Friday 14 December 2018

இலங்கையில் நடக்கும் மைத்திரி ரணில் நானா? நீயா? போட்டியின் பின்னணி என்ன?

இலங்கை அரசியலில் திடீர் புயல் ஒன்று மையம் கொண்டது. அதன் விளைவு யாரும் எதிர்பாராத நேரத்தில் இலங்கை உளவு படைக்கும் தெரியாமல் மகிந்தவை பிரதமராக்கும் நிலை வந்தது.


இலங்கை பொலிஸார் தொட்டு உளவுத் துறையும் ரணிலின் கட்டுப்பாட்டில் இருந்தும் இந்த நகர்வை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது.
இவைகள் எல்லாவற்றையும் விட அதிபர் மைத்திரியின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஒருவர் உள்ளார்.
அவர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வடக்கில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ரணிலின் அபிமான விசுவாசி. வெளிநாட்டு பயிற்சி பெற்றவர் இவர் மைத்திரியுடன் இருந்தும் இந்த நகர்வை அவரால் கண்டுப்பிடித்து ரணிலுக்கு அந்த தகவலை கொடுக்க முடியாமல் போய் விட்டது.
ரணிலை நீக்கி மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்று அதிபர் விரும்பவில்லை என்பது வேறு கதை. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி அணியில் இருந்து சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோரை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பலமுறை அதிபர் கோரிய போதும் யாரும் அதிபருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பகிரங்கமாகவே அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்து மகிந்தரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரு நகர்வு செய்யபட்டது. அந்த நகர்வு என்னும் மையம் கொண்ட புயல் இன்னும் இலங்கையை விட்டு நகரவில்லை.
நானா? நீயா? போட்டியின் உள்நோக்கம் என்ன என்று நாம் உற்று நோக்கினால் அது சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலாப நோக்கம் கொண்டது.
அதாவது கிழக்காசியாவின் உற்பத்தி மையங்களுக்கும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு நாடுகளின் கொள்வனவு சந்தைக்கும் இடையிலான கடல்வழிப் பாதையின் முக்கிய கேந்திர தளமாக / நிலையமாக இலங்கை அமைந்துள்ளதால் இலங்கையில் நிரந்தரமாக காலூன்ற வேண்டிய தேவை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளன.
அதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான நாடாக அல்லது நெருக்கமான அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடாக இலங்கையை இரண்டு நாடுகளும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்தப் போட்டியே இன்று இலங்கையில் நானா? நீயா? என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் நலன் என்ன? இலங்கையில் தனது பரம எதிரி சீனா ஆதிக்கம் செலுத்துவது என்பதானது அது எப்போதும் தனக்கு ஆபத்து என்பது இந்தியாவின் கணக்கு. அத்துடன் சீனா தனது ஆதிக்கத்தை நேபாளம், மியன்மார், பாகிஸ்தான் வரை தனது அகலக்காலை பதித்து விட்டது. இப்போது எஞ்சி இருப்பது இலங்கை மட்டுமே.
அதனால் அமெரிக்காவோடு இந்தியா ஒத்துப்போக வேண்டிய தேவை வந்துள்ளது. அதனால் சீனாவின் ஆதிக்கம் இல்லாமல் அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் அமைவது இந்தியாவுக்கு ஆபத்தில்லை பாதகமில்லை என்று இந்தியா ஒரு கணக்கு போட்டுள்ளது.
இலங்கையில் மிக அதிகளவு சீனா முதலீடு செய்துள்ளன. சீனாவின் யுவான் பணத்துடன் இந்தியப் பணம் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளன.
இலங்கை அரசியல் புயலில் இந்தியா நேரடியாக சிக்காமல் மிக அமைதியாக நிலைமையை மிக அவதானமாக பார்த்துக்கொண்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா நேரடியாக இலங்கையில் மூக்கை நுழைத்துள்ளதால் அமெரிக்காவின் நேச நாடுகளும் இலங்கை அரசியல் புயலை கரை கடக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.
அதனால், இலங்கை அரசியல் புயல் என்பது நானா? நீயா? என்ற போட்டியுடன் சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் யுவான் டாலர் போட்டியே ஒழிய இது ரணில் மைத்திரி மோதல் அல்ல. ஆனாலும், இலங்கை அரசியலை பொறுத்த மட்டில் சீனா அமெரிக்கா என்ற மோதல் என்றாலும் ஒரு பதவி ஆசை மோகம் கொண்ட போட்டி தான்.
ஆனால் இங்கு அமைதியான முறையில் சீனா தனது பணத்தைக் கொண்டு இலங்கையில் சாதிக்கும் தனது பலதில் அது நிருபிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment