Wednesday 25 October 2017

தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.


ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும்.
கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே
இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
– சயம்பன்
– சயம்பனின் மருமகன் யாளிமுகன்
– ஏதி
– ஏதியின் மகன் வித்துகேசன்
– வித்துகேசனின் மகன் சுகேசன்
– சுகேசனின் மகன் மாலியவான்
– மாலியவான் தம்பி சுமாலி
– குபேரன்

இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.

ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.
இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை (தற்போதைய தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை )தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்
சரி எப்படி இந்த கதையை நம்புவது ?
அதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை. (இவற்றை நான் ஏற்றகனவே பதிவிட்டுள்ளேன்) இவை யாரால் உருவாக்கப்பட்டவை ?
தமிழ் மன்னர்களான மூதசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைவர்கள் எனினும் அவர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள். இராஜராஜ சோழனும் , பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் . இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர் நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா ? அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல் ஆட்சிசெய்த , அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த , அவர்கள் வழிபடவும் , அவர்களைக் காக்கவும் , தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய தமிழன் , சிவ பக்தன்.இராவணன் மனைவி பெயர் மண்டோதரி என்றுள்ளது. கதைகளிலும் அப்படித்தான். அவர்களது இயற்பெயர் வண்டார்குழலி.
இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா
இராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிஷணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும் , அவன் தனது ஆட்சிமையத்தை களனிக்கு மாற்றப்பட்ட்து களனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது
இராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்தது இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருக்கிறது
5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களால் வரையப்பட்டவை. இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தது சிங்களம்.
சிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய ” நெற்றிப் பொட்டுகளை “, சுரண்டி அழித்தது.
இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது. பலதரப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் இராவணன் மீது இருந்தாலும் நாட்டில் நல்லாட்சி இடம் பெற்றதாக கூறப்படுகிறது…..
பரராசசேகரன் உலா
வையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி
கைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்
வைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு –
மாதகல் மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna – 1884 – S.Kasishetty
Jaffna Today and Yesterday – 1907 – Duraiyappa Pillai
History of Jaffna – 1912 – Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை
Ancient Jaffna – 1926 – Rajanagam
Critiques of Jaffna – 1928 – Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon – நவரட்ணம்
Kingdom of Jaffna – 1978 – Pathmanathan
Early Settlements in Jaffna – Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்
இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதி உள்ளார்கள்.
பதிவுகளைத் தேடிப்பார்த்தால் கிடைத்தவை ….
“இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.
முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இராவணன் காலத்து ஆலயங்கள்
திருக்கேதீசுவரம் 1930களில்
இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன். “வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது.
சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.
இதைவிட…..இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது. இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது.

இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம். இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும்.
இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன். இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன.
உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.
திருக்கேதீசுவரம் இன்று
இராவணன் வெட்டு
படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.
சிகிரியாக் குன்றம்
சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.
இராவணன் ஆட்சி
மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன.
இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம். புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன.
அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது.
இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:- –
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது. – ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்
பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள்.
எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் – சயம்பன் – சயம்பனின் மருமகன் யாளிமுகன் – ஏதி – ஏதியின் மகன் வித்துகேசன் – வித்துகேசனின் மகன் சுகேசன் – சுகேசனின் மகன் மாலியவான் – மாலியவான் தம்பி சுமாலி – குபேரன்
இராவணன் ஆட்சி
அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான்.
இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் இல்லையாம்; அமைச்சர் சம்பிக்க கண்டுபிடிப்பு சிங்களவர் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் ‘இர ஹந்த நெகி ரட்ட’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது வரலாற்று சின்னங்களை சிங்களவர்கள் தமதுயையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் ராவணன் சிங்கள இனத்தவன் என்று வந்தேறிகளான சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல வெளிக்கிட்டு விட்டார்கள் தமிழ் இனமே விழித்துக்கொள் சிங்களவர்கள் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல் மகாவம்சம் பல பொய்கள் நிறைந்த வரலாற்று மதிவு என்பதை மைச்சர் சம்பிக்க ஏற்றுக்கொள்வார முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரியா நாடு இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும் நாகரும் ஆவார் ஆரிய மொழி இலங்கையில் அறியப்படுயதட்கு முன்பு தமிழ் மொழியைத்தான் பேசிவந்துள்ளனர் தமிழர்கள்தான் இலங்கையின் பூர்விக குடிமக்கள் சிங்களவர்களின் மொழி ஆரிய தமிழ் கலப்பு மொழி சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதற்கு பல பொய்கள் நிறைந்த மகாவம்சம் சாட்சியாக இருக்கின்றது இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது.
இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே சைவசமயம் முக்கியமாக இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது.
அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறத ு. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும் விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவா வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர் பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவா ஆலயங்களுக்கு பூசைகள் செய்ததாக அறியமுடிகிறது.

Sunday 15 October 2017

வெவ்வேறு அளவீட்டுக் கருவிகளை பயன்படுத்த வேண்டும்

தமிழ் மக்களின் வாழ்வியலைப் பொறுத்த வரை அவர்களின் உரிமைக்கான அகிம்சைப் போராட்டம் என்பது ஒருபோதும் ஓயப்போவ தில்லை என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கான உரிமை களை, அதிகாரங்களை மனப்பூர்வமாக வழங்க மாட்டார்கள் என்பதுதான்.
ஆகையால் இலங்கை அரசுகளிடம் இரு ந்து எதைப்பெறுவதாக இருந்தாலும் அதற் காக 

அகிம்சைப் போராட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதில் ஒன்றுதான் நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய மெத்தனப் போக்கு கைதிகளின் உயிருக்கும் வாழ்வுக்கும் ஆபத்தாகி வருகிறது.

எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் தங்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ள னர். இதற்கு ஆட்சியாளர்கள் உரியமதிப்பை அளிப்பார்களா? என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

எனினும் உலக நாடுகளின் அவதானத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் முதன் மைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை மட்டுமே நாம் இங்கு கூறிக்கொள்ளலாம்.

இவை ஒருபுறம் இருக்க, நாம் முன்னெடுக்கும் போராட்டம் என்பதும் பொருத்தப்பாடாகவும் ஏற்புடையதாகவும் அமைவதை உறுதிசெய்வதும் தமிழ் சமூகத்தின் தலையாய கடமையாகும்.

அவ்வாறான பொருத்தப்பாட்டுக்கு நாம் இடம்கொடுக்காவிட்டால், அதன்விளைவு எதி ரானதாக அமைவதுடன் அத்தகைய போராட்டங்களை மக்கள் நிராகரிக்கத் தொடங்குவர்.
அதேவேளை போராட்ட முறைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாய மானதாகும். 

ஒரே அளவீட்டுக் கருவி கொண்டு எல்லாப் பொருட்களினதும் அளவீடுகளைச் செய்வது எந்தளவுக்கு பொருத்தம் இல்லையோ அதே போன்று ஒரு போராட்ட வழிமுறையை எல்லா வற்றுக்கும் பிரயோகிப்பதும் பொருத்தமற்றதாகும்.

எனவே நடைபெறும் நிகழ்வு, நிகழ்வின் ஏற் பாட்டாளர்கள், அதன் பற்றுநர்கள், விருந்தினர் களாகக் கலந்து கொள்பவர்கள், அந்த நிகழ்வால் நம் தமிழ் சமூகத்துக்கு கிடைக்கக்கூடிய சாதக பாதகத் தன்மைகள் எனப் பல விடயங்களையும் ஆய்ந்தறிந்து போராட்ட வழிமுறை களைத் தெரிவு செய்ய வேண்டும்.

சில இடங்களில் எதிர்ப்புக்குரியவரை வர வேற்று ஆதரவு தெரிவித்து நம் இலக்கை நிறைவேற்றுவது கூட ஒரு வகையான போரா ட்ட தந்திரோபாயம் எனலாம்.
இதுதவிர, ஒரு போராட்ட வழிமுறைகளை நாம் மேற்கொள்ளும்போது அது எதிரான விளைவைத் தந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் கட்டாயமானதாகும்.

அதாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­வுக்குக் காட்ட முடியாத போராட்டத்தை ஜனாதிபதி மைத்திரிக்கு காட்ட முற்படும்போது அது போராட்டம் நடத்தும் இனக் குழுமத்துக் குள்ளேயே விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதுடன் சம்பந்தப்பட்ட தலைவரும் நமக்கு எதி ரான சில தீர்மானங்களை எடுத்துவிடலாம்.
எனவே இது விடயத்திலும் கவனம் செலு த்தி போராட்ட அடையாளங்களைச் சரிபார்த்து அதனை நமக்குச் சாதகமாக்குவது மிக மிக அவசியமாகும். 

valampurii

Monday 9 October 2017

இன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா?

1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் எதிர்த்தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்கின்றனர்.



அவர்களில் ஒருவராக முன்னரங்கில் விடுதலைப் புலிகள் போராளிகளில் ஒருவராகத் திலீபன் நிற்கிறான். அப்போது அவன் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக இருந்தான். அப்போது கிட்டு விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாக இருந்தார். அக் காலகட்டத்தில் தமிழீழ அரசியற் பொறுப்பாளர் என்று தேசந்தழுவிய பொறுப்புநிலை விடுதலைப்புலிகள் அமைப்பில் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு துறைப் பொறுப்பாளர்களும் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கீழேயே செயற்பட வேண்டும். திலீபன் தளபதி கிட்டுவின் பொறுப்பின் கீழேயே இயங்கி வந்தான்.
பலாலியில் வெளியேறிய இராணுவத்துடனான சமரில் திலீபன் படுகாயமடைகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறான். மருத்துவர்கள் அவனது உயிரைக் காப்பாற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது குடற்பகுதி கடும் சேதமடைந்திருந்தமையால் குடலின் ஒருபகுதியை மருத்துவர்கள் அகற்றி விடுகிறார்கள். சிறிதுகால ஓய்வின் பின்னர் திலீபன் குணமடைந்து மீண்டும் தனது பணியை தொடர்கிறான்.
திலீபன் காயமடைந்தமையால் மிகவும் மனவேதனையடைந்திருந்த திலீபனின் நண்பர் ஒருவர் அவனிடம் மனந்திறந்து பேசுகிறார்.
«விடுதலைப்புலிகள் அமைப்பில் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு திறமையுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியல் நடவடிக்கைகளில் திறமையுள்ளவர்கள் குறைவு. நீ கட்டாயம் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக களமுனைக்கு போக வேண்டியது அவசியம்தானா? உனக்கு உயிராபத்து ஏற்பட்டால் அதனை ஈடு செய்வது இலகுவானதில்லையே!» நண்பர் தனது கவலையை வெளியிடுகிறார்.

«நான் உண்மையானவனாக இருக்க விரும்பிறேன். இயன்றளவு தூய்மையானவனாகவும் இருக்க விரும்புகிறேன். மனித மனம் இலகுவில் அலைபாயக்கூடியது. போர்க்களம் மனித வாழ்வின் நிலையாமையை எப்போதும் வெளிப்படுத்தும். ஒவ்வொரு முறையும் சமர்க்களத்துக்கு சென்று மீள்கையில் நான் பக்குவப்பட்டவனாக வளர்ந்து வருவதனை என்னால் உணர முடிகிறது. நான் மிக மனவிருப்பத்துடனேயே போர்க்களத்துக்குப் போகிறேன்.திலீபன் இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தனது பாணியில் இயல்பான புன்முறுவல் செய்கிறான். தனது நண்பனின் முதுகில் செல்லத்தட்டுத் தட்டுகிறான். பின்னர் பேசுகிறான்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தன்னை அரசியல் இராணுவத் துறைகள் என இரு வேறுபட்ட துறைகளாக ஒழுங்கமைக்கவில்லை. இரண்டும் இணைந்த அமைப்பாகவே இயக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளைச் செய்தாலும் எல்லோரும் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். இன்னும் உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு வெற்றிகரமான அரசியல் பொறுப்பாளராக இருக்க வேண்டுமானால் இராணுவ நடவடிக்கைகளில் முன்னிற்பவனாக இருக்க வேண்டும்»
இது திலீபனின் தனது நண்பனிடம் வெளிப்படுத்திய கருத்து. உணர்வும் உண்மையும் நிரம்பிய வார்த்தைகள் இவை. இவற்றை பொதுவெளியில் திலீபன் பேசியதில்லை. ஒரு தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பேசுவது அறம் சார்ந்ததுதானா என்ற கேள்விக்கும் இங்கு இடமுண்டு. இருந்தும் தற்போதய அரசியல் சூழலில் திலீபனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு உரிய சில விடயங்களையாவது உணர்ந்து கொள்வதற்கு இவ் உரையாடல் உதவும் என்ற நோக்குடன் உரிய அறநெறி சார்ந்து பொறுப்புணர்வுடன்தான் இது இங்கு பகிரப்படுகிறது. விடுதலை இயக்கங்களில் இருந்த போராளிகளுக்குத் தெரியும். பொதுவெளியில் பேசாத முக்கியமான பல்வேறு விடயங்கள் போராளிகளின் வீரச்சாவோடு மறைந்து போயிருக்கும். உயிரோடு இருப்பவர்கள் அவற்றை இப்போதும் அவர்கள் தம்முடன் சுமந்து திரிவார்கள்.
திலீபன் மக்களுடன் இயன்றளவு உண்மையைத்தான் பேசுவான். தனது மனச்சாட்சிக்கு ஒத்துவராத விடயங்களை செய்வதனை இயன்றளவு தவிர்ப்பான். ரெலோ போராளிகள் மீதான தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பு யாழ்ப்பாண மாவட்டம் பூராக நடாத்திய பரப்புரைக் கூட்டங்களை திலீபன் நடத்தவில்லை. அவன் அரசியற் பொறுப்பாளராக இருக்கும்போது நடைபெற்ற கூட்டங்களில் திலீபன் பங்குபற்றவும் இல்லை. மலரவனே இக் கூட்டங்களில் பிரதான பேச்சாளராக இருந்தார். யாழ் ஆயர் மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ் விடயம் தொடர்பாக திலீபன் பங்குகொண்டு உரையாடியிருக்கிறான். அக் கூட்டத்திலும் அவன் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசவில்லை. ரெலோ அமைப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான அரசியற் பரிமாணத்தை திலீபன் புரிந்து கொண்டாலும் இதனை இராணுவ வழிமுறை மூலம் கையாள்வதில் திலீபனுக்கு சம்மதம் இருக்கவில்லை எனக் கருத இடமுண்டு.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு விடும் என்று திலீபன் கவலையுற்றான். மக்கள் ஒப்பந்தத்தின் ஆபத்தை உணராது இருக்கிறார்கள் என்று வேதனையுற்றான். அரசியல் வேலைகளின் போதாமையும் இதற்குக் காரணம் என்று மனம்நொந்து கூறியிருக்கிறான். இந்நிலை களைய தன்னையே அர்ப்பணிப்பேன். தனது தியாகத்தின் மூலம் மக்கள் உண்மையை உணர்வார்கள் என்று உறுதியாக நம்பியிருக்கிறான். தண்ணீர் அருந்தியவாறு உண்ணாவிரதம் இருக்குமாறு நண்பர்கள் பலர் விடுத்த வேண்டுகோளை அவன் நிராகரித்திருக்கிறான். தனது இலட்சியத்துக்காக அறப்போரில் தனது உயிரை ஈகம் செய்திருக்கிறான்
26.09.2017 அன்று திலீபன் ஈகைச்சாவு அடைந்து 30 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இக்கட்டுரை திலீபன் நம்மை விட்டுப் பிரிந்த 30 ஆண்டு நிளைவுநாளில்தான் எழுதப்படுகிறது. எழுதிக் கொண்டிருக்கும்போது மனதில் கேள்வியொன்று எழுந்தது. திலீபனிடம் இருந்து இன்றைய தமிழ்த் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் குறித்து சிந்தனை ஏதும் நமது தலைவர்களிடம் உண்டா?
திலீபனைப் போன்று உயிர்த் தியாகம் எதுவும் செய்யத் தேவையில்லை. மக்களுக்கு உண்மையாகவும் கொண்ட இலட்சியத்துக்கு உறுதியாகவும் செயற்படவேண்டும் என்று திலீபனின் நினைவோடு நாம் இவர்களைக் கோருவது தவறுதானா?