Monday 24 December 2018

வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி, முல்லைத்தீவு

வடக்கில் கடந்த 48 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குளங்கள் அனைத்தும் நிரம்பி வான் பாய்கின்றன. இதனால் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கா னோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.


நேற்று சனிக்கிழமை மாலை 3 மணி வரையான நிலவரப்படி வடக்கில் வெள்ள இடரால் பாதிக் கப்பட்டோரின் விவரத்தை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேச செலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794 குடும்பங்களைச் சேர்ந்த 12651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இருபத்தைந்து இடைத்தங்கல் முகாம்களில், 1240 குடும்பங்களைச்சேர்ந்த, 3805 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 170 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 614 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 899 பேர் இடம் பெயர்ந்து 16 இடைத்தங்கல் முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 501 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களில் 451 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 250 பேர் இடம்பெயர்ந்து 4 தற் காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் வெள்ள இடரால் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும் ஒரு இடைத்தங்கல் முகா மில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செய லர் பிரிவில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 548 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். அவர்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 352 பேர் ஒரு இடைத்தங் கல் முகாமில் தங்கியுள்ளனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செய லர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேச செயலர் பிரி வில் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 550 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 858 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந் துள்ளனர். அவர்கள் 7 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளனர். 

பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 3 தற் காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர். 

மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கி யுள்ளனர்.

இரணைமடுக் குளத்துக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அத னால் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித் துள்ளதனால் 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. 

36 அடி நீர்கொள்ளளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நேற்று 35 அடியாகக் காணப்பட்டது. இந்நிலையில் நேற் றிரவு பெய்த மழையினால் குளத் தின் நீர்மட்டம் மிக வெகுவாக அதி கரித்துள்ளது. 

இரணைமடுக் குளத்தில் உள்ள 14 வான்கதவுகளில் 11 வான்கதவு களை உடனடியாக திறந்து விட் டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது என்று பொறியியலாளர் என்.சுதாகரன் குறிப்பிட்டார். 

குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவை விட குளத்துக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப் பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளததால் சூழ்ந்த கிராமங் களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகுகளில் மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் குமுழமுனை உள்ளிட்ட பல பகுதி களில் நேற்றிரவு கொட்டிய மழை யினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது.
வன்னியில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி நீர் வான்பாய்ந்து கொண்டிருப்பதால், வெள்ள நிலை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

No comments:

Post a Comment