Monday 11 July 2016

ஈராக் மீதான சில்கோட் இன் ஆய்வு தீர்ப்பு: பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு போர் குற்றம்

அமெரிக்க தலைமையிலான 2003 ஈராக் படையெடுப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் வகித்த பாத்திரம் பற்றி புதனன்று வெளியிடப்பட்ட சில்கோட் விசாரணை அறிக்கை, அதை ஒழுங்கமைத்து தலைமை கொடுத்த பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா இரண்டினது அதிகாரிகளின் குற்றகரமான பாத்திரம் மற்றும் போரின் சட்டவிரோத குணாம்சத்தை மிகஅழிவுகரமாக நிரூபிக்கிறது.

சேர் ஜோன் சில்கோட் தலைமையிலான இந்த விசாரணை முடிவுகள், அது தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. 2.6 மில்லியன் வார்த்தைகள், 13 தொகுதிகளைக் கொண்ட இந்த அறிக்கை, 2001 மற்றும் 2009 க்கு இடையே பிரிட்டிஷ் அரசாங்கம், இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள் எடுத்த கொள்கை முடிவுகளைக் கையாண்டுள்ளது. இந்த விசாரணைக்கு சட்டபூர்வ அதிகாரங்கள் கிடையாது என்பதுடன், அந்த படையெடுப்பின் சட்டபூர்வதன்மை மீதான எந்தவொரு கண்டுபிடிப்பையும் குறிப்பாக அதை ஸ்தாபித்த கோர்டன் பிரௌன் இன் தொழிற் கட்சி அரசாங்கம் நிராகரித்திருந்தது.

எவ்வாறிருந்த போதினும் அந்த போருக்குப் பொறுப்பானவர்கள், மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூறாயிரக் கணக்கானவர்களின் இரத்தத்தை அவர்களின் கரங்களில் கொண்டுள்ளனர் என்பதை அந்த அறிக்கை தீர்க்கமாக நிரூபிக்கிறது.

இது, உள்ளபடியே அந்த அறிக்கையில் அதிகளவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு, அப்படையெடுப்பிற்கு பிரிட்டனின் தலைமை-பொய்யராக செயல்பட்ட அப்போதைய தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு மட்டும் பொருந்தும் என்பதல்ல. அதன் தொடர்ச்சியாக, அது அப்போரில் அமெரிக்காவின் பிரதான வடிவமைப்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், துணை ஜனாதிபதி டிக் ஷென்னி, பாதுகாப்புத்துறை செயலர் டோனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் மற்றும் ஏனையவர்கள் மீதும், அத்துடன் இப்போதைய நிலையில் ஜனநாயக கட்சியின் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட அதை ஆதரித்த அனைத்து முன்னணி அதிகாரிகள் மீதும் வைக்கப்படும் ஒரு குற்றப்பத்திரிக்கையாக உள்ளது.

ஈராக்கிற்கு எதிராக போர் திட்டங்கள் எதுவும் இல்லையென வெளியில் பகிரங்கமாக கூறிக்கொண்டே, குறைந்தபட்சம் 2002 இன் ஆரம்பத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க-போரை பிளேயர் ஆதரித்திருந்தார் என்பதை அந்த அறிக்கையின் தனிநபர் சாட்சியங்களும், இரகசிய ஆவணங்களும் மற்றும் பிரத்தியேக குறிப்புரைகளும் உறுதிப்படுத்துகின்றன.

மார்ச் 20, 2003 இல் தொடங்கிய படையெடுப்பு, "ஆயுதக்குறைப்புக்கான சமாதான விருப்புரிமைகள்" காலாவதியாகும் முன்னரே நடந்ததாக சில்கோட் குறிப்பிடுகிறார். “அச்சமயத்தில் இராணுவ நடவடிக்கை கடைசியாக நாடப்படவில்லை,” என்றவர் அதிர்ச்சியூட்டும் விதத்தில் குறிப்பிடுகிறார்.
அச்சமயத்தில் ஈராக்கின் சதாம் ஹூசைன் ஓர் "உடனடி" அச்சுறுத்தலாக இருக்கவில்லை, ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை வைத்திருந்தது என்ற வாதங்கள் "நிரூபிக்கப்படவில்லை". “பிழையான" உளவுத்துறை மதிப்பீடுகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் கேள்விக்கு உட்படுத்தப்படாத அவற்றின் அடித்தளத்தில் அந்த படையெடுப்பு தொடங்கப்பட்டதாக சில்கோட் குறிப்பிடுகிறார்.

இத்தகைய உண்மைகளே, அந்த படையெடுப்பு ஒரு அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் யதார்த்தம் இதை விட அதிகமான குற்றங்களை உள்ளடக்கி உள்ளது.

பிளேயர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இடையிலான ஜூலை 2002 கூட்டத்தை நினைவூட்டி, இரகசியமாக வைத்திருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்ட டவுனிங் வீதி குறிப்புரை என்றழைக்கப்படும் ஒன்றும் சில்கோட் அறிக்கையில் உள்ளடங்கி உள்ளது, “பயங்கரவாதம் மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்களின் கலவையைக் கொண்டு நியாயப்படுத்தி, இராணுவ நடவடிக்கை மூலமாக, புஷ் சதாமை நீக்க விரும்பினார். ஆகவே உளவுத்தகவல்களும் உண்மைகளும் அக்கொள்கையைச் சுற்றி ஒழுங்கு செய்யப்பட்டன,” என்பதை அந்த குறிப்புரையில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் தலைவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்த, ஒரு ஆத்திரமூட்டலற்ற போரை நியாயப்படுத்த பொய்யான சாக்குபோக்கு ஒன்று தயாரிக்கப்பட்டு வந்தது.

ஐக்கிய இராஜ்ஜிய இராணுவ நடவடிக்கைக்கான சட்டபூர்வ விடயம் "திருப்திகரமாக இல்லை" என்று சில்கோட் குறிப்பிடுகிறார். அனைத்திற்கும் மேலாக இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இரண்டாவது தீர்மானத்தை பிரான்ஸ் ஆதரிக்கவில்லையென அதை பிளேயர் தாக்கி வந்த போதினும், “உண்மையில் ஐக்கிய இராஜ்ஜியம் தான் பாதுகாப்பு அவையின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தி வந்ததாக நாங்கள் [விசாரணை] கருதுகிறோம்.”

அப்படையெடுப்பு, அதன் அறிவித்திருந்த நோக்கங்களில் தவறி இருந்ததாக அவ்வறிக்கை காண்கிறது. “ஈராக்கிய உள்நாட்டு குழப்பத்தின் அபாயங்கள், ஈராக் அதன் நலன்களை செயலூக்கத்துடன் பின்தொடர்ந்தமை, பிராந்திய ஸ்திரமின்மை, மற்றும் ஈராக்கில் அல் கொய்தா ஆகிய ஒவ்வொன்றும் படையெடுப்புக்கு முன்னதாகவே வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டது,” என்று அது குறிப்பிடுகிறது.

(4,491 அமெரிக்க துருப்புகளுடன் சேர்ந்து) 176 பிரிட்டிஷ் படையினர் கொல்லப்பட்டனர் என்பது மட்டுமல்ல மற்றும் பல ஆயிரக் கணக்கானவர்கள் கொடூரமாக காயமடைந்தார்கள். “ஈராக்கிய மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.” மிகவும் நம்பகமான மதிப்பீடுகளின்படி, போரின் விளைவாக உயிரிழந்த ஈராக்கியர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1 மில்லியனாகும். ஒரு மதிப்பீட்டின்படி 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள். அந்நாடு இரத்தக்களரியான பிரிவினைவாத மற்றும் அதீத பொருளாதார குழப்பத்திலும் மற்றும் கடுமையான சமூக நிலைமைகளிலும் சிக்க வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஹேக் இன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்கொண்டுவரப்பட்ட ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட் ஹபக்போ மற்றும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் போன்றவர்கள் உட்பட வேறு யாருமே பிளேயர் மற்றும் புஷ் ஆல் கொல்லப்பட்டவர்களில் அளவிற்கு ஒரு சிறு பகுதியினரை கொன்றதற்கு கூட பொறுப்பாக இருக்கவில்லை.

சில்கோட் விசாரணையானது கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பின்பற்றிய கொள்கை மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும். அதன் படுகொலை பரிமாணங்கள், பிரிவினைவாத மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பலப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றி உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா மீது நடத்தப்பட்ட பேரழிவுகளில் வெளிப்படையாக உள்ளன.

இந்த விசாரணை முடிவை போதுமானளவிற்கு தெளிவுபடுத்துவதாயின், பிளேயர், புஷ் மற்றும் இன்னும் பலரும் போர் குற்றவாளிகளாவர் என்றுதான் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள், அவர்களது சக-சூழ்ச்சியாளர்களுடன் சேர்ந்து, உடனடியாக விசாரணையை முகங்கொடுக்க வேண்டும்.

இரண்டாம் உலக போரைத் தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நூரெம்பேர்க் விசாரணைகள், அவற்றின் முக்கிய தீர்மானத்தில் தெளிவாகவும், ஐயப்பாட்டிற்கு இடமின்றியும் இருந்தன: அதாவது உடனடியாக நிகழவிருந்த ஆபத்து தொடர்பான அச்சம் இல்லாமல் அரசியல் இலக்கை அடைவதற்கு ஒரு யுத்தத்தை பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றமாகும். தூக்கிலிடப்பட்ட 12 நாஜி குற்றவாளிகளைப் போலவே புஷ் மற்றும் பிளேயரும் அதேயளவிற்கு குற்றவாளிகளாவர்.

போருக்குப் பின்னால் இருந்த நிஜமான நோக்கம் பேரழிவுகரமான ஆயுதங்கள் அல்லது பயங்கரவாதம் பற்றிய அச்சம் கிடையாது, மாறாக மூன்றாம் குடியரசின் தலைவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததைப் போலவே, உலகளாவிய மேலாதிக்கமாக இருந்தது என்பதை மிகத் தெளிவாக தெளிவாக்கும் வகையில் பிளேயரிடம் இருந்து புஷ் க்கு அனுப்பப்பட்ட முந்தைய இரகசிய குறிப்புரைகளை சில்கோட் கண்டுபிடிப்புகள் உள்ளடக்கி உள்ளன. புஷ்ஷிடம் இருந்து பிளேயருக்கு அனுப்பப்பட்டவை வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் இரகசியமாக வைக்கப்பட்டன. அப்படையெடுப்பின் ஒருசில நாட்களுக்குள், பிளேயர், இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை “பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய நிஜமான உலக ஒழுங்கை" ஸ்தாபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அறிவித்து, ஆர்ப்பரித்தார்.

இவ்வறிக்கை தொடர்பான ஈராக் சண்டையில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களின் குடும்பங்களில் பலரது பிரதிபலிப்புகள் குறிப்பிட்டு கூறும்படியானதாக உள்ளது. 2005 இல் ஈராக்கில் தனது சகோதரரை இழந்த சரா ஓ'கொன்னொர் கூறுகையில், “இந்த உலகின் ஒரு பயங்கரவாதியை உலகம் அறிந்து கொள்ள வேண்டும், அவரின் பெயர்தான் டோனி பிளேயர், உலகின் மிக மோசமான பயங்கரவாதி,” என்றார்.

பாஸ்ராவில் தன் மகன் மாத்தீவை இழந்த ரோஜர் பேகன் கூறுகையில், “பிரிட்டிஷ் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கும் வகையில் மற்றும் சாதகமான முடிவுகள் இன்றி ஒரு நாடே நாசமாவதற்கு இட்டுச் செல்லும் வகையில் மீண்டும் ஒருபோதும் இந்தளவிற்கு தவறுகள் செய்யக் கூடாது,” என்றார்.

2007 இல் கொல்லப்பட்ட கெவின் இன் தந்தை மார்க் தொம்சன் கூறினார், பிளேயர் "என்ன செய்தாரோ அவை ஒவ்வொன்றுக்காகவும் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். அதுவொரு சட்டவிரோதமான போர். என் மகன் வீணாக கொல்லப்பட்டார். அவர் காரணமின்றி கொல்லப்பட்டார்.”

உளவுத்தகவல்களை "அவர் தனக்கு சாதகமாக்கி, திரித்துக் கொண்டிருந்தார்" என்பது பிளேயருக்குத் தெரியும் என்று ரெக் கீஸ் தெரிவித்தார், இவரது மகன் தோமஸ் உம் கொல்லப்பட்டிருந்தார். அதேவேளையில் எடி ஹான்கோக், இவரின் மகன் ஜேமி உம் கொல்லப்பட்டிருந்த நிலையில், “மிகக் குறைந்தபட்சம்" "வாழ்க்கை முழுவதிற்கும் பொது பதவிகள் வகிப்பதை எந்தவொரு வடிவத்திலும்" பிளேயருக்கு "தடைவிதிக்க வேண்டும்" என்று அழைப்புவிட்டார்.

அத்தகைய நேர்மையான மற்றும் மற்றும் இதயப்பூர்வமான கருத்துக்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் விடையிறுப்புடன் கூர்மையாக முரண்படுகின்றன, இவர்கள் விசாரணையின் முடிவுகளை மூடிமறைத்து, எதிர்காலத்தில் இன்னும் நிறைய திறன்மிகுந்த போர்களை நடத்துவதற்கான ஒரு கட்டமைப்புக்குள் அதை திருப்ப முயற்சித்து வருகிறார்கள்.

ஈராக் விளைவு என்னவாக இருந்தாலும், “அந்த தலையீடு எப்போதுமே பிழையானது தான் என்று முடிவெடுப்பது தவறானது” என்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் வாதிட்டார்.

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் இவர்கள் அனைவருக்கும் மிகவும் கோழைத்தனமான அனுதாபியாக இருந்தார். ஈராக் மீது படையெடுக்கும் "நாசகரமான முடிவைக்" குறித்து புலம்பிய அவர், அது தொழிற் கட்சியின் மீது ஒரு "கரும்புள்ளியை" ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் பிளேயரை தொழிற் கட்சியிலிருந்து நீக்குவதை விவாதிக்க வேண்டுமென்பது ஒருபுறம் இருக்கட்டும், பிளேயரின் பெயரைக் கூட கோர்பின் குறிப்பிட விரும்பவில்லை.

இது, அந்த அறிக்கைக்கு பிளேயரின் திமிரான மற்றும் ஆக்ரோஷமான விடையிறுப்புக்குப் பாதை அமைத்து கொடுத்தது, அதில் அவர் கடந்தகால குற்றங்களை மட்டும் நியாயப்படுத்த முயலவில்லை, மாறாக புதிய குற்றங்களையும் நியாயப்படுத்த முனைந்தார். “என்னுடைய மதிப்பீட்டில், சதாம் ஹூசைன் இல்லாத இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருந்தது, இருக்கிறது" என்றார்.

அவரது டெக்சாஸ் பண்ணையில் இருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பிளேயரின் கருத்துக்களையே எதிரொலித்தார். “சதாம் ஹூசைன் இல்லாமல் முழு உலகமும் சிறப்பாக இருக்கிறது" என்று அறிவித்தார்.

இத்தகைய வெறிபிடித்த சமூகவிரோத கொலைகாரர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், அவர்களின் போரால் உயிரிழந்த 1 மில்லியன் மக்கள் இல்லாமல் "உலகம் சிறப்பாக" இருக்கிறதாம்.

இந்த விசாரணை கண்டுபிடிப்புகளுக்கு புஷ் மற்றும் பிளேயரின் விடையிறுப்பு மட்டுமின்றி, மாறாக அட்லாண்டிக் இன் இரண்டு தரப்புகளிலும் உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் விடையிறுப்பும் என்ன வெளிப்படையாக தெளிவாக்குகிறது என்றால், உண்மை மற்றும் நீதிக்கான போராட்டமும் மற்றும் ஈராக்கிய மக்களுக்கான நஷ்டஈடும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் மட்டுமே தொடர முடியும் என்பதாகும்.

சில்கோட் அறிக்கை, மத்திய கிழக்கில் மட்டுமல்ல, மாறாக அத்துடன் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும் அதிகரித்தளவில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பின்புலத்திற்கு எதிராகவும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவினது ஆராய்ச்சிகளின் கடந்த ஏழு ஆண்டுகளின் போது ஒரு மூன்றாம் உலக போருக்கான தயாரிப்புகள் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

“போருக்கு எதிரான போராட்டம், சமூகத்தின் மிகப் பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பின்னால் மக்களின் சகல முற்போக்கான கூறுபாடுகளையும் ஐக்கியப்படுத்துவதன் அடிப்படையில் அமைக்க வேண்டும்,” என்று பெப்ரவரி 18, 2016 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரசுரிக்கப்பட்ட"சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையின் இன்றியமையாத தீர்மானத்தையே இந்த விசாரணையின் படிப்பினைகள் உறுதிப்படுத்துகின்றன.

நேட்டோ உச்சிமாநாடு கூடவிருக்கும் நிலையில் ஜேர்மன் மறுஆயுதபாணியாவதற்கு மேர்க்கெல் அழைப்பு விடுக்கிறார்

இந்த வார இறுதியில் வார்சோவில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெறவிருப்பதை ஒட்டி, சான்சலர் அங்கேலா மேர்கெல் (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) நாடாளுமன்றத்திற்கு அளித்த ஒரு அரசாங்க அறிக்கையில் ஜேர்மனி மறுஆயுதபணியாகலை முடுக்கி விடக் கோரினார். அடுத்த ஆண்டில் சுமார் இரண்டு பில்லியன் யூரோக்கள் வரை இராணுவ நிதி ஒதுக்கீடை விரிவுபடுத்துவது, அத்துடன் 2018க்குப் பின்னர் “கூடுதலாய் 2.5 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான” தொகையை ஒதுக்குவது ஆகியவை தவிர, ஜேர்மன் முப்படைகளும் (Bundeswehr) நேட்டோவுக்கு இணையாக ஈராக், சிரியா, லிபியா, மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டும் என்று மேர்கெல் அறிவித்தார்.

வார்சோவில் அறிவிப்பதற்கு நேட்டோ திட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற ரஷ்யாவுக்கு எதிரான போர்த் தயாரிப்புகளுக்கான நியாயப்படுத்தல் சான்சலரின் உரையின் மையத்தானத்தில் இடம்பிடித்திருந்தது. வேல்ஸில் 2014 இல் நடந்த சென்ற உச்சிமாநாட்டில் நேட்டோ ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்த “ஆயத்த நடவடிக்கை திட்டம்” என்று அழைக்கப்படுகின்ற ஒன்றை ஆரம்பத்தில் இருந்தே மேர்க்கெல் புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக மேர்க்கெல், “கூட்டணிப் பிராந்தியமெங்கிலும் நிலைநிறுத்தப்படத்தக்க ஒன்பது நேட்டோ அதிவேக தலையீட்டுப் படைகள், அதிஉயர் ஆயத்த கூட்டுச் செயல் படை என்பதான ஒன்று மற்றும் நமது கிழக்கத்திய நேட்டோ கூட்டாளிகளின் படை ஒருங்கிணைப்பு அலகுகளைக் கட்டியெழுப்புவது” ஆகியவற்றை புகழ்ந்தார்.

“இந்த நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி “கணிசமான ஒரு பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது” என்றார். வார்சோவில் “வேல்ஸில் ஒப்புக்கொள்ளப்பட்ட கூட்டணியின் தகவமைவு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட இருக்கின்றன”. அடிப்படையாக, “நேட்டோ பால்டிக் அரசுகளிலும் போலந்திலும் தனது பிரசன்னத்தை அதிகரிக்க வழி செய்துதருவது” இதில் இடம்பெற்றிருக்கும். “துருப்புகளை விரைவாக நகர்த்தும் திறன் பெற்றிருப்பது மட்டுமே” போதுமானதல்ல என்பதால் இந்த “மேம்பட்ட முன்னோக்கிய பிரசன்னம்” என்று அழைக்கப்படுவது முக்கியமாகிறது. மாறாக “அங்கு ஏற்கனவே போதுமான உள்ளூர் பிரசன்னம்” இருந்தாக வேண்டும்.

இத்திட்டங்கள் “ஒரு பலபரிமாண பல இணைப்புக்கொண்ட பிரசன்னத்தை” எதிர்நோக்குவதாக மேர்கெல் கூறினார். “பால்டிக் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் அத்துடன் போலந்திற்கும்...அங்கு நேட்டோ பிரசன்னம் தொடர்வதை உறுதிசெய்வதில் ஒரு கூட்டணி நாடு முன்னிலை வகிக்கும்”. அநேகமாக லித்துவேனியா தான் ஜேர்மனிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கூட்டாளி நாடாக இருக்கலாம்.

அவசியப்பட்டால் புதிய படையணிகள் பயன்படுத்தப்படும் என்பதை மேர்க்கெல் தெளிவாக்கினார். “கலப்பு அச்சுறுத்தல்கள் என்று அழைக்கப்படுகின்ற, அதாவது, உக்ரேனில் ரஷ்யா பின்பற்றியதையொத்த சூழல்களுக்கான பதிலிறுப்பையும்” இந்த அணுகுமுறை விருப்பத்துடன் உள்ளடக்கியிருந்ததாக அவர் வலியுறுத்தினார்.

உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஜேர்மனியும் அமெரிக்காவும் ஆதரவளித்தது முதலாகவே, ஜேர்மன் அரசியல்வாதிகளும் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளும் கிழக்கில் ஒரு இராணுவ பலவந்தத்தையும் அத்துடன் ரஷ்யாவைச் சுற்றிவளைப்பதையும் நியாயப்படுத்துவதற்காக “ரஷ்ய மூர்க்கத்தனத்தில்” இருந்து பாதுகாப்பதற்கான நேட்டோவின் பொறுப்பு என்ற மந்திரத்தை தொடர்ந்து சிரத்தையாக உச்சாடனம் செய்து வருகின்றனர்.

நேட்டோவில் 29வது உறுப்புநாடாக மொண்டெநெக்ரோ விரைவில் இணையவிருப்பதை மேர்கெல் தனது உரையில் முகமலர வரவேற்றார். மேலும் ஏற்கனவே ரஷ்யாவுடன் ஒரு அறிவிக்கப்படாத இராணுவ மோதலில் இருக்கக் கூடியதும் நேட்டோவில் இணைவதற்கு அறிவிக்கப்பட்ட நோக்கத்தையும் கொண்டிருக்கின்ற ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் ஆகிய இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து “நேட்டோ-ஜோர்ஜியா குழு மற்றும் நேட்டோ-உக்ரேன் குழுவின் சந்திப்புகள்” வார்சோவில் நடைபெறவிருக்கின்றன.

போலந்திலும், ரோமானியாவிலும் அமெரிக்கா இப்போது கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் புதிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கு மேர்க்கெல் ஆதரவை வெளிப்படுத்தினார். “கூட்டணிப் பகுதியில் மக்களை மேம்பட்ட வகையில் பாதுகாப்பதற்கு...மேலதிகமான முக்கியமான நடவடிக்கை” என்று அவர் இதனை அழைத்தார்.

அபத்தமான வகையில், நேட்டோவின் தற்காப்பு இராணுவப்பெருக்க மூலோபாயத்தை “ஆழமான தற்காப்பு கருத்தாக்கம்” என்று மேர்கெல் வருணித்தார். “தற்காப்பு இராணுவப்பெருக்கமும் பேச்சுவார்த்தையும்” ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை அல்ல, மாறாக “பிரிக்கமுடியாதவை” ஆகும் என்று அவர் கூறிக் கொண்டார். நேட்டோவுக்குள்ளாக இதில் “உடன்பாடு” நிலவுவதாக அவர் கூறினார். இதுதவிர, “ஐரோப்பாவில் நீடித்த பாதுகாப்பு என்பது, ரஷ்யாவுடன் இணைந்து மட்டுமே சாதிக்கப்பட முடியும், எதிராக செயல்பட்டு அல்ல” என்றார் அவர்.

உண்மையில், நேட்டோ ஸ்தாபகத்தின் பிரிவுகள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு மூர்க்கமான போரின் சாத்தியத்தைக் குறித்து ஏற்கனவே விவாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க இராணுவ மூலோபாயவாதியான ஹார்லன் உல்மான், “ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கு அமெரிக்கா திட்டமிடுகிறதா?” என்ற தலைப்பில் UPI செய்தி நிறுவனத்திற்கு எழுதிய ஒரு சமீபத்திய கட்டுரையில், பிரிட்டனில் நடந்த ஒரு இராணுவக் கருத்தரங்கில் அமெரிக்காவின் தளபதி ஒருவர் “தற்காப்புக்காக இராணுவத்தைப் பெருக்குவதும் அவசியமானால் ரஷ்யாவைப் போரில் தோற்கடிப்பதும்” அமெரிக்க இராணுவத்தின் உயர்மட்ட முன்னுரிமையாக இருந்தது என்று கூறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Die Zeit இன் சமீபத்திய பதிப்பில், நேட்டோவின் உள்ளக ஆவணங்களின் அடிப்படையிலான ஒரு கட்டுரையில், மத்தியாஸ் நாஸ், இராணுவக் கூட்டணியானது “தற்காப்பு அணுஆயுதப் பெருக்கத்திற்கு” திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அது “பால்டிக் அரசுகளில் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு அணுஆயுத வெடிதிரியை அமைக்க” விரும்புவதாகவும் எழுதுகிறார். ”வார்சோ முடிவுகள் ரஷ்யாவில் வன்முறையான எதிர்வினைகளை — அணுஆயுத சக்திபடைத்த Iskander ஏவுகணைகளை Kaliningrad பகுதியில் நிறுத்துவதில் தொடங்கி மத்திய-தூர அணு சக்திகள் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது வரையிலும் — தூண்டும்” என்பது ஏற்கனவே தெளிவாக இருக்கிறது.

நேட்டோவின் போர்க் கொள்கைகளுக்குப் பின்னால் மேர்க்கெல் முழுமையாக ஆதரித்து நிற்கின்றார் என்கிற அதேவேளையில், பெருங்கூட்டணிக்கு இடையிலான வேறுபாடுகளும் நாடாளுமன்ற விவாதத்தில் காணக்கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் மூர்க்க நடவடிக்கைகள் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் உலகின் மற்ற பிராந்தியங்களிலும் ஜேர்மனியின் புவிமூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கான ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாகவே பெருமளவில் கருதுகின்றனர்.

“100,000 படைவீரர்கள் வரையான பெருமளவு ரஷ்ய இராணுவ உத்திகள்” குறித்து “தெளிவான பதில்கள்” வேண்டும் என்று SPD இன் நாடாளுமன்றத் தலைவரான தோமஸ் ஓப்பர்மான் கோரினார். அதேசமயத்தில் “மீண்டும் பனிப்போரின் பொறிமுறைக்குள் விழுந்து விடுவதற்கு” எதிராகவும் அவர் எச்சரித்தார். “இந்த நாசகரமான சுற்றில் நாம் மீண்டும் விழுந்து விடாமல் இருப்பதை” உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்தார். ஆயுதப் போட்டி என்பது “ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும், தேவைகளில் கடைசியாகத் தான் இருக்க முடியும்” என்றார் அவர்.

“ரஷ்யாவை நோக்கிய படிப்படியான அணுகுமுறை”க்கு ஓப்பர்மான் விண்ணப்பித்தார். “விளாடிமிர் புட்டின் தரப்பில் உண்மையான விட்டுக்கொடுப்புகள்” இருந்தால், தடைகளை அகற்றுவதற்கான வாய்ப்பிருப்பதை - சென்ற வாரத்தில் தான் ஐரோப்பிய ஒன்றியம் அதனை நீட்டித்திருந்தது - ஓப்பர்மான் உறுதிசெய்தார். தன்னளவில் “அவற்றோடு முடிந்து விடுவதல்ல” என்றார் அவர். தவிரவும் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் “இராணுவ அணிவகுப்புகளையும் இராணுவ உத்திகளையும் மட்டும் கொண்டு நீங்கள் பாதுகாப்பை வென்றுவிட முடியாது” என்று கூறியது ”முற்றிலும் சரியானது” என்றார். “அமைதி என்பது வெறுமனே இராணுவ வலிமையால் மட்டும் அடைந்து விடக் கூடியது அல்ல என்று சுட்டிக்காட்டியதற்காக அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

ஸ்ரைன்மையர் ஆலோசனையளிப்பது ஒரு “அமைதிக் கொள்கை”யை அல்ல என்பது ஓப்பர்மானுக்கு நன்றாகவே தெரியும். ஒரு அகன்ற வெளியுறவுக் கொள்கைக்கும் உலகெங்கிலும் ஜேர்மனிக்கான இராணுவப் பாத்திரத்திற்கும் அவர் பல வருடங்களாய் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜூன் 13 அன்று வெளியுறவு விவகாரங்கள் இதழில் “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். ஜேர்மனியை ஒரு “பெரும் ஐரோப்பிய சக்தி”யாக வருணிக்கும் அக்கட்டுரை அமெரிக்காவிடம் இருந்து ஜேர்மனியை தள்ளி நிறுத்திக் கொண்டதோடு உலக அரசியலில் ஒட்டுமொத்த தலைமைக்கும் அமெரிக்கா உரிமை கோருகின்ற நிலையை சவால்செய்தது.

நாங்கள் அச்சமயம் கருத்திட்டோம், “மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை மறுபங்கிடுவதற்கான போர்களுடன் ரஷ்யா மற்றும் சீனா மீதான சுற்றிவளைப்பும் சேர்ந்து ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயே மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதை ஸ்ரைன்மையரின் இந்தத் திடீர் பாய்ச்சல் தெளிவாக்குகிறது. கூட்டாளிகளாய் இருந்தபோதும் அமெரிக்காவும், ஜேர்மனியும் போட்டியான பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைக் கொண்டவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதறலும் - பிரிட்டன் விலகினால் இது இன்னும் வேகம்பிடிக்கும் - அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் எழுச்சியும் இந்த மோதல்களை இன்னும் உக்கிரமாக்கும்.”
இடது கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான சாரா வாகன்கினெக்ட், அமெரிக்காவிடம் இருந்து மிக அதிக தூரம் விலகி வந்ததோடு ரஷ்யாவுடன் கூட்டணி வைக்கவும் ஆலோசனையளித்தார். எதிர்க்கட்சித் தலைவராக மேர்க்கெலை தொடர்ந்து அவர் பேசினார்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர்த் தயாரிப்புகளை கடுமையாக விமர்சனம் செய்த சாரா வாகன்கினெக்ட், ஜேர்மனி அமெரிக்காவையே சாத்தியமான எதிரியாகக் கருத வேண்டும் என்று வேண்டினார். 2015 நவம்பரில் காலமான முன்னாள் சான்சலர் ஹெல்முட் ஸ்மித் (SPD), “இன்று அதிகமான அபாயம் ரஷ்யாவைக் காட்டிலும் அமெரிக்காவிடம் இருந்தே வருகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் விடயங்களில் அதிக வித்தியாசம் இருக்கப் போவதில்லை, வெள்ளை மாளிகை ஒரு அரைக் கிறுக்கராலோ அல்லது அமெரிக்க இராணுவ ஆயுத செல்வாக்கு குழுவின் கைப்பாவையாலோ தான் கைப்பற்றப்பட்டிருக்கும்” என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததாக சாரா வாகன்கினெக்ட் அப்போது கூறினார்.