Sunday 26 November 2017

பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! சரத் பொன்­சேகா ..

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது. 


“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.
இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.
அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.
போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.
இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.
பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.
இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.
அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.
இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.
ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.
அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.
எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.
ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.
பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.
1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.
அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.
சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.

Wednesday 22 November 2017

மாவீரர்களே! உங்கள் தியாகம் வீண்போகாது

மாவீரர்களே! நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற  பிள்ளைகள். 

தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்தைத் தவிர உங்கள் உயிர்த் தியாகத் தில் வேறு எந்தக் கலப்பும் கிடையாது.




உங்களின் இனப்பற்று - மொழிப்பற்று தமிழுக்காக நீங்கள் செய்த உயிர்த் தியாகம் ஒப்பற்ற வரலாறு.
எனினும் எங்கள் ஊழ்வினைப் பயன் எங் களுக்குள் புல்லுருவிகள், மற்றவர்களின் மரணத்தில் காட்டிக்கொடுப்புக்காக விலை பேசும் கயமைத்தனங்கள்.

இந்த இருண்ட பகுதி எம் இனத்தைச் சூழ் ந்து கொண்டுள்ளது. அதனால் உங்கள் தியா கம் அர்த்தமற்றுப் போய்விட்டதோ என்று பலர் நினைக்கலாம்.

ஆனால் உண்மை அதுவன்று. இந்தப் பிரபஞ்சம், யுகம் கடந்தது சூரிய சந்திரர் இருக் கும்வரை இயங்கவல்லது.

ஆகையால் நேற்று, இன்று, நாளை என்பது மிகச் சொற்ப காலம் கொண்டது. இது இந்த மண்ணில் வாழ்கின்ற எங்களின் காலக் கணிப்பேயன்றி அது இறைவனுக்கோ இயற் கைக்கோ பொருத்துடையதல்ல.

எம் குறுங்கால வாழ்வில் எங்களுக்கு உரிமை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் எங்கள் பிள்ளைகள் செய்த தியாகத்துக்கு ஏதும் கைகூடவில்லையே என்ற கவலையும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களிடம் இருக் கவே செய்கிறது.

இவை வாழுங்காலத்தில் நம்மிடம் ஏற்படக் கூடிய தற்காலிக கவலையேயன்றி இது நிரந் தரமானதல்ல.



மாவீரர்களே! இன்று நீங்கள் துயிலும் இல் லங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். உங்களை நினைவேந்துவதற்குத் தடை விதித்திருக்கலாம். நீங்கள் மகிழ்வோடு உறங்கும் சந்தனப் பேழை களே... என்ற கீர்த்தனை ஒலியிழந்து கிடக்கலாம்.

ஆனால் இவையயல்லாம் என்றோ ஒரு காலம் இரட்டிப்பாகப் பிரவாகிக்கும். இதுவே உண்மையும் கடவுள் செயலுமாகும்.

ஆம், அந்நியர் ஆட்சியில் எங்கள் மண் ணில் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. உடைக்கப் பட்டன. ஏன் வாழை இலையில் உண்பதுகூட சமயச்சடங்காகக் கருதித் தண்டனை வழங்கப் பட்டது. அப்படியயாரு காலம் இருந்ததல்லவா! அன்று வாழ்ந்த மக்கள் எத்துணை கவலை கொண்டனர்.

ஆனால் இன்று இலண்டனில், அமெரிக் காவில், ஏன் உலக நாடுகள் முழுவதிலும் சைவக் கோயில்கள் எழுந்து நிற்கின்றன.

அந்த வீதிகளில் தேர் ஓடுகிறது. ஏன் வெள்ளையர்கள் கூட அன்னதானத்தில் குந்தி யிருந்து வாழையிலையில் சோறு உண்கின் றனர். இவை நடப்பதற்கு எத்தனை ஆண்டு கள் ஆயின.

அதுபோலவே உங்கள் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. என்றோ ஒருகாலத்தில் உங் களுக்கான நினைவாலயம் எழுந்து நிற்கும். அது அன்றைய உலக அதிசயங்களில் ஒன் றாக விளங்கும்.

அப்போது சிங்கள மக்களும் அதில் நின்று உங்கள் தியாகத்துக்கு வந்தனம் செய்வர். இது சத்தியம். 



courtesy: valampurii

Sunday 19 November 2017

ரஸ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சி

உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்சிகள் இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையானது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும். 




அவற்றுள் வரலாற்றில் தடம் பதித்த முக்கியமான புரட்சிகளுள் ஒன்றாக ரஷ்யாவில் ஏற்பட்ட 'சோசலிசப் புரட்சி' விளங்குகிறது.  ஜரோப்பிய வரலாற்றில் மிகவும் விசாலமான பரந்த நிலப்பரப்பினைக் கொண்ட தேசமாக விளங்குவது ரஸ்யாவாகும்.  ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் திகதி, 'போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்டபுரட்சிதான் 'சோசலிசப் புரட்சி' என அழைக்கப் படுகிறது.

          ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள். அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன தலை விரித்தாடின. இந் நிலைமை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணியது. அதனால் ஜார் மன்னர்களின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடனும்,  பாட்டாளி வர்க்கத்தினர் தமது சுய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் திகதி லெனினுடைய தலைமையில் ரஷ்யாவில் வெடித்த புரட்சிதான் சோசலிசப் புரட்சியாகும். 


ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக தொழிலாளி வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், உலகியல் வரலாற்றில் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டியதும் சோசலிசப் புரட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சி பற்றி ஆராய்வதே இக் கைநூலின் பிரதான நோக்கமாகும்.

            இப்புரட்சியானது ரஷ்யாவில் பொருளாதாரம், சமூகம், தொழில் முறைகள் போன்ற துறைகள் உயர்ந்தோங்குவதற்கு உறுதுணையாக அமைந்தது. அத்துடன் ஜனநாயகம், முதலாளித்துவம் போன்ற கோட்பாடுகளிற்கு எதிராக சோசலிசம், சமவுடைமைப் பொருளாதாரம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்ட புதிய சிந்தனை மரபுகள் ரஷ்யாவில் தோற்றம் பெற்று ரஷ்யா வல்லரசாக உருவெடுக்க பலமான அத்திவாரமிட்டுக் கொடுத்தது.  சோசலிசப் புரட்சிதான் என்பதை எவரும் மறுத்து விட முடியாது.  சோசலிசப் புரட்சி ரஷ்யாவில் ஏற்படுவதற்கு மூல காரணமாக விளங்கியவர் 'நவயுக ரஷ்யாவின் தந்தை' என்று சிறப்பிக்கப் படுகின்ற லெனின் என்பவராகும்.
            
           சோசலிசப் புரட்சி பற்றி நாம் ஆராய்கின்ற போது புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள், புரட்சியினுடைய போக்கு, புரட்சியினால் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் போன்ற கட்டமைப்புக்களுடாக நோக்குவதனுடாக புரட்சியின் சிறப்பம்சங்களைப் பற்றி தெளிந்து கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.

சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள்.


             முதலில் ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள் பற்றி ஆராய்வோம். சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது ரஷ்ய மக்களிடையே காணப்பட்ட உணவுப் பற்றாக்குறை எனலாம். உணவு வாங்குவதற்காக மக்கள் ரொட்டிக்கடைகளின் முன்பாக நீண்ட வரிசையில் கால் கடுக்கக் காத்துக் கிடந்தனர். அப்படியும் பலருக்கு ரொட்டி கிடக்கவில்லை. இவ்வாறு மக்கள் வரிசையாகக் காத்துக் கிடந்தமை தொழில் நிறுத்தங்களுக்கும், குழப்பங்களுக்கும் மூலகாரணமாக அமைந்தது. இவ்வாறு சாதாரண குடிகளிடத்து மட்டுமின்றி இராணுவத்தினருக்கும் போதிய உணவோ, ஊதியமோ வழங்கப்படவில்லை. இதனால் இராணுவத்தினர் அரசின் மீது கொண்டிருந்த அபிமானம் வலுவிழந்து போயிற்று.

              1917ஆம் ஆண்டு, மார்ச் 08ஆம் திகதி சார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராகவும், தமது உணவுப் பஞ்சத்தை நீக்குமாறும் கோரிக்கைகளை விடுத்து 'பெற்ரோக்கிராட்' என்ற இடத்தில் நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தினார்கள். 'எங்களுக்கு உணவு கொடு' 'உழப்புக்கேற்ற ஊதியம் கொடு' என்று கோசங்களை எழுப்பிக் கொண்டு பெண்கள் ஊர்வலம் சென்றார்கள். மறுநாள் ஏனைய தொழிலாளர்களும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டார்கள். அவர்கள் 'போர் ஒழிக' 'தனியாட்சி ஒழிக' என்ற பெரும் கூக்குரல்களுடன் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள். அதனால் தொழிற்சாலைகளில் வேலை நடைபெறவில்லை. எங்கும் குழப்பம், அமைதியற்ற சூழ்நிலை என்பன ஊடுருவிக் கொண்டன. மூன்றாவது நாள் இந்தத் திடீர்க் கிளர்ச்சி ஒரு பொதுத் தொழில் நிறுத்தமாக மாறி பரட்சி ஏற்படுவதற்கான அத்திவாரத்தை இட்டுக் கொடுத்தது. நசுக்கப்பட்ட ஏழை மக்கள் முன்வந்து வெளிப்படையாகத் தமது உரிமைகளை கேட்பதற்குரிய சூழ்நிலையினை இவ் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியது.
          


ஆர்ப்பாட்டக் காரர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தினரையும், காவல்துறையினரையும் ஏவிவிட்டது. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த இராணுவத்தினர் கிளர்ச்சிக் காரர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கலவரத்தை அடக்க காவல் துறையினர் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதனால் ஆவேசம் கொண்ட பொதுமக்கள் காவல் துறயினரை கற்களாலும், தடிகளாலும் திருப்பித் தாக்கினார்கள். மார்ச் 08ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் நிறைந்திருந்தன. இவ்வாறு ரஷ்யாவில் சாதாரண தொழிலாளர்களால் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது சோசலிசப் புரட்சியாக விசுவரூபம் எடுத்தது.

             சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது பிரபுக்களினதும். மதகுருமார்களினதும் ஆடம்பர வாழ்க்கை எனலாம். ஆன்மிக நெறியினைப் பின்பற்ற வேண்டிய மதகுருமார்களும், பிரபுக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழத்தலைப்பட்டனர். 'பிறப்பு' அடிப்படையில் அவர்கள் சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து வந்தனர். இவர்களின் சுகபோக வாழ்க்கைச் செலவுகளுக்கு வரியாக விவசாயிகள் நிதி செலுத்த வேண்டியிருந்தது. காரணங்கள் எவையுமின்றி தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை வரியாகச் செலுத்துவது குறித்து விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் பாரிய கருத்து முரண்பாடுகள் தோன்றின.

              தொழிலாளர்;கள் வாழ்ந்த ஓரளவு அமைதியான வாழ்க்கை கூட விவசாயிகளுக்குக் கிடக்கவில்லை. ரஷ்யாவில் காணப்பட்ட அதிகமான நிலப்பகுதிகள் திருச்சபைக்குச் சொந்தமாகக் காணப்பட்டன. அதனால் அதிருப்தியடைந்த தொழிலாழர்களும், விவசாயிகளும் தங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினார்கள். இச் செயற்பாடானது புரட்சி ஏற்பட வழியமைத்துக் கொடுத்தது.

             நிலமானிய முறையில் சாதாரண குடியினர் அடிமைகளாக நடத்தப்பட்டமை சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் வாழ்ந்த 45 கோடி மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்த மக்களுக்கு இடம்பெயரும் உரிமை கூட இருக்கவில்லை. பிரான்சியப் புரட்சிக்கு முன்னர் எவ்வாறு அந்த நாட்டின் விவசாயிகளும், தொழிலாளர்களும் கொடிய துன்பங்களை அனுபவித்தனரோ அதனைவிட கொடுமைகளையும், துன்பங்களையும் தொழிலாழர்கள் அனுபவித்தனர். இந்தத் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு தொழிலாளர்கள் தக்கதருணம் பார்த்துக் காத்திருந்தனர். இதனால் லெனின் தலைமையில் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டமை புரட்சி ஏற்பட மூல காரணமாக அமைந்தது.
          
          சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது முதலாம் உலகமகாயுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் எனலாம். 1914 தொடக்கம் 1918 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட முதலாம் உலகமகாயுத்தத்தில் ரஷ்யா பிரதான இடத்தினை வகித்தது. இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஏனைய நாடுகளை விட ரஷ்யாவிற்கே அதிகளவிலான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஈட்டிகளினாலும், இயந்திரத் துப்பாக்கிகளினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், காயமுற்றும் இருந்தனர். விசவாயுக்களின் பாவனையால் அதிக எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு முதலாம் உலகமகாயுத்தத்தின் போது ரஷ்யா ஆயிரக்கணக்கான உயிர்களையும், அளவிட முடியாத  சொத்துக்களையும் இழக்க நேரிட்டது.


           மேற்கத்திய நாடுகள் படை உபகரணங்களில் ரஷ்யாவிற்கு இருந்த குறைபாடுகளை சீர்படுத்த உதவிய போதிலும், பிரதான வீதிகளைப் புனரமைக்க முற்படவில்லை. இக்குறைபாட்டினால் போர்க்களத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் படைவீரர்கள், மற்றும் போர்த் தளபாடங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விரைவாக எடுத்துச் செல்லமுடியாமற் போனது. ஆள்பலத்திலும், இயற்கை வளத்திலும் ரஷ்யா எதிரி நாட்டைவிட சிறந்து விளங்கிய போதிலும் பொருளாதாரத்தில் ரஷ்யா பெற்றிருந்த பின்னடைவு காரணமாக உலகமகாயுத்தத்தில் பாரிய இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மேலும் தாழ்ந்த மட்டத்தை அடைந்தது.


         இவ்வாறு பொருளாதாரப் பின்னடைவினால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்காலத்தில் புரட்சியினை முன்னெடுத்தார்கள். காரணம் எதுவுமின்றி ரஷ்யா முதலாம் உலகமகாயுத்தத்தில் ஈடுபட்டு தோல்வியையும், அவமானத்தையும் அடையாளமாகப் பெற்றுக் கொண்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லெனின் பாட்டாளி வர்க்கத்தினரின் துணையுடன் சார்மன்னரை வெற்றிகொண்டார்.


         இவ்வாறு முதலாம் உலகமகாயுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட  இழப்புக்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமைகள் சோசலிசப்புரட்சி ஏற்பட மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.

         ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது காணிப்பிரச்சனை எனலாம். கி.பி 18ஆம் நூற்றாண்டில் நிலக்கிழார்கள் தங்களுடைய படை சம்பந்தமான கடமைகளில் இருந்து விடுதலை பெற்றபோது நிலத்தை உழுது வந்த உழவர்களும் நிலவுடைமையாளர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாகக் கூறினார்கள். அதனால் நிலவுடைமையாளர்கள் விவசாயிகள் மீது வரிப்பளுவைச் சுமத்தினார்கள். இச்செயற்பாடு இவ் இரு குழுவினருக்குமிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக அமைந்தது. அதனால் விவசாயிகள் நிலவுடைமையாளர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

         குடியானவர்களிடம் முன்னர் இருந்ததை விட குறைந்தளவு நிலமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமது அவல நிலைக்கு தமக்கு வழங்கப்பட்ட சிறியளவான விளைநிலங்களே காரணம் என குடியானவர்கள் கருத்து வெளியிட்டனர். சிறிய நிலங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த முறையில் பயிர்களை மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெறக் கூடிய மூலதனமும், தொழில்நுட்ப அறிவும் அக் குடியானவர்களிடம் காணப்படவில்லை.

        இவ்வாறு முழுமையாக இருந்த விளைநிலங்கள் துண்டாடப்பட்டதன் காரணத்தாலும், அனைத்துச் சொத்துக்களும் சம்பந்தப்பட்ட பிரதிநதிகளுக்கே உரிமையுடையவை எனக் கூறப்பட்டதாலும் குடியானவர்களின் தனிப்பட்ட முயற்சி கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இதனால் அவர்கள் தங்களுடைய அவல நிலைக்கு குறைந்தளவு நிலம் வழங்கப் பட்டிருந்தமையே அடிப்படைக் காரணம் என்று கருதியதுடன், அவர்கள் தங்களுக்குப் போதுமான நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் சோசலிசப்புரட்சி ஏற்படுவதற்கான காரணங்களாக அமைந்தன.

        சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது ரஷ்யாவில் நிலவிய பொருளாதார வீழ்ச்சி எனலாம். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் விரக்தி, மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ரஷ்யாவில் சிறிதளவேனும் செல்வாக்குச் செலுத்தியிருக்கவில்லை. பின்னடைவான தொழில் முறைகளே ரஷ்யாவில் காணப்பட்டன. பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. நவீனத்துவமான முறையில் பொருளாதாரத்தை முன்னெடுக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் ரஷ்யாவில் இருக்கவில்லை. இதற்கு மாறாக ஆட்சியிலிருந்த ஜார் மன்னர்கள் வருமானம் எதுவுமின்றி செலவு செய்தனர். என்று கூறினாலும் வியப்பிற்குரியதல்ல. அவர்கள் நீண்ட யுத்தங்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தனர். வருமானத்தை ஈட்டக் கூடிய மாற்றங்கள் பற்றி சற்றேனும் ஜார் மன்னர்கள் சிந்திக்கவில்லை. இத்தகைய செயற்பாடுகளால் ரஷ்யாவில் பொருளாதாரம் சிதறடிக்கப்பட்டு கிழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிகழ்வுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி புரட்சிக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.

        ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது வரி விதிப்பு எனலாம். ரஷ்யாவில் 1861 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஊழியர்களுக்கு ஓரளவு சுதந்திரத்தைக் கொடுத்திருந்தது. இருந்த போதிலும் வரி விதிப்பிலிருந்து அவர்கள் விலக்கழிக்கப் பட்டிருக்கவில்லை. அதனால் விவசாயிகள் கொடிய துன்பங்களை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. அம்மக்கள் கொடிய துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்குரிய வழிவகைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் லெனின், கார்ல் மாக்கஸ் போன்றவர்களாவர். இவர்களின் கருத்துக்கள், கொள்கைகளினால் கவரப்பட்ட மக்கள் அவர்களை தலைவர்களாக ஏற்று அணி திரண்டார்கள். பழைமையான கொடிய ஆட்சியினை ஒழித்து புதிய தொழிலாளர் ஆட்சியினை உருவாக்குவதற்காக புரட்சியில் ஈடுபட்டார்கள்.

        சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது பாட்டாளி மக்களின் பிரச்சனைகள் எனலாம். 'நகரத் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சி மனப்பான்மை வேரூன்றுவதற்கான பிரதான காரணம் பாட்டாளி வர்க்கத்தினுடைய தோற்றமும், தொழிற்சாலைத் தொழிலமைப்பின் தன்மையுமேயாம்' என்று ஒரு ரஷ்ய எழுத்தாளன் கூறுகிறான். தொழிலாளி வகுப்பினர்கள் உழவுத் தொழிலிலிருந்து தூக்கப்பட்டு தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். ரஷ்யத் தொழிலாளர்கள் உழவுத் தொழிலிலிருந்து திடீரெனப் பிரிக்கப்பட்டமை புரட்சியில் அவர்கள் முழு வீச்சுடன் செயற்படக் காரணமாயிற்று. ரஷ்யாவில் நீண்ட காலமாக இடம் பெற்ற யுத்தத்தினால் அந்நாடு சகல ரீதியிலும் பின்னடைவைப் பெற்றிருந்தது.

       புரட்சிக்கு முன்பாக அங்கு மக்களிடையே நிலவிய கல்வி அறிவின்மை, பிற்போக்குத் தன்மை ஒழுங்கமைப்புப் பழக்கமின்மை, தொழில் பற்றிய முறைமையின்மை, கலாசார, தொழில்நுட்பக் கல்வியின்மை ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகளை ஈடு செய்ய முடியாமல் போனது. இவ்வாறு நீண்ட காலப் போரினால் ரஷ்யாவின் அரசியல், பொருளாதாரம் என்பன நலிவடைந்து போயின. போரில் சலிப்புற்ற படைவீரர்கள் அடிமைத்தளையில் இருந்த பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர் குடியானவர்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியும், சார் மன்னர்கள், நிலக்கிழார்கள் ஆகியோரது ஆதிக்கம் ஒழிய வேண்டும் ஆகிய அடிப்படைக் கருவூலங்களை முன்வைத்து புரட்சியில் ஈடுபட்டார்கள்.

        ரஷ்யாவில் நிலவி வந்த சமூக ஏற்றத்தாழ்வும் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணமாகக் கொள்ளப்படுகிறது. அங்கு 'பிறப்பு' அடிப்படையில் சமூக அந்தஸ்த்து தீர்மானிக்கப் பட்டமையே சமூக ஏற்றததாழ்வுக்கு அடிப்படைக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. உயர் குடிகள் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். சாதாரண குடியினர் நடுத்தரமான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் சில அடிமைகளின் நிலைதான் மிகப் பரிதாபகரமாகக் காணப்பட்டது. இவர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் மிகவும் கீழ்த்தரமானதாக அமைந்திருந்தது. இவ்வாறு பரிதாபகரமான நிலையில் கட்டுண்டு கிடந்த ரஷ்ய மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் விழிப்படையச் செய்தன.

         ரஷ்ய மக்கள் மத்தியில் காணப்பட்ட வறுமை, இடப்பெயர்வு, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கை, உழைப்பின் பெரும்பகுதியை காரணங்கள் எதுவுமின்றி வரியாகச் செலுத்தியமை, முதலாளி, தொழிலாளி என்ற பேதம் என்பன அவர்கள் புரட்சியில் ஈடுபடக் காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.
        
நீண்ட காலமாக ரஷ்யாவில் ஏற்பட்ட யுத்தங்களும்; சோசலிசப்புரட்சி ஏற்படக் காரணமானது. ஜார் மன்னர்கள் பலன்கள் எவையுமின்றி வீணாக யுத்தங்களில் ஈடுபட்டார்கள். அதனால் பெரும் செலவு ஏற்பட்டது. இவ்வாறு பொருளாதாரத்தை விணடித்தனரே தவிர வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் பற்றிச் சிந்திக்கவில்லை. மன்னன் முதலாம் நிக்கலஸின் ஆட்சிக் காலத்தில் கிராமியப் போரில் ரஷ்யா தோல்வியைத் தழுவிக் கொண்டது. இது போல 02ஆம் நிக்கலஸின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானுடன் ஏற்பட்ட போரிலும் ரஷ்யா தோல்வியடைந்தது. இவ்வாறு ஜார் மன்னர்கள் தேவையற்ற யுத்தங்களில் ஈடுபட்டு பெரும் செலவையும், அவமானத்தையும் ரஷ்யாவுக்கு ஏற்படுத்தினார்கள். தங்களின் கீழ்த்தரமான வாழ்விற்கு ஜார் மன்னர்களின் நடவடிக்கைகளே பிரதான காரணம் என்று உணர்ந்து கொண்ட பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சியை தகுந்த கருவியாக்கி மாற்றத்தை ஏற்படுத்தத் துணிந்தனர்.

 சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணத்தினை நோக்கினால் ஜார் மன்னர்களிடம் சிறந்த அரசியல் தலைமைத்துவம் காணப்படாமை எனலாம். ஜார் மன்னர்கள் மக்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி வந்தார்கள். சான்றாக 02 ஆம் நிக்கலஸ் மன்னன் தனது ஆட்சியின் போது அவனது மனைவி சொன்ன படியெல்லாம் ஆடி வந்தான். அத்துடன் ஜார் மன்னர்கள் 'புனித ரஷ்யா' வை சிருஷ்டிக்கப் போவதாகக் கூறினார்கள். அம்மன்னர்கள் சமூக பொருளாதார நலன்கள் தொடர்பில் அக்கரை காட்டவில்லை. மாறாக சமய சம்பந்தமான செயற்பாடுகளில் அதிக நாட்டம் செலுத்தினார்கள். இதனால் சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகள் தாழ்ந்த மட்டத்தினை அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜார் மன்னர்களுக்கு எதிராக ஒன்று திரண்டமை புரட்சி ஏற்பட வழியமைத்துக் கொடுத்தது.
லெனின்

           ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்களில் மிகவும் பிரதானமாக அமைவது 'நவயுக ரஷ்யாவின் தந்தை எனப் போற்றப் படுகின்ற லெனினுடைய தலைமைத்துவமும், அவரது இராஜதந்திர நடவடிக்கைகளுமாகும்' என்பது மறுத்தற்கரிது. 'நெருங்கிக் கொண்டிருந்த புயலின் அறிகுறிகள் யாவும் அடிவானத்தை இருளச் செய்தன' என்பது போல புரட்சியில் ஈடுபடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் லெனினுடைய வருகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

         பள்ளிகளை மேற்பார்வையிடும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனாக 1890 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதியன்று லெனின் பிறந்தார். லெனினுக்கு 16 வயதாகும் போது அவரது தந்தை இறந்து விட்டார். சட்டப் பட்டதாரியான லெனின் அரசியலில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். கார்ல் மாக்ஸ் எழுதிய பொருளாதாரத் தத்துவங்கள் இவரைக் கவர்ந்தன. தொழிலாளர்களையும், குடியானவர்களையும் ஒன்றுதிரட்டி லெனின் மேற்கொண்ட சோசலிசப்புரட்சி ரஷ்யா வல்லரசாக உருவெடுப்பதற்கு மூல காரணமாக அமைந்தது.

லெனினுடைய மூத்த சகோதரனான அலெக்சாண்டர் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப்பட்டார். இச்செயற்பாடு லெனின் புரட்சியில்; முழு வீச்சுடன் செயற்பட அடிப்படைக் காரணமானது. சமகாலத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னன் 02 ஆம் நிக்கோலஸ் ஆட்சி செலுத்தி வந்தான். ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து லெனின் சதி செய்வதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்தது. அதனால் 02 ஆம் நிக்கோலஸ், லெனினை சைபீரியாவுக்கு நாடு கடத்தினான். அங்கு லெனின் சைபீரிய நாட்டுப் பெண்ணான குரபஸ்கயா என்பவளைத் திருமணம் செய்து கொண்டான்.

           ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன விரிசலடைந்து காணப்பட்டன. இவை மட்டுமின்றி ஜார் மன்னர்கள் தொர்ச்சியான யுத்தங்களில் ஈடு பட்டார்கள். இதனால் சாதாரண குடியினரும், தொழிலாளர்களும் அரசின் மீது அதிருப்தியடைந்தார்கள். இதனால் பெற்ரோக்கிராட் நகரில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த லெனின் ஜார் மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார். அதற்காக அயராது உழைத்தார். லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று, மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணங்களை அவர்களுக்கு விளக்கினார். உங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டுமெனில் புரட்சி ஒன்றுதான் காரணம் என பகிரங்கமாக அறிவித்தார். அதனால் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றனர்.
    இருந்த போதிலும் முதல் ரஷ்யப் புரட்சி தோல்வியிலே முடிவடைந்தது. ஆனால் லெனின் மனம் தளரவில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப் படுத்தினார்.  ' தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே' என முழங்கினார். லெனின் ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு பேசத் தொடங்கினார். 'தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்தி விட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடைய வில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாழிகளும், பண்ணையாளர்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு தொடர்ந்து முன்னேறுங்கள். என்று அறை கூவல் விடுத்தார்.

  லெனினுடைய புரட்சிக் கருத்துக்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. அதனால் 1917 ஆம், ஆண்டு, நவம்பர் 07ஆம் திகதி சோவியத் காங்கிரஸ் மாநாடு                                          கூட்டப்பட்டது. அதில் னெனினுடைய தலைமையில் பாட்டாளி வர்க்கத்தினர் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு மக்களது நலனுக்காகப் பாடுபட்ட லெனினுடைய தலைமைதுவம் புரட்சிக்கான மிகவும் பிரதான காரணமாக அமைந்தது. என்பதை எவரும் மறுத்து விட முடியாது. இவ்வாறு ரஷ்யாவின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட லெனின் 1924ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்தாலும் அவரின் புகழ் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
    
சோசலிசப் புரட்சியின் போக்கு

 சோசலிசப் புரட்சியின் போக்குப் பற்றி நாம் ஆராய்கின்ற போது ரஷ்யாவில் மட்டுமின்றி உலகியல் வரலாற்றிலே தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டிய பரட்சி இதுவெனலாம். அதாவது 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 07 ஆம் திகதி லெனினுடைய தலைமையில் பாட்டாளி வர்க்கத்தினரால் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சிதான் உலக வரலாற்றில் 'சோசலிசப் புரட்சி' எனச் சிறப்பிக்கப்படுகிறது.

           இனிப் புரட்சியின் போக்குப் பற்றி ஆராய்வோம். ரஷ்யாவில் ஜார் மன்னன் 02 ஆம் நிக்கோலஸ் மக்களின் நலன்களைக் கவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி வந்தான். அத்துடன் யுத்தத்தின் காரணமாக ரஷ்யாவில் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. கொடுங்கோலாட்சி நாடெங்கும் தாண்டவமாடியது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கத்தினர் உணவு, காணி, சமாதானம் போன்றவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஒன்று திரட்டிக் கொண்டு லெனினுடைய தலைமையில் 1917 ஆம் ஆண்டு நவம்பர், 07 இல் புரட்சியினை நடத்தினார்கள்.

           நவம்பர் புரட்சிக்கு அடித்தளம் இட்டுக் கொடுக்கும் வகையில் முதற் கட்டமாக 1917 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் 'பெற்றோக்கிராட்' என்னுமிடத்தில் அமைந்திருந்த நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் 'உணவு வேண்டும்' என்னும் கோரிக்கையுடன் தொழில் நிறுத்தம் செய்ய ஆரம்பித்தனர். மறுநாள் ஏனைய தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். 'போர் ஒழிக' , 'தனியாட்சி ஒழிக' என்ற கோசங்களை எழுப்பிக் கொண்டு தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டார்கள். மூன்றாவது நாள் இத் திடீர்க்கிளர்ச்சி ஒரு பொதுத் தொழில் நிறுத்தமாக மாறி புரட்சிக்கான தன்மையினை வெளிப்படுத்துவதாயிற்று.

          புரட்சிக்காரர்களை அடக்குவதற்காக அரசாங்கம் இராணுவத்தினரை ஏவி விட்டது. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த இராணுவ வீரர்கள் கிளர்ச்சிக் காரர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். கலவரத்தை அடக்க பொலிசார் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதனால் ஆவேசம் கொண்ட மக்கள் கற்களாலும், தடிகளாலும் பொலிசாரைத் திருப்பித் தாக்கினார்கள். மார்ச் 08 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் நிறைந்திருந்தன.

          உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முடியாத சூழ் நிலையில் ரஷ்யாவில் 'டூமா' பாராளுமன்றம் கூடியது. முதற் கட்டமாக ஜார் மன்னன் முடி துறக்க வேண்டும் என்றும், சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதிகளும் ஆமோதித்தனர். வேறு வழியின்றி 1917 ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் திகதி ஜார் மன்னன் பதவியை விட்டு விலகினார். தனது தம்பியான மைக்கேல் என்பவனுக்கு முடி சூட்டினான். ஆனால் அவனால் ஒரு நாள் கூட பதவியில் நீடித்திருக்க முடியவில்லை. அன்றே மக்கள் அவனைத் தூக்கி எறிந்தார்கள்.

           அரசாங்க நிருவாகத்தைக் கவனிக்க தற்காலிக அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்த லெனின் 1917 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ரஷ்யா திரும்பினார். அவரது நண்பனான டிரான்ஸ்கியும் அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்தார். ரஷ்யாவிலுள்ள நிலைமையினை ஆராய்ந்து புரட்சிக்குக் காரணமான தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் லெனினுடைய திட்டமாகும்.

          இந்த நிலையில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இணந்த கூட்டணி அரசாங்கத்திற்கு கெரன்ஸ்கி என்பவர் தலைவராக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் லெனினுடைய போல்சுவிக் கட்சி வளர்வதை விரும்பவில்லை. அதன் விளைவாக லெனின், ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆகிய மூவரையும் கைது செய்யுமாறு கெரன்ஸ்கி உத்தரவிட்டார். அதனால் அவர்கள் மூவரும் தலைமறைவாயினர்.

         லெனின் தப்பிவிட்டதால் ஆத்திரமடைந்த கெரன்ஸ்கி லெனினுடைய கட்சியினை ஒடுக்குமாறு உத்தரவிட்டார். இதனால் நாட்டில் அடக்குமுறை தாண்டவமாடியது. முக்கள் தற்காலிக அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்தனர். இதனால் மக்களின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என லெனின் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது. அதுதான் ரஷ்ய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக நிலைபெற்றது.
      

       1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் திகதி சோவியத் காங்கிரஸ் மாநாட்டை, பெட்ரோக்கிராட்டில் கூட்டுவதற்கு ஸ்டாலின் இரகசியமாக ஏற்பாடு செய்தார். மாநாடு கூட்டப்பட்டது. மொத்தமாக 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அதில் 390 பேர் லெனினுடைய கட்சியினைச் சேர்ந்தவர்களாகும். அது வரைத் தலைமறைவாக இருந்த லெனின் திடீரென்று மாநாட்டிற்கு வந்தார். அரசாங்க நிருவாகம் ரஷ்ய மக்களின் கைகளிற்கு வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என பகிரங்கமாக அறிவித்தார். ஏற்கனவே லெனினுடைய திட்டப்படி போல்சுவிக் வீரர்கள் தபால் நிலையங்களையும், டெலிபோன் நிலையங்களையும், அரச அலுவலகங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

         அதுவரை பிரதமராக இருந்து கொண்டு அட்டூழியங்களை நிகழ்த்திய கெரன்ஸ்கி இனி ரஷ்யாவில் இருப்பது தனக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்டு பெண் வேடத்தில் தப்பிச் சென்றார். லெனின் தலைமையில் பெற்ரோக்கிராட் நகரில் சோவியத் காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த போதே இவ்வளவு நிகழ்ச்சிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்றன.
         மாநாட்டிலே '. சகல அதிகாரங்களும் மக்களுக்கே' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லெனின் தலைமையில் புதிய மந்திரி சபை அமைக்கப்பட்டது. 1917 இல் நவம்பர் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த லெனின் 1924 வரை சோவியத் குடியரசின் தலைவராக இருந்து சோவியத் ரஷ்யா ஒரு வல்லரசாக மாறுவதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதனால் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறார். இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியின் போக்கு அமைந்திருந்தது.
      
         சோசலிசப் புரட்சியின் விளைவுகள்

       சோவியத் ரஷயாவில் புரட்சியின் பின்னரான நிலைமை பற்றி மகாகவி பாரதியார் பின்வரும் கவிதையூடாக தெளிவு படுத்தியுள்ளார்.

        'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
             மேன்மையுறக் குடிமை நீதி
        குடியொன்றில் எழுந்தது பார், குடியரசென்று
              ஊலகறியக் கூறிவிட்டார்
        அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
              அடிமையில்லை. அறிக' என்றார்

         சோசலிசப் புரட்சியினுடைய மிகவும் பிரதான அம்சமாக விளங்குவது புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளாகும். ரஷ;யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்கெதிராக இடம் பெற்ற இப்புரட்சியானது, பல ஆண்டுகளாக துன்பங்களின் பிடியில் சிக்கித் தவித்த ரஷ;யக் குடி மக்களின் அடிமைத் தளையினை நீக்கியது. இதனை விரிவாக ஆராய்வோம். லெனினுடைய தலைமையில் 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் திகதி நடைபெற்ற இப்புரட்சியின் விளைவுகள் பல கோணங்களில் அமைந்திருந்தன.

         சோசலிசப் புரட்சியின் மிகப் பிரதான விளைவுகளில் ஒன்றாக அமைவது இடைக்கால அரசை நீக்கி லெனின் தலைமையில் சோவியத் குடியரசை உருவாக்கியமை எனலாம். லெனின் தலைமையில் 15 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் 'கமிசார்' என்று அழக்கப்பட்டனர். லெனின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. லெனின்-- அமைச்சரவைத் தலைவர்.
2. ரிக்கால்-- உள்நாட்டு அமைச்சர்.
3. மில்யூதின்-- விவசாய அமைச்சர்.
4. ஷல்யாப் நிக்கோவ்--தொழிலாளர் அமைச்சர்.
5. மூவர் கொண்ட ஒரு குழுவிடம் இராணுவமும், கடற்படையும் ஒப்படைக்கப் பட்டடது.
6. நோகின்-- அதாழில் அமைச்சர்.
7. லூர்னார்ஸ்கி—கல்வி அமைச்சர்.
8. ஸ்தெப்பனாஸ்-- நிதி அமைச்சர்.
9. தீராஸ்கீப்-- வெளி விவகார அமைச்சர்.
10. லோமாவ்-- சட்ட அமைச்சர்.
11. தியோடாவிச்-- உணவு அமைச்சர்.
12. அவிலோல்--தொலைத் தொடர்பு அமைச்சர்.
13. ஸ்டாலின்--தேசிய இனங்களின் அமைச்சர்.

            நீண்ட காலமாக கொடுமைகளை அனுபவித்த உழவர்கள் புரட்சியின் விளைவாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். ரஷ;யாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய வளங்களாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையாளர்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டன. உழவர்களின் வறுமைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. உழைப்பாளி மக்கள் அரச அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். 'சோவியத்துக்கள்' என்ற 'உழைக்கும் மக்கள் மன்றம்' அரச நிருவாகத்தை நடத்தியது. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டினார்கள். அதனை அமுல்படுத்த ஒரு நிருவாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை மட்டுமின்றி நீதி மன்றங்களாக செயற்படும் அதிகாரம் கூட தொழிலாளர்கள் கைவசமே இருந்தது. மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமுல்படுத்தி, அவர்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறையாகும். இதுதான் உண்மையான ஜனநாயகமாகும். 
    
             தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றவர்களின் ஆட்சி மலர்ந்தது. உலகின் முதன் முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். அந்தத் தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. ரஷ;ய தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டுமே அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. எல்லா வளங்களும் அனைவருக்கும் பொதுவானவை என்னும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. சமூகத்தின் மத்தியில் சமத்துவம் மேலோங்கியது. இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடைபெற்றன.

               சோசலிசப் புரட்சியின் பிரதானமான விளைவுகளில் ஒன்றாக அமைவது ரஷயாவில் அதிகார வர்க்கத்தினரின் சுரண்டலுக்கு முடிவு கட்டப்பட்டது எனலாம். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றார்கள். உலகியல் வரலாற்றில் முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தினரின் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டமையும் இப் புரட்சியின் விளைவே. அத்துடன் ரஷ;யாவில் மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டு ஆட்சியதிகாரமானது தொழிலாளர்களின் கைகளிற்கு சென்றடைந்தது.

             ரஷ;யப்புரட்சியின் விளைவாக அரசுக்குச் சொந்தமான பல உடைமைகள் பாட்டாளி வர்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டன. சான்றாக அரச அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள். வானொலி நிலையம் முதலியவை பாட்டாளி வர்க்கத்தினரின் கைவசமாகின. அரசின் தலைநகரமான 'கிரெம்ளின்' மாளிகை இறுதியாகக் கைப்பற்றப்பட்டது. முதலாளி வர்க்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினார்கள். ரஷ;யாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டு ரஷ;யா சோசலிச நாடு எனப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதனுடைய தலைவராக லெனின் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதனால் போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதியடைந்தனர்.
            
     மக்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள். தொழிற்சாலைகளின் நிருவாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. புரட்சியின் முன்னர் தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் புரட்சியின் பின்னர் மக்களுக்குத் தேவையான அளவிற்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.  ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊழியமும் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் நொடியில் மறைந்தது.


                  புரட்சியின் விளைவாக 'நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில்' என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளிள் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாடக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அறிவு மற்றும் திறமைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 


       புரட்சியின் பின்னர் உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரஷ்யா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழு விடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக நாடுகளால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளில் உள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. மாறாக லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமுல்படுத்த வேண்டும் என்னு விரும்பினார்கள். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'சோவியத் யூனியன்' என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார். புரட்சியின் விளைவாக ரஷ்யாவில் தொழிற்சாலை உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் பெருகின. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது.


       மேற் கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்கினால் ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சிக்கான காரணங்கள், புரட்சியினுடைய போக்கு, புரட்சியினுடைய விளைவுகள் போன்ற பிரதான விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அங்கு காலூன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தது.

Saturday 11 November 2017

99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு?

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்திர சர்மா, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருப்பது பிரித்தானியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக அவர் முன் மொழிந்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பிரித்தானிய அரசு இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் தீர்மானத்தை நிறைவேற்ற நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வீரேந்திர சர்மா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
99 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலப் பகுதியில் நடந்த கரை படிந்ததொரு நிகழ்வே ஜாலியன்வாலா பாக் படுகொலை. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி பிரித்தானிய இராணுவ அதிகாரி ரெஜினோல்ட் டேயர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் படுகொலை இது. பிரித்தானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக அக் கால கட்டத்தில் இந்தியப் பிராந்திய மக்கள் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட், மகாத்மா காந்தி முதலியோர் தலைமையில் இந்தியப் பிராந்தியம் எங்கும் தொடங்கிய அமைதி வழிப் போராட்டங்கள் பிரித்தானியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

சத்தியாக்கிரம் பிரிட்டிஷ் அரசுமீதான பேராபத்து என அக் காலத்தில் பிரித்தானிய கருதியதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவுக்கு எதிரான எழுச்சியை ஆரம்ப கட்டத்திலேயே நசுக்கி விட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1919 மார்ச் 1ஆம் திகதி இந்தியப் பிராந்தியத்தில் சத்தியாக் கிரகப் போராட்டங்கள் முனைப்பு பெற்றன. இதனையடுத்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு எதிராக சிட்னி ரௌலட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர். வட இந்தியாவின் பஞ்சாப், வங்காளம் முதலிய மாநிலப் பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் நாடுகளின் ஆதரவும் தொடர்பும் இருப்பதாக பிரித்தானியா கூறியது.
இதனையடுத்து குறித்த மாநிலங்களை ஒடுக்க, சிட்னி ரளலட் தலைமையில் ஒரு குழுவின் பரிந்துரையின் பேரில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஊடகங்கள் மிக இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின்மீது பாரிய அடக்குமுறை ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், அவர்களை எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் இடுவதற்கும் இச்சட்டம் வழி சமைத்தது. மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட இச் சட்டம் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது. போராட்டக் காரர்கள்மீது எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரித்தானியப் படைகளுக்கும் காவல்துறைக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
எவ்வாறெனினும் இந்தியப் பிராந்திய மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த இயலவில்லை. தனித் தனி இராட்சியங்களாக அரசாண்டு வாழ்ந்த வரலாற்றைக் கொண்ட இந்தியப் பிராந்திய மக்கள் ஒன்றுபட்டு பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் தமிழ் இராட்சியமாகவும் சிங்கள இராட்சியமாகவும் இருந்த மக்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமைக்கு ஒப்பானது. இந்த நிலையில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஜாலியான் வாலாபாக் திடலில் பெருமளவான மக்கள் கூட்டம் திரண்டது. அத்துடன் மார்ச் 30ஆம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புது டில்லியில் நடைபெற்ற ஹர்த்தாலின்போது பிரித்தானிய காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் பலியாகினர்.
மக்கள் விழிப்படைந்து போராட்டங்களை முன்னெடுத்தமை பிரித்தானிய அரசுக்கு அச்சுறுத்தலான அமைந்தது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்துக்கு எதிராக மக்களிடையே எழுச்சி பரவலடைந்தது. கண்டனக் கூட்டங்களும் எதிர்ப்புக் கூட்டங்களும் மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றன. இதனை முறியடிக்க பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை தீட்டியது. மக்களின் கிளர்ச்சியை கட்டுப் படுத்த தீர்மானித்த பிரித்தானியா அதற்காக மாபெரும் படு கொலை ஒன்றை நடாத்த திட்டமிட்டது. அதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை ஆகும். மனித குலத்திற்கு விரோதமாக அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த படுகொலை அதுவாகும்.
அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். நான்கு புறமும் சுவரால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்கு செல்ல ஒரே ஒரு குறுகிய வழி மாத்திரமே காணப்பட்டது. பிரித்தானிய இராணுவ ஜென்ரல் ரெஜினோல்ட் டயர், 100 பிரித்தானிய வெள்ளையின படைகளையும் இந்திய சிப்பாய்கள் 50பேரையும் அழைத்துக் கொண்டு மக்கள் கூடியிருந்த மைதானத்திற்குள் நுழைந்தான். எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கு திரண்டிருந்த மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஜென்ரல் ரெஜினோல்ட் டயர் உத்தரவிட்டான்.
மக்கள் திக்குமுக்காடினர். துப்பாக்கி ரவைகள் துளைத்து அந்த இடத்திலேயே செத்து வீழ்ந்தனர். அந்த மைத்தானத்தின் சிறிய வாசலை தேடி முண்டியடித்து ஓடியபோதும் அவர்களால் வெளியேறிவிட முடியவில்லை. சுவர்களின்மீது ஏறி வெளியில் செல்ல முயற்சித்தனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக் கொள்ள மைதானத்தின் நடுவில் இருந்த கிணற்றுக்குள் குதித்தனர். அவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்படி சுமார் 120 பேர் பலியானதாக சொல்லப்படுகின்றது. இப் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இப்படு கொலை நடைபெற்ற நாள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிரித்தானியர்களால் துயரமாக்கப்பட்ட ஒரு நாளாக கருதப்படுகின்றது. அன்று பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்த பிரித்தானியர் சேர் மைக்கல் ஒட்வையார், பிரித்தானிய இராணுவ ஜென்ரல் ரெஜினோல்ட் டயரின் இந்த நடவடிக்கை தனக்கு உடன்பாடான நடவடிக்கை என்று கூறினார். சேர் மைக்கல் ஒட்வையாரின் கட்டளையின் பிரகாரம் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலையாக இது அரங்கேறியது. இப்படுகொலையை விசாரணை செய்ய ஹெண்டர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்போது ஜென்ரல் ரெஜினோல்ட் டயர்(1919 ஓகஸட் 25 அன்று) அளித்த வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாகும்.
“நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றார் டயர்.
இந்தக் கொலை இடம்பெற்று 99 ஆண்டுகளின் பின்னர் இதற்கான நீதியை இந்தியவை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது என்று கூறியுள்ள வீரேந்திர சர்மா இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்தியாவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 13ஆம் திகதி ஜாலியன்வாலா பாக் படுகொலை தினமாக கொண்டாடப்புடுகிறது.
இந்தப் படுகொலைக்கு பிரித்தானியா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இதற்கான நஷ்ட ஈட்டை பஞ்சாப் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது. இந்தியா விடுதலை பெற்று ஐம்பதாவது ஆண்டு இடம்பெற்ற பொன்விழா நிகழ்வுக்கு 1997இல் வருகை தந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பரோ ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவிடம் சென்றனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி இடம்பெற்றிருப்பதாக எலிசபெத் கூறிய கருத்து அப்போது விமர்சிக்கப்பட்டது. 2013இல் இந்தியாவுக்கு வருகை தந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இப் படுகொலைக்கு மன்னிப்புக் கோரினார்.
ஒரு படுகொலை இடம்பெற்று கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குப் பின்னரும் அதற்கான நீதி வலியுறுத்தப்படுகின்றது. ஜாலியன்வாலா பாக் படுகொலை இன்றும் பஞ்சாப் மக்களிடமும் இந்திய மக்களிடமும் நீங்காத நினைவாக வடுவாக நிலைத்துவிட்டது. பிரித்தானியா புரிந்த கரையாக படிந்துவிட்டது. இந்தியா, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டபோதும் இப் படுகொலை இந்திய பிராந்திய மக்களால் மறக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. ஒரு படுகொலையை இன்னொரு படுகொலையுடன் ஒப்பிட முடியாது. ஒரு கொடுமையை இன்னொரு கொடுமையுடன் ஒப்பிட முடியாது. ஆனால் படுகொலைகளை புரிந்தவர்கள் அதனை பொறுப்பு ஏற்பதிலும் அதற்கான நீதியை வழங்குவதிலும் இருந்து தப்பிக்கொள்ள முடியாது.
இலங்கை அரசு தமிழ் மக்களை வரலாறு முழுவதும் படுகொலை செய்திருக்கிறது. இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்பவர்கள்கூட தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டது கிடையாது. இதன் உச்ச கட்டமாக முள்ளி வாய்க்காலில் ஈழத் தமிழ் மக்கள் லட்ச கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலையின் தாக்கத்திலிருந்து ஈழம் விடுபட முடியாமல் தகிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களும் போர் கொல்லப்பட்டவர்களும் பொருளாதாரத்தை இழந்தவர்களுமாக ஈழம் காணப்படுகின்றது. ஒரு இனப்படுகொலை இப்படித்தான் அந்த நிலத்தை முற்றிலுமாக அழித்து கலைத்துப் போடுகின்றது.
காலத்தை கடத்துவதன் மூலமும் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துவதன் மூலமும் இனப்படுகொலை குற்றத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணக்கூடாது. ஒரு இனப்படுகொலையின் தாக்கம் ஒரு சில வருடங்களில் நீங்கும் விடயமல்ல. ஒரு படுகொலையை புரிந்துவிட்டு அதற்கு பொறுப்புக்கூறவும் அதற்கான நீதியை வழங்குவதிலிருந்தும் எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடயத்தில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும், நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆயிரம் வருடங்களைக் கடந்தாலும் நீங்கிவிடாது என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Friday 3 November 2017

புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக்கொடுத்தவர்கள் புலிகள் அழிந்ததும் மாறிவிட்டார்கள்

எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள அரசியல் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார்கள்.
வெள்ளையர்கள் செல்லும் வரையில் நல்லவர்கள் போல் நடித்து அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்தவுடன் சிங்கள மக்கட் தலைவர்கள் தமது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
சோல்பெரி பிரபு சுதந்திரம் அளித்து பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் டீ.ர்.பார்மர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பார்கள் என்று அறிந்திருந்தால் ஒரு சமஷ்டி அரசையே தந்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்.
எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராவுக்குமான அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே.
உதாரணத்திற்கு வட கிழக்கில் தமிழ் மொழி காலாதி காலமாகப் பேசப்பட்டு வந்த போதும் 1956ஆம் ஆண்டில் 'தனிச் சிங்கள' சட்டமானது வடக்கையும் கிழக்கையும் மற்றைய ஏழு மாகாணங்களுடன் இணைத்து முழு நாட்டுக்கும் ஒரே மொழி என்று சட்டம் இயற்றியது.
தமிழ் மக்கட் தலைவர்கள் இதனை எதிர்க்கப் போக அவர்களுடன் உடன்பாடுகள் செய்து வட கிழக்கில் உள்ளவர்கள் பெறவேண்டிய உரித்துக்களைக் கையளிப்பதாகக் கூறிவிட்டு உடன்படிக்கைகளைச் செல்லாக் காசாக்கினர்.
இன்று இந்த நாட்டில் நிலவும் ஒரேயொரு பிரச்சனை பெரும்பான்மையினர் தாம் ஏதோ வழியில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை மற்றைய இனங்களுடன், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருவதே.
எல்லாப் பெரும்பான்மையினக் கட்சிகளின் சிங்களத் தலைவர்களும் கட்சி பேதமின்றி சிங்களப் பெரும்பான்மையினர் பெற்றுக் கொண்ட அதிகாரம் வேறெவருடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டே உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக் கொடுக்க முன்வந்தவர்கள் புலிகள் அழிந்ததும் பழைய நிலைக்கே மாறிவிட்டார்கள்.
எனவே ராஜபக்ஸ புதிதாக எதையும் கூற வரவில்லை. பிரச்சனைகள் வரும் போது அதிகாரப் பகிர்வுகள் பற்றிப் பேசும் சிங்கள அரசியல் தலைவர்கள் பிரச்சனைகள் ஓரளவு தணிந்ததும் பழைய நிலைக்கே சென்று விடுகின்றார்கள்.
அதிகாரப் பகிர்வு பற்றி எந்த வித மனமாற்றமும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அதிகாரப் பகிர்வு பற்றி ராஜபக்ஸ கூறிவருகின்றார். அதாவது அவர் குறிப்பிடுவது ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வே.
கிட்டத்தட்ட 13வது திருத்தச்சட்டத்தை ஒட்டிய மீளாய்வு செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வையே அவர் எதிர்க்கின்றார். இவர்தான் போர் முடிந்ததும் 13+ என்று கூறியிருந்தார்.
இப்பொழுது அதிகாரப்பகிர்வு வேண்டாம் என்கின்றார். இந்தியாவில் சென்று இலங்கையில் பௌத்தம் முதலிடம் பெறாவிட்டால் பௌத்தம் அழிந்துவிடும் என்ற விதத்தில் பேசியுள்ளார். அவர் கூறுவது பௌத்தம் பற்றியல்ல. சிங்கள ஆதிக்கம் பற்றியே என்பதை நாம் உணர வேண்டும்.
இலங்கையில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் சிங்களவரே. ஆகவே பௌத்தத்திற்கு முதலிடம் கோருபவர்கள் சிங்களவருக்கே முதலிடம் கோருகின்றார்கள். அதாவது பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்பதே எதிர்பார்ப்பு.
இந்து, கிறிஸ்தவத் தமிழரும், முஸ்லிம்களும் எக்காலத்திலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்கக்கூடாது. ஏற்றால் நாம் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆகி விடுவோம். பெரும்பான்மையினர் அரசாளும் போது பெரும்பான்மையினர் மதத்திற்கு முன்னுரிமை கேட்பது மதத்திற்குப் பங்கம் வரும் என்பதற்காக அல்ல. மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.
நானும் ராஜபக்ஸ செப்புவதையே கூறுவேன். அதாவது ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று அவரோடு சேர்ந்து கூறி விட்டு அதே மூச்சில் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு அவசியம் என்பேன்.
ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க உதவாது. மீண்டும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் நாம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையே ஏற்படும்.
சுய கௌரவத்துடன் வாழத்துடிக்கும் எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தின் ஆதிக்கக் கெடுபிடிகளுக்கு அடிமைப்பட்டு வாழ அனுமதி தெரிவிக்க மாட்டார்கள். ஒரே விதமான மக்கட் கூட்டங்கள் இடையேதான் ஜனநாயகம் பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றது.
பல்லின, பல்மத, பன் மொழி மக்களைப் பொறுத்த வரையில் யாவரும் சம உரித்துக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் யாவரதும் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஊன்றியாராய்ந்து அவற்றிற்கான ஆக்கபூர்வமான தீர்வுகளைப் பெற்றுத்தர பெரும்பான்மையினப் பெருங்கட்சிகள் என்றென்றும் பின்னின்றே வந்துள்ளன.
ஓரளவு ஏற்புடையதான ஒரு தீர்வை சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த போது அதன் வரைவை ஐ.தே.கட்சியினர் நாடாளுமன்றத்தில் எரித்துப் போட்டனர்.
இனி அவ்வாறான ஒரு தீர்வைக் கொண்டுவரமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அப்போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து அவர்கள் அந்தத் தீர்வுத் திட்டத்தை 2000ம் ஆண்டு முன்வைத்தார்கள்.
இனி முற்றுமுழுதான சிங்கள ஆதிக்கத்தின் கீழ் ஒரு சில சலுகைகளை ஒற்றையாட்சியின் கீழ் தருவது போலத்தான் தீர்வு வரைவுகள் இருப்பன. ஆகவே தான் நான் கூறுகின்றேன் ராஜபக்ஸமார் தமது அரசியலுக்கும் இன ரீதியான சிந்தனைக்கும் ஏற்பவே இவ்வாறு கூறுகின்றார்கள்.
அடுத்த தேர்தலின் வெற்றியே அவர்களின் ஒரேயொரு குறிக்கோள். அவர் அவ்வாறு கூறுகின்றார் என்று அவருடன் முரண்பட்டு நாடாளுமன்றத்தில் அடிபட்டுப் பேச்சுப்பட்டு இந்த அரசாங்கம் அரையும் குறையுமான ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினை நல்குவதால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை.
சிங்கள அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் எம்மை விட்டு நீங்க வேண்டுமானால், எம்மிடம் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பான்மையினத் தலைவர்கள் எதை எதையோ கூறி ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட அதிகாரங்கள் மீண்டும் எம்முடன் பகிரப்பட வேண்டுமானால், அதற்கு உண்மையான அதிகாரப் பகிர்வொன்றே தீர்வாகும்.
அவ்வாறான தீர்வு சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே கிடைக்கும். ராஜபக்ஸ போன்றவர்கள் வெறும் அரசியல் வாதிகள். அவர்களுக்கு அடுத்த தேர்தலே முக்கியம். நாட்டின் ஐக்கியமும் நல்லிணக்கமும் வருங்காலச் சுபீட்சமும் ஒரு பொருட்டல்ல.
தற்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் தமது குற்றமுள்ள நெஞ்சை ஆசுவாசப்படுத்த தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து முன்மொழிவுகளை முன்வைக்கக் கூடும்.
அவர்கள் தருவதானது அவர்களால் தருவதாக அமையட்டும். எம்மைப் பொறுத்த வரையில் இந் நாட்டின் இனப் பிரச்சனை நிரந்தரமாகத் தீர வேண்டுமானால் 1949ம் ஆண்டிலிருந்து எமது அரசியல்த் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு ஓரளவாவது நன்மை பயப்பதாய் அமையும்.” என முதலமைச்சர் கூறியுள்ளார்.