­ரப்­ப­டு­கொ­லை­களும் ஒரு­வ­ரை­யொ­ருவர் காட்­டிக்­கொ­டுக்கும் நிலை­மையும் நீடித்த வர­லா­று­களே எம்­மத்­தியில் உள்­ளன. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவின் காலத்தில் போராட்­டங்­களை பல­வீ­னப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களும், நம்­பிக்­கை­ய­ளித்து ஏமாற்றும் செயற்­பா­டு­களும் அதி­யுச்­சத்தில் காணப்­பட்­டி­ருந்­தது.

அதன் பின்­ன­ரான காலத்தில் அவ்­வா­றான நிலை­மைகள் சிறி­ய­ளவில் குறைந்­தி­ருந்­தன. மீண்டும் அவ்­வா­றான நிலை­மைகள் 2001ஆம் ஆண்­ட­ளவில் வலு­வ­டைந்­தன. காரணம் மாம­னா­ருக்கு ஒரு­படி மேல்­சென்று சிந்­திக்­கு­ம­ள­விற்கு மரு­ம­க­னான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காணப்­பட்­டி­ருந்தார். பிர­தமர் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க காலத்தில் சமாதான ஒப்­பந்தம், ஒஸ்லோ பேச்­சு­வார்த்தை ஆகிய நம்­பிக்­கை­ய­ளிக்கும் வகை­யி­லான விட­யங்கள் அரங்­கே­றி­யி­ருந்­தன.

அதன் தொடர்ச்­சி­யாக தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்­பி­லி­ருந்து கருணா அம்மான் பிள­வ­டைந்து சென்றார். அந்­தப்­பி­ள­வுக்கு நானே முழு­மை­யான காரணம். யுத்த வெற்­றிக்கு புள்ளி வைத்­ததும் நானே என பகி­ரங்­க­மா­கவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருந்தார். அத்­த­கை­யவர் இன்று மீண்டும் பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றார். நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நிரந்­தர தீர்­வ­ளிக்கும் ஒரு­த­லை­வ­ராக நம்­பிக்­கை­ய­ளிக்கும் அவ­தா­ர­மாக காட்டி நிற்­கின்றார்.

ஆனால் திரை­ம­றைவில் பெரும்­பான்­மை­வாத ஆட்­சி­யா­ளர்கள் படிப்­ப­டி­யாக மேற்­கொண்டு வரும் இரா­ஜ­தந்­திர காய்­ந­கர்த்­தல்கள் நல்­லெண்ண சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இரா­ஜ­தந்­தி­ரத்தை விஞ்­சி­விட்­ட­தோடு மட்­டு­மன்றி தமிழ் மக்­களின் கோரிக்­கை­களை நலி­வ­டையச் செய்யும் நிலை­யி­லேயே உள்­ளது. முன்­ன­தாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜன­வ­ரியில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் வடக்­கி­லி­ருந்து ஒரு இரா­ணுவ வீரர் கூட அகற்­றப்­ப­ட­மாட்டார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்­பா­கவோ யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பாக இரா­ணுவ வீரர்­களை விசா­ரணை செய்­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்த முடி­யா­தென பகி­ரங்க அறி­விப்பை விடுத்­தி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி அரி­யா­ச­னத்தில் அமர்த்­தி­யது. சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களை அர­ி­யா­ச­னத்­தி­லி­ருந்து அகற்ற வேண்­டு­மென்ற ஒரே­நோக்­கத்­திற்­காக அந்த முடிவை எடுத்த­தா­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ரதுங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தமிழ் மக்­களின் பிரச்­சினை தொடர்­பாக வாய்­மொ­ழி­யாக வழங்­கிய உறு­தி­மொ­ழி­களும் இவ்­வா­றான நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்­கு­வ­தற்­கான கார­ணங்­க­ளாக கூறப்­பட்­டன.

அதன் பின்னர் 2015 ஆகஸ்ட் 17இல் பொதுத்­தேர்தல் நடை­பெற்­றது. ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வே இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாகப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முடிந்த முடிவு என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கூறி­யது. வடக்கு, கிழக்கு இணைப்போ அல்­லது சமஷ்டி, சுய­நிர்­ணயம் ஆகி­ய­வற்றை ஏற்­க­மு­டி­யா­தென ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஏறக்­கு­றைய ஒரே­வ­கை­யி­லான கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. கூட்­டாக ஆட்­சி­ய­மைத்­தனர். வட­கி­ழக்கு இணைப்பு, சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான சமஷ்டி முறையில் நிரந்­தர தீர்வு என்ற தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு கிடைத்த ஆணை­யுடன் பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அமர்ந்­தது.

அர­சாங்­கத்­திற்கு வெளியில் இருந்து கொண்டு நல்­லெண்ண சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்­தப்­போ­வ­தா­கவும் குறிப்­பிட்­டது. சர்­வ­தேச சமூ­கத்­தினால் அர­வ­ணைக்­கப்­படும் நிலையில் புதிய ஆட்­சி­யா­ளர்கள் இருக்­கின்ற வேளையில், நல்­லெண்ண சமிக்­ஞையை கூட்­ட­மைப்பு வெளிப்­ப­டுத்தி நிற்­ப­தும்­கூட ஒரு இரா­ஜ­தந்­தி­ர­மாக இருக்­கலாம் எனக்­கொள்ள முடியும். ஆனால் தற்­போது நடந்து கொண்­டி­ருப்­பதைப் பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இரா­ஜ­தந்­திரம் நீர்த்­துப்­போய்­விட்­ட­தென்றே கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதற்கு கார­ணங்கள் இல்­லா­ம­லில்லை.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரின் போது எதிர்க்­கட்­சி­த­லைவர் பதவி, பிர­தம நீதி­ய­ரசர் பதவி ஆகி­ய­வற்றை நல்­லி­ணக்­கத்தின் அடை­யா­ளங்­க­ளாக காட்­டிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கி­யது. அதனை சர்­வ­தேச சமூ­கமும் ஏற்­றுக்­கொண்­டது. அதன் விளை­வுதான் ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையின் காரத்தின் செறிவு குறைக்­கப்­பட்டு அமெ­ரிக்­காவின் துணை­யுடன் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த மண்­ணி­லி­ருந்து யதார்த்­தத்தை உணர்ந்து சர்­வ­தேச விசா­ரணை வேண்­டு­மென கூறி­ய­வர்கள் அங்கு சென்று என்ன செய்­தார்கள் என்­பது யாரு­ம­றி­யாத நிலையில் உள்­ளனர்.

அர­சாங்­கமே கையொப்­ப­மிட்டு ஏற்­றுக்­கொள்­ளு­ம­ள­விற்கு தீர்­மானம் காணப்­ப­டு­கின்­ற­தென்றால் அதன் வலு எந்த நிலையில் இருக்கும் என்­பதை அனை­வ­ருமே உணர்ந்­து­விட்­டனர். தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொண்டு அதன்பால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்வை எட்­டு­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிக்கும் மிகப்­பெரும் பிடி­யாகக் காணப்­பட்ட மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான விடயங்கள் நீர்த்துப்போயுள்ளன.

உண்­மை­யி­லேயே ஜெனீவா கூட்­டத்­தொடர் நடை­பெ­ற­வுள்­ள­தென்­பதும் இத்­த­கைய அதி­முக்­கிய விடயம் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வொன்று எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தென்­பதும் உல­க­றிந்த விடயம். ஆனால் இதில் முக்­கிய வகி­பா­கத்தைக் கொண்­டி­ருந்­த­வர்­களில் ஒரு­த­ரப்­பினர் அர­சாங்கம். மற்­றத்­த­ரப்­பினர் தமிழ் மக்­களின் ஆணை­பெற்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர். அர­சாங்கம் குறித்த விட­யத்தை எவ்­வாறு கையாள்­வது என்­பது குறித்து உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் பல சந்­திப்­புக்­களை மேற்­கொண்டு ஆராய்ந்­தி­ருந்­தது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேர்தல் முடி­வு­களைத் தொடர்ந்து தேசியப் பட்­டியல் தொடர்­பான விட­யத்­திற்கே முக்­கி­யத்­துவம் வழங்­கி­யி­ருந்­தது. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஆகக் குறைந்­தது பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளா­வது ஒன்று கூடி குறித்த விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு முயற்­சிக்­கக்­கூ­ட­வில்லை. கூட்­டத்­தொடர் இடம்­பெற்ற தரு­ணத்தில் ஜெனீ­வாவில் ஆளுக்­கொரு கருத்­துக்­களை வெளியிட்டு, தனித்­த­னி­யான சந்­திப்­புக்­களை மேற்­கொண்­டி­ருந்­ததன் மூலம் அதன் விளைவு தெளிவா­கவே சகல தரப்­பி­ன­ராலும் உண­ரப்­பட்­டது.
அவ்­வா­றி­ருக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மான இடைவெளி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கும் வடக்­கு­மு­தல்­வ­ருக்­கு­மான நெருக்­கத்தை அதி­க­ரித்­துள்­ளது. மேலும் வடக்கு முதல்­வ­ருக்கும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ள­ருக்கும் இடையில் ஏற்­பட்ட உள்­ளக முரண்­பாடு இன்று வீதிக்கு வந்து விட்ட நிலையில் அம்­மு­ரண்­பாடு தமி­ழ­ரசுக் கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் மற்றும், கூட்­ட­மைப்பின் தலைவர் ஆகிய இரு­வ­ருக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான நெருக்­கத்­தையும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

இதன்­மூலம் இன்று தமிழ்ப் பிர­தி­நி­தித்­து­வத்தின் ஒரு பகுதி மீண்டும் பிரித்­தாளும் தந்­தி­ரத்­திற்குள் சிக்­கி­விட்­டது என்­பது தெளிவாக வெளிப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இரா­ஜ­தந்­திர நகர்­வு­களை முன்­னெ­டுத்து தீர்­வுகளை எவ்­வாறு பெற­மு­டியும் என்ற கேள்வி எழு­கின்­றது. அடுத்­த­தாக புதிய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நல்­லெண்ண சமிக்­ஞையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு காட்­டி­வ­ருகின்­றது. இதனால் கடந்த 10 மாதங்­களில் எவ்­வா­றான நன்­மைகள் பொது­மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கின்­றது? வடக்கு மாகா­ணத்தில் தலை­யி­டி­யா­க­வி­ருந்த ஆளுநர் மாற்­றப்­பட்டார்.

பிர­தம செய­லாளர் மாற்­றப்­பட்டார் என எடுத்­த­வெ­டுப்பில் கூறி­னாலும் அவை தனியே வடக்கு மாகா­ணத்­திற்கு மட்டும் இடம்­பெ­ற­வில்லை. மாறாக இவ்­வா­றான மாற்­றங்கள் புதிய ஆட்­சி­யா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­நேரம் வவு­னியா மாவட்­டத்தில் பெரும்­பான்மை இனத்­தைச்­சேர்ந்த அர­சாங்க அதி­பரை மாற்றும் கோரிக்­கையை ஜனா­தி­பதி, பிர­த­ம­ரி­டத்தில் நேர­டி­யாக முன்­வைத்தும் வடக்கு மாகா­ண­ச­பையில் ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டும் இன்­று­வ­ரையில் அது கைகூ­ட­வில்லை.

மிகச் சிறிய கோரிக்­கை­யான அர­சாங்க அதிபர் ஒரு­வ­ரையே மாற்­ற­மு­டி­யாத நிலையே புதிய ஆட்­சியில் காணப்­ப­டு­கின்­றது. இதற்கு ஒரு­ப­டிமேல் சென்று அர­சாங்­கத்­தினால் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன எனக் கூற­மு­டியும். ஆனால் அந்த காணி­களை விடு­விக்கும் கோரிக்கை எப்­போது முன்­வைக்­கப்­பட்­டது. யார் அதனை முன்­னெ­டுத்­தார்கள். விடு­விக்கும் அனு­ம­தியை யார் வழங்­கி­னார்கள் என ஆட்­சி­யா­ளர்­களும் தமிழ்­மக்­க­ளுக்­கான செயற்­பா­டென வர்­ணிக்கும் தமிழ்ப் பிர­தி­நி­தி­களும் நன்­க­றி­வார்கள். அர­சியல் கைதிகள் விடு­தலை விட­யத்தில் இன்று என்ன நடந்­தி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தால் கூறப்­பட்ட கால அவ­கா­சங்கள் நிறை­வ­டைந்து விட்­டன. தற்­போது டிசம்பர் 15ஆம் திக­தி­வ­ரையில் பொறுத்­தி­ருந்து பார்ப்­போ­மென கைதிகள் அவ­காசம் அளித்­தி­ருக்­கின்­றார்கள். அதற்குள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வி­டயம் சார்ந்து எவ்­வா­றான முடிவை எடுத்­தி­ருக்­கின்­றது? இவ்­வி­டயம் தொடர்­பான அணு­கு­மு­றை­களைச் செய்­வது தொடர்பில் கூட்­ட­மைப்­பினுள் கூடி ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றதா என்றால் இல்லை. குறித்த காலம் வரையில் அர­சாங்கம் நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுக்­காது விட்டால் அடுத்து கூட்­ட­மைப்பு என்ன செய்யும் என்­பது குறித்து கூட திட்­ட­மி­டல்கள் செய்­யப்­ப­ட­வில்லை.

கடந்த முறையே அதி­யுச்ச போராட்­ட­மான ஹர்த்­தாலை வடக்­கு, கி­ழக்கில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் முன்­மு­யற்­சியால் மேற்­கொண்­டா­கி­விட்­டது. ஆனால் ஒரு நாள் வட­கி­ழக்கு முடங்­கி­யதை அர­சாங்கம் கண்­டு­கொண்­ட­தா­கவே தெரி­ய­வில்லை. தமி­ழர்­களின் பிர­தே­சங்­களில் இன்றும் புல­னாய்­வா­ளர்­களின் நட­மாட்டம், இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்­னங்கள், தமி­ழர்­களின் வாழ்­வா­த­ாரப் ­போ­ராட்­டங்கள் உட்­பட பல­வி­ட­யங்கள் மாற்­ற­மின்றி தொடர்­க­தை­யா­கவே இருக்­கின்­றது.

மறு­பக்­கத்தில் சர்­வ­தே­ச­ரீ­தியில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் அதி­க­ரித்­தி­ருக்­கின்ற நிலையில், இலங்கை விவ­கா­ரத்தை சர்­வ­தேசம் தனது தலையில் தொடர்ந்தும் வைத்­துக்­கொள்­ளுமா என்­பது ஐயமே. அதே­போன்று புதிய ஆட்­சி­யா­ளர்கள் சர்­வ­தேச தரப்­புக்­களால் ஏற்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் நட்­பு­ ப­ாராட்­டக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் உள்ள நிலையில் நாட்டு மக்­கள்­தொ­கையில் குறை­வாக உள்ள தேசிய இன­மான தமி­ழர்­க­ளுக்­காக அவர்கள் எவ்­வ­ளவு தூரம் அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிப்­பார்கள் என்­பதும் மற்­றொரு ஐயப்­பா­டா­க­வுள்­ளது.

இவற்­றுக்­கெல்லாம் அப்பால் தமி­ழர்­க­ளுக்­கான நீதி பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான குர­லாக, மீள்­கட்­டு­மா­னத்­திற்­கான சக்­தி­யாக திக­ழ்ந்­து­கொண்­டி­ருக்கும் புலம்­பெயர் அமைப்­புக்­க­ளையும் அர­சாங்கம் தற்­போது தனது வலைக்குள் சிக்­க­வைத்­தி­ருக்­கின்­றது. அண்­மை­யில் ­வெளி­யி­டப்­பட்ட தடை­நீக்க அறி­வித்­தலால் அந்த நகர்வை செவ்­வனே நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது. இதனால் சில­ க­ருத்­தியல் ரீதி­யான, அதி­கார ரீதி­யான வேறு­பா­டு­க­ளைக்­கொண்­டி­ருந்த புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுக்குள் தற்­போது நிரந்­தர விரிசல் ஏற்­பட்­டுள்­ளது.

அது மட்டு­மன்றி புலம் பெயர் அமைப்­புக்­களில் தடை­நீக்கம் செய்­யப்­பட்­டவை எதிர்­கா­லத்தில் அர­சாங்­கத்­துடன் நட்­பு­ற­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. அதே­நேரம் தடை­நீ­டிக்­கப்­பட்­டுள்ள தரப்­புக்கள் எதிர்­ம­றை­யான கருத்­துக்­களை முன்­வைக்­கலாம் அல்­லது அமைதி காக்­கலாம். இதனால் புலம் பெயர் நாடு­களில் தமி­ழர்­க­ளுக்­கான குரல், செயற்­பா­டுகள் பல­வீ­ன­ம­டையக் கூடிய சாத்­தி­யக்­கூ­று­களே அதி­க­மாகத் தெரி­கின்­றது. ஒட்­டு­மொத்­த­மாக பார்க்­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தனித்­த­னி­யாக தலை­மை­யேற்று ஆட்­சியில் அமர்ந்த காலங்­களில் தமி­ழினம் எதிர்­கொண்ட விட­யங்­களை விடவும் தற்­போது இரு கட்­சி­களின் ஆட்­சி­யா­ளர்ளும் ஒன்­று­பட்டு தமி­ழி­னத்­திற்கு வழங்­கப்­போ­கின்ற விட­யங்கள் பல­மா­ன­தா­கவே இருக்கும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை.

அதற்­கான நிகழ்ச்சி நிரல் எப்­போது தயா­ரிக்­கப்­பட்­ட­தென்­பதை அறிய முடி­யாது விட்­டாலும் தற்­போது அது செவ்­வனே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இங்கு ஒரு விட­யத்தைச் சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாக இருக்கும் என்று படு­கி­றது.

ஒரு கிரா­மத்தில் பிச்­சைக்­காரர் ஒருவர் ஒரு வீட்­டிற்குச் சென்று பிச்சை கேட்­கிறார். அப்­பொ­ழுது அந்த வீட்டின் மருமகள் வாசல் அருகில் வந்து கொடுப்­ப­தற்கு ஒன்றும் இல்லை என்று கூறு­கிறார். அதைப்­பார்த்­தி­ருந்த மாமியார் அந்த பிச்­சைக்­கா­ரரை அழைத்து அவர் சொன்­னதைக் கேட்­காதே நான்தான் இந்த வீட்டின் தலைவி நான் சொல்­கிறேன் உனக்குக் கொடுப்­ப­தற்கு ஒன்றும் இல்லை என்று கூறு­கிறார். பின்னர் மாமி­யா­ருக்கும் மரு­ம­க­ளுக்கும் தக­ராறு முற்றி பின் சம­சரம் ஏற்­ப­டு­கி­றது. அதே பிச்­சைக்­காரர் இப்­பொ­ழுது நமக்கு ஏதும் கிடைக்­கலாம் என்ற ஆசை­யுடன் மீண்டும் வரு­கிறார். இப்­பொ­ழுது இரண்­டு­பேரும் ஒரு­மித்த குரலில், ஒன்­று­மில்லை போய்வா என்று கூறு­கின்­றனர்.

தற்­போது தமி­ழர்கள் நலன் சார்ந்த எந்­த­வி­ட­யத்­தையும் கருத்­தி­லெ­டுத்து முன்­ன­கர்த்­து­வ­தற்­கான துளி­ய­ள­வி­லான நிலை­மை­களும் காணப்­ப­ட­வில்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்க்­கட்சி வகி­பாகம் அர­சாங்­கத்தின் தேவையை நிறை­வேற்றி விட்டது. ஆகவே எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கான நல்லெண்ண சமிக்ஞையை விலக்குவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்தாலும் அதனை பொருட்டாக அரசாங்கம் கருதுமா என்பது கூட கேள்விக்குறிதான்.

காரணம். பெரும்­பான்­மைக்­குள்­ளேயே முன்னாள் ஜன­தி­ப­தியை அடி­யொற்றி எதி­ர­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்டு விட்­டது. ஆகவே அவ்­வ­றி­விப்பு விடுக்­கப்­ப­டு­மாயின் பெரும்­பான்­மை­வா­திகள் அந்த அணி­யி­ன­ருக்கு எதிர்க்­கட்சி வகி­பா­கத்தை வழங்­கு­வார்கள் என்­பது நிச்­ச­ய­மா­கின்­றது. ஆகவே புதிய ஆட்­சி­யா­ளர்­களின் சது­ரங்க காய்­ந­கர்த்தல் தமிழ்த் தரப்பின் பக்­கு­வ­மான இரா­ஜ­தந்­திர கரு­மங்­களை கரையொதுக்கியுள்ளது என்பது வெளிப்படையாகின்றது. தற்­போ­தைய நிலையில் தமிழ்த் தரப்பின் இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் என்­பது பேர­லையில் ஒட்­டு­மொத்த தமி­ழி­னத்­தையும் ஏற்­றுக்­கொண்ட துடுப்­பற்று பய­ணிக்கும் கட்­டு­ம­ரத்­திற்கு இணை­யா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

அவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றுபட்­டு கொள்­கை­ய­ள­வி­லான இணக்­கப்­பாட்­டுடன் கூட்­ட­மைப்பை அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்து எதிர்­கால திட்­டங்கள், வெளிவி­வ­கார கொள்­கைகள், பொது­ வே­லைத்­திட்­டங்கள் உட்­பட தமி­ழர்­களின் பிர­தி­நி­திக­ளாகத் திகழ்வதற்கான மறுசீரமைப்புக்களை விரைந்து செய்வார்களா? பெரும்­பான்மை கட்­சிகள் ஒர­ணியில் பய­ணிப்­பது போன்று ஏனைய தமிழ்த் தரப்­புக்­க­ளையும் ஆகக்­கு­றைந்­தது மக்கள் சார் பொது வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக ஒன்­று­ப­டுத்தி பய­ணிப்­பது குறித்த நட­வ­டிக்­கை­களை விரைந்து எடுப்­பார்­களா?

இல்­லையேல் வெளிநாட்டு பிர­தி­நி­திகள் நாட்­டுக்கு விஜயம் செய்யும் தரு­ணங்­களில் மட்டும் கூட்­டாகச் சென்று சந்­தித்து ஒரு­வ­ருக்கு ஒருவர் முரண்­பட்ட வகை­யி­லான கருத்­துக்­களைக் தெரி­வித்­துக்­கொண்டு தமி­ழர்­களின் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னைகள் முதல் அர­சியல் தீர்வுவரை அனைத்­தையும் பெற்­றுத்­த­ரு­மாறு யாசகம் கோரும் நிலை­மை­யி­லேயே தொடர்ந்தும் பயணித்துக்கொண்டு இருக்கப்போகின்றார்களா? இனியும் இத்­த­கைய இரா­ஜ­தந்­திரம் பலிக்கும் என்ற நம்­பிக்­கை­யுடன் இப்­ப­டியே தமிழர் அர­சியல் தொடர்ந்தால் மாற்­று­ வ­ழி­யென்ன? திக்­கற்று நாதி­யற்று நிற்கும் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் பொறுப்பு யாரிடம் உள்­ளது?

மக்கள் மாற்றுத் தலை­மை­ கு­றித்து விரி­வா­கவும் விரை­வா­கவும் யோசிக்கத் தலைப்­பட்­டு­விட்­டார்கள். அதற்­கான நகர்­வு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­ வண்­ண­முள்­ளது. தலைமை வேண்­டு­மென்றால் விவே­க­மா­கவும், வெளிப்­ப­டை­யா­கவும், உறு­தி­யா­கவும், ஜன­நா­யகப் பண்­பு­களை மதித்தும், கட்­ட­மைப்­பு­டனும் செயல்­பட்டு மக்­களின் அபி­மா­னத்தைப் பெற முயலுங்கள். அல்லது ஒதுக்கப்படுவீர்கள்.

'அழிக்கப்பட்ட' 40 புகைப்பட ரோல்கள் : கிழிகிறது நாசாவின் முகத்திரை..!?

நிரூபிக்கப்படாத, ஆதாரமில்லாத ஒன்று 'மறுபடியும் மறுபடியும்' வாதாடப்படுகிறது, சர்ச்சைக்கு உள்ளாகிறது என்றால் அது பொய்யாக இருக்க வாய்ப்பு குறைவு என்பது தான் நிதர்சனம். அப்படியாக உலக வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குறிய ஒரு நிகழ்வுதான் - 'அமெரிக்காவின் முதல் நிலவு பயணம்'. அந்த ஒட்டுமொத்த நிகழ்வே ஒரு நாடகம் என்று வாதாடும் கூட்டம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் அந்த குறிப்பிட்ட நிகழ்வில் ஏகப்பட்ட மர்மங்கள் மறைக்கப்படுகின்றது என்று ஒரு கூட்டம் வாதாடுகிறது. 

inter-21-1453353273.jpg

தற்போது அந்த நிகழ்வு சார்ந்த மர்மங்கள் மறைக்கப்படவில்லை, 'அழிக்கப்பட்டு விட்டது' என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் நாசாவின் விசில்ப்ளோயர் ஆன ஜார்ஜ் லியோனார்ட் (George Leonard)..! 

20-1453302233-1.jpg

நடமாட்டம் :

ஜார்ஜ் லியோனார்ட் தானாக முன்வந்து நிலவில் "வேறு யாரோ இருக்கிறார்கள்" என்ற சர்ச்சைக் கூறிய கருத்தை கூறியுள்ளார் அதாவது நிலவில் வேற்றுகிரகவாச நடமாட்டம் இருக்கிறது என்கிறார். 

20-1453302234-2.jpg

உண்மையான தகவல் :

மேலும் இது சார்ந்த உண்மையான தகவல்களை பல ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மறைக்கிறது அல்லது அழித்து விட்டது என்றும் ஜார்ஜ் லியோனார்ட் கூறியுள்ளார். 

20-1453302235-3.jpg

புகைப்பட ஆய்வாளர் :

ஜார்ஜ் லியோனார்ட் - நாசாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி என்பதும் ஒரு புகைப்பட ஆய்வாளர் (Photo analyst) என்பதும் குறிப்பிடத்தக்கது. 

20-1453302236-4.jpg

நுண்ணிப்பு :

அதிலும் முக்கியமாக நாசா வெளியிட்ட அதிராகப்பூர்வமான நிலவின் புகைப்படங்களை நுண்ணிப்பாக ஆராய்பவர், முடிந்த அளவிலான மர்மங்களை தகர்க்க பார்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

20-1453302238-5.jpg

புத்தகம் :

ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்ட பல புகைப்படங்களை அவர் தனது புத்தகமான சம்படி எல்ஸ் இன் தி மூன்-ல் பிரசுரமாக்கியுள்ளார் (Somebody else in the Moon) என்பது குறிப்பிடத்தக்கது.

20-1453302239-6.jpg

ஒரிஜினல் புகைப்படங்கள் :

நாசாவினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் அளவில் மிகவும் சிறியதாகவும், தற்காலத்திற்கு ஏற்ற ரெசெல்யூசன் தரத்தில் இல்லை என்றாலும் கூட ஒரிஜினல் புகைப்படங்களில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த தவறவில்லை என்கிறார் ஜார்ஜ் லியோனார்ட். 

20-1453302241-7.jpg

மறுப்பு :

மறுபக்கம் மிகவும் மோசமான ரெசெல்யூசன் கொண்ட புகைப்படங்கள் கணிப்புகளை மேலும் மேலும் சிக்கலாகத்தான் மாற்றுகிறது என்று ஜார்ஜ் லியோனார்ட் கருத்துகளுக்கு மறுப்பும் தெரிவிக்கப்படுகிறது. 

20-1453302242-8.jpg

40 ரோல் புகைப்படங்கள் :

வெளியிடப்பட்ட புகைப்படங்கள் ஒருபக்கம் ஆதாரமாய் வாதாடப்பட்டுக் கொண்டிருக்க, சர்ச்சைக்குறிய பெரும்பாலான புகைப்படங்கள் 'அழிக்கப்பட்டு' விட்டன, அதாவது சுமார் 40 ரோல் புகைப்படங்கள். 

20-1453302243-9.jpg

ஆதாரம் :

"அமெரிக்காவின் அப்போலோ மிஷன் சார்ந்த சுமார் 40 ரோல் புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிட்டது" என்று ஓய்வு பெற்ற அமெரிக்க இராணுவ கமெண்ட் சர்ஜெண்ட் மேஜர் ஆன பாப் டீன் (Bob Dean) வெளிப்படையாக கூறிய கருத்து தான் அதற்கு ஆதாரம். 

20-1453302244-10.jpg

அழிக்கப்பட்டு விட்டது :

அதாவது " நிலாவிற்கு விண்கலம் சென்றது, நிலவை சுற்றித் திரிந்தது, நிலவில் விண்வெளி வீரர்கள் தரை இறங்கி அங்குமிங்கும் நடமாடியது போன்ற பல புகைப்படங்கள் அழிக்கப்பட்டு விட்டது" என்று அவர் கூறினார். 

20-1453302246-11.jpg

அரசியல் :

"அவைகள் எல்லாம் நீங்கள் பார்க்க உரிமை இல்லாத, அரசியலால் ஏற்றுக் கொள்ளப்படாத, சமூகத்தின் அடிப்படையால் ஏற்றுக் கொள்ள முடியாத, சீர்குலைக்கும் 'ரோல்'கள்" என்று பாப் டீன் அம்பலப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

20-1453302247-12.jpg

சர்வதேச விசாரணை :

பாப் டீன் கருத்து மட்டுமின்றி, 'நிலவு பயணம் குறித்து' அமெரிக்காவின் மீது சர்வதேச விசாரணை நடத்துமாறு ரஷ்யா கோரியாதும் குறிப்பிடத்தக்க ஒரு சந்தேகமாகும். 

20-1453302249-13.jpg

பதிவாக்கப்பட்ட காட்சிகள் :

அதாவது 1969-ஆம் ஆண்டு நிலவில் அமெரிக்கர்கள் இறங்கிய போது பதிவாக்கப்பட்ட காட்சிகள் பல மறைக்கப்பட்டு விட்டது என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. 

20-1453302250-14.jpg

நிலவு பாறை :

அது மட்டுமின்றி 1969 முதல் 1972 வரையிலாக அமெரிக்கா மேற்கொண்ட நிலவு பயணத்தின் போது சுமார் (தோராயமாக) 400 கிலோ கிராம் எடையுள்ள நிலவு பாறை அமெரிக்காவால் பெறப்பட்டுள்ளது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியது. 

20-1453302251-15.jpg

வேற்றுகிரக வாசம் :

புகைப்படம் மற்றும் பதிவான காட்சிகளோடு சேர்த்து வேற்றுகிரக வாசம் சார்ந்த உண்மைகளும் மறைக்கப்படுகிறது என்பதை ஜார்ஜ் லியோனார்ட் மட்டுமில்லை நிலவில் காலடி பதித்த ஆறாவது மனிதரான டாக்டர் எட்கர் மிச்சலும் நம்புகிறார். 

20-1453302253-16.jpg

உறுதி :

அவர் ஒருமுறை "மனித இனம் மிகவும் தனிமையானதாக இருப்பது எப்படி என்று இத்தனை நாள் அதிசயித்துக் கிடந்தது ஆனால், நம் காலத்திலேயே நாம் தனியாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது" - என்று கூறியது வேற்றுகிரக வாசிகளின் இருப்பை உறுதி செய்கிறது. 

20-1453302254-17.jpg

மர்மங்கள் :

நிலவில் பல மர்மங்கள் உள்ளது என்பதை பிளாஸ்மா விஞ்ஞானியான டாக்டர். ஜான் பிரான்டன்பர்க் (John Brandenburg) நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

20-1453302255-18.gif

செயற்கை :

டாக்டர். ஜான் பிரான்டன்பர்க், நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் கொஞ்சம் கூட பிழையின்றி செயற்கையாக உருவாக்கப்பட்டவைகள் என்று நம்புகிறார்.