Sunday 18 November 2018

கஜா பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புவது எப்போது?

பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி நாகை தரங்கம்பாடியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சேதமடைந்தன.




கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3-வது நாளாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும், பாதிப்பு அதிகமாக இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.



தஞ்சை மாவட்டம், ஆம்பளாபட்டு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம் இல்லாமல், கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர். கஜா புயலால் அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னுடைய ஊர் சீர்குலைந்துவிட்டதாக வருத்தப்பட்ட இயக்குநர் சற்குணம், இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

பெற்ற பிள்ளைகள் கூட சோறு போடாத இந்தக் காலத்தில், தங்களுக்கு மூன்று வேளை சோறு போட்ட பயிர்கள் அழிந்துவிட்டதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், தங்களது வாழ்க்கையே 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

நெடுவாசல், கொத்தமங்கலம், வடகாடு, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களையும் கஜா புயல் பதம்பார்த்துவிட்டு சென்றுள்ளது. இந்த கிராமங்களை மீட்டெடுக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என கண்ணீருடன் கூறுகின்றனர் நெடுவாசல் மக்கள்.

பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி நாகை தரங்கம்பாடியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சேதமடைந்தன.

வேதாரண்யத்தை சுற்றியுள்ள கருப்பம்புலம், நெய் விளக்கு, பெரிய குத்தகை, வேட்டைக்காரன் இருப்பு, அண்டர்காடு உள்ளிட்ட கிராமங்களில் அதிகாரிகளும் வரவில்லை, நிவாரணங்களும் வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அங்குள்ள நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவ உதவிகள் இன்றி பெரும் அச்சத்தில் உள்ளனர்.



தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரமின்றி குடிநீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களே ஒன்றிணைந்து நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து ஜெனரேட்டர் மூலம், ஒரு வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இதேபோல், பட்டுக்கோட்டையில் 2 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லையென கூறி, மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி தடத்தில் உள்ள விளக்குடி சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால் பினாயிலை குடிப்போம் என்றும் பொதுமக்கள் எச்சரித்தனர்.

டெல்டா மாவட்டங்கள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை

No comments:

Post a Comment