Friday 24 June 2016

ஐரோப்பியன் யூனியனில் பிரிட்டன் விலகல்: தலைவர்கள் கருத்து

ஐரோப்பியன் யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதா வேண்டாமா என்பது குறித்த மக்கள் கருத்து ஓட்டெடுப்பு நடந்தது. இதில் விலகுவது என 51 சதவீத மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து ஐரோப்பியன் யூனியன் அமைப்பில் இருந்த பிரிட்டன் வெளியேறியது. மக்களின் முடிவுக்கு மதிப்பளித்த பிரதமர் டேவிட் கேமரூன் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து உலக தலைவர்களின் கருத்து வருமாறு:

பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே:
பிரிட்டன் வெளியேறியதன் மூலம் ஐரோப்பியன் யூனியன் அமைப்பு கடினமான சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இருப்பினும் பிரிட்டன் மக்களின் முடிவை நான் மதிக்கிறேன்.

அமெரிக்க அதிபர் ஒபாமா: பிரிட்டன் மக்களின் முடிவுக்கு அமெரிக்க மதிப்பளிக்கிறது. பிரிட்டன் வெளியேறினாலும், ஐரோப்பியன் யூனியன் அமைப்பு, பிரிட்டன் ஆகியவற்றுடனான அமெரிக்காவின் நட்புறவு என்றுமே தொடரும்.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவரும், பிரிட்டனின் பிரதான அமைச்சருமான நிக்கோலா ஸ்டர்ஜியன்:
பிரிட்டனில் வரலாற்று சிறப்புமிக்க ஓட்டெடுப்பு நடந்துள்ளது. இனி ஸ்காட்லாந்து தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது முறையாக மக்கள் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐரோப்பியன் யூனியன் அமைப்பின் தலைவர் டெனால்டு டஸ்
க்: பிரிட்டன் வெளியேறியது வருத்தமளிக்கிறது. எவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டும் என பிரிட்டன் மக்கள் தங்களின் முடிவை அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது எதிர்பார்த்த ஒன்று தான்.


ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல்:
பிரிட்டன் மக்களின் இந்த முடிவு அந்நாட்டு அரசுக்கு பின்னடைவு. இதன் மூலம் மக்களின் முடிவுக்கு அந்நாட்டு அரசு மதிப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment