Saturday 21 December 2019

குடியுரிமை சட்டம் என்றால் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றம் குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, ஒருவர் இந்திய குடிமகனாக எவ்வாறு அங்கீகரிக்கப்படுவார்?





குடியுரிமை திருத்த சட்டத்தின்படி,

ருவர் முதலில் தான் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர், ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், சமணம் அல்லது பார்சி மதத்தை சேர்ந்தவர் என்றால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முதல் தகுதியை பெறுகிறார். ஆனால், அவர் இஸ்லாமியராக இருந்தால், குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.


டுத்ததாக அவர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஒன்றிலிருந்து இந்தியாவுக்கு குடியேறியிருந்தார், அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான இரண்டாவது தகுதியை பெறுகிறார். ஒருவேளை அவர் வேறு நாடுகளிலிருந்து குடிபெயர்ந்ததிருந்தால் குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

டுத்ததாக அவர் எந்த தேதியில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்திருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முழு தகுதியையும் பெறுகிறார். அந்த குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்திருந்தால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, குடியுரிமை சட்ட திருத்தத்தின் ஷரத்துகளின்படி, ஒவ்வொரு இந்தியரும், தான் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர் இந்திய குடிமகன் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், குடியுரிமை பறிக்கப்படும். குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள் அனைவரும், அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்படலாம். அவர்களில் பலர் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப்படலாம்.



சில விளக்கங்கள்

கேள்வி: குடியுரிமை திருத்த மசோதா 2019 என்ன சொல்கிறது?
பதில்: 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள்/ பவுத்தர்கள்/ சமணர்கள்/சீக்கியர்கள்/கிறித்துவர்கள்/பார்சிகள் ஆகியோர் இந்திய குடிமக்கள் எனும் உரிமையை பெறுவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

  • எதிர்க்கட்சிகள் ஏன் இதனை கடுமையாக எதிர்க்கின்றன?

இரண்டு முக்கிய காரணங்களுக்காக எதிர்கட்சிகள் இதனை எதிர்க்கின்றன.
1. ஏன் முஸ்லீம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது?
2. ஏன் இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் சேர்க்கப்படவில்லை?
3. மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது, அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
     இந்த மூன்று பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

  • மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன?

2016ம் ஆண்டு கடும் எதிர்ப்பு காரணமாக இந்த பிரச்சனை தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. அப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் முகமது சலீம் அவர்கள் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். எதிர் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி இந்த குழு முடிவு எடுத்தது. அப்பொழுது முகமது சலீம் அவர்கள் மிக விரிவான எதிர்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அதே போல பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இரண்டு திருத்தங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மதம் அல்லது தேசங்கள் என்பதை நீக்குமாறு இந்த திருத்தங்கள் கோருகின்றன. மதம் குறித்த பெயர்களை நீக்குவதன் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சம் நீக்கப்படும். தேசங்கள் குறித்த பெயர்கள் நீக்குவதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வாய்ப்பு கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.

  • இந்த சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா?

நிச்சயமாக. அரசியல் அமைப்பு சட்டம் குறிப்பாக 14வது பிரிவு அனைத்து இந்தியர்களும் மதம்/இனம்/மொழி/சாதி/பாலினம் என எவ்வித வேறுபாடுமின்றி சமம் என அழுத்தமாக கூறுகிறது. இந்த சட்டம் அதற்கு முரண்படும் வகையில் உள்ளது.

  • பாகிஸ்தான்/வங்கதேசம்/ஆப்கானிஸ்தானில் இந்துக்கள்     துன்புறுத்தப்படுகின்றனரா?

இல்லை என சொல்ல முடியாது. பெரும்பான்மை வாதம் என்பது அனைத்து தேசங்களிலும் ஒரு புற்று நோய் போல பரவிவருகிறது.  இந்தியாவில் அது சங் பரிவாரத்தின் பெரும்பான்மை மதவாதம் எனில் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமிய மதவாதம் உள்ளது. இலங்கை மற்றும் மியான்மரில் பவுத்த பெரும்பான்மை வாதம் பேயாட்டம் போடுகிறது.

  • வடகிழக்கு மாநிலங்களில் ஏன் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு     எழுந்துள்ளது?

அசாம்/திரிபுரா/மணிப்பூர் போன்ற பல மாநிலங்களில் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன. அசாம் முதல்வர் இல்லத்தை பெரிய பேரணி ஒன்று முற்றுகையிட்டது. மக்களிடமிருந்து தப்பிக்க முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற வேண்டிய அவசியம் உருவானது. இந்த சட்டத்திலிருந்து அசாமுக்கு விலக்கு அளிக்கும் வரை அவர் தான் படித்த பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு போராட்டகாரர்கள் தடை போட்டுள்ளனர்.

  • ஏன் இவ்வளவு கோபம்?

அசாம் போராட்டம் நடந்த பொழுது 1984ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன் அடிப்படையில் 1971ம் ஆண்டுக்கு பிறகு அசாமில் குடியேறிய அனைவரும் (இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உட்பட) அடையாளம் காணப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்பது முக்கியமான முடிவு. இப்பொழுது முஸ்லீம்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் இந்துக்கள் தொடர்வர். இதனை அசாம் மக்களில் ஒரு பிரிவினர் ஏற்க மறுக்கின்றனர். எனவே இந்த போராட்டம்.

  • அசாமில்தானே தேசிய குடி மக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது?

ஆம். இந்த பதிவேடு பணிகள் முடிந்த பிறகு சுமார் 44 லட்சம் பேர் இந்தியக் குடி மக்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியது. பின்னர் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னரும் 19 லட்சம் பேர் குடி மக்கள் இல்லை என நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒரு சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளரும் இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி விருதுகள் பெற்றவரும் கூட குடிமக்கள் உரிமை மறுக்கப்பட்டனர். 19 இலட்சம் பேரில் மிக கணிசமானவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் ஆவர். இவர்களை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால் வங்கதேசம் அரசாங்கம் மறுத்துவிட்டது. எனவே இவர்களை தனிமைப்படுத்த பல இடங்களில் சிறைகள் உருவாக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

  • அப்படி செய்தால் ஹிட்லர் செய்த்து போல ஆகிவிடுமே?

ஆம்! ஹிட்லர் யூதர்களையும் கிறித்துவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் சிறைகளில் அடைத்தது போல இதுவும் உருவாகும் ஆபத்து உள்ளது.

  • தேசிய குடி மக்கள் பதிவேடு அசாமுக்கு மட்டுமா?

இல்லை. இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த மோடி அரசாங்கம் முனைகிறது.

  • ஆனால் அசாமில் முஸ்லீம் அல்லாதவர்களும் குடியுரிமை இழந்துள்ளனரே!
     
அதனை சரிக் கட்டவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டம் அமலானால் முஸ்லீம்கள் தவிர ஏனையோர் குடியுரிமை பெறுவர். முஸ்லீம்கள் மட்டும் சிறைகளுக்கு அனுப்பப்படுவர்.

  • இது பாசிச அணுகுமுறை அல்லவா?

ஆம்! அதில் எந்த ஐயமும் இல்லை.
 
  • சங் பரிவாரம் கிறித்துவர்களுக்கும் எதிரானதுதானே! அப்படியெனில் கிறித்துவர்களுக்கு குடியுரிமை எப்படி தர முன்வருகிறார்கள்?

ஆம். சங் பரிவாரம் கிறித்துவர்களுக்கும் எதிரானதுதான். எனினும் முஸ்லீம்களை தனிமைப்படுத்த கிறித்துவர்களை அரவணைக்க முயற்சி செய்யலாம். தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கூறியது போல கிறித்துவ நாடுகளான மேலை நாடுகளைப் பார்த்து பயமும் உருவாகியிருக்கலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயவு மோடி அரசாங்கத்திற்கு மிகவும் தேவை என்பது அறிந்த ஒன்றுதானே!

  • ஏன் இலங்கை அகதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்?

பவுத்த- சிங்கள பெரும்பான்மை வெறியர்களால் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மோடி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள தயராக இல்லை. மேலும் தமிழர்கள்/ தமிழ்நாடு எனில் கோபம் அவர்களுக்கு இருப்பது தொடர்கிறது.

  • அ.இ.அ.தி.மு.க. நிலைபாடு என்ன?
     
இந்த சட்டத்தை ஆதரித்து மக்களவையில் கைதூக்கிவிட்டனர். தமிழர்கள் பாதிக்கப்படும் பொழுது கூட தமது எதிர்ப்பை தெரிவிக்க பயம் கொள்கின்றனர் எனில் அ.இ.அ.தி.மு.க. பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்பது பளிச்செனத் தெரிகிறது.

  •  பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து அல்லது ஏனைய முஸ்லீம் நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் வந்தால் நிராகரிப்பீர்களா எனும் கேள்வி ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது?

ஏனெனில் பாகிஸ்தானில் ஷியா/அகமதி/சுஃபி போன்ற முஸ்லீம் பிரிவினரும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். மாற்றுக் கருத்து கொண்ட சன்னி பிரிவு முஸ்லீம்களும் கூட தப்புவது இல்லை. அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது மோடி அரசாங்கம்.

  • இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்குமா?
     

பலர் வழக்குகள் தொடரும் வாய்ப்பு உள்ளது. நியாயமாக மற்றும் சட்டப்படி ஆய்வு செய்தால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்..

Monday 25 November 2019

யார் இந்த பிரபாகரன்…?

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி  வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.




தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்
பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.


சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .



தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.

இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.
புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற  கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .

சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.


ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.

பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை  கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.



எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.


ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.


தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால்  புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்

தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.

வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .



பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின்  தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு  வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.



ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

Wednesday 20 November 2019

புலிகள் பன்றிகளை கொல்லாது...

விடுதலைப்-புலிகள் இயக்கம் எப்போதும் பன்றிகளை கொல்வதில்லை. அது தமிழகத்து பன்றிகளாக இருந்தாலும்சரி, டெல்லி பன்றிகள் என்றாலும் சரி, இத்தாலி பன்றிகள் என்றாலும் சரி...

அதுவும் ஏற்கனவே செத்து நாற்றமெடுத்த பன்றிகளை...



இங்கே பிழைப்புக்காகவும், ஓட்டுக்காகவும் புலிகளின் பெயரைச் சொல்ல வேண்டியது. அங்கே விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கதற வேண்டியது.

இதுவும் ஒரு பிழைப்பு.இப்படியும் ஒரு பிழைப்பு.

புலிகள் எப்போதும் உங்களை சீண்டாது. நாற்றமெடுத்த பிறவிகள் என்று ஒதுங்கிதான் இருக்கும்.

அதைவிட உங்களை கருவறுப்பதாக சபதமெடுத்திருந்தது சீக்கிய இனம். அமிர்தசரஸ் பொற்கோயில் ப்ளு-ட்ஸடார் ஆப்ரேஷன் நினைவிருக்கின்றதா?

ஆமாம், அந்த சீக்கிய இனம் இந்திராகாந்தியை சொல்லி வைத்து செய்தது. நாங்கள் எல்லாம்கூட அழுதோம். இந்திரா மட்டுமல்ல, குடும்பத்தையே கருவறுப்போம் என சபதமெடுத்தார்களாம்.

அதைத்தான் அந்த ‘நேமிசந்த் ஜெயின்’ என்கிற சந்திராசாமி சொன்னான். “சொல்லி வை அவனிடம் (ராஜிவ்). அவன் அம்மா சிதறியதைப் போல் அவனும் சிதறி சாவான்” என்று ஆசிரமத்திற்குள் ஆவேசமாக கூறி சபதமெடுத்ததாக உடனிருந்தவன் ஜெயின் கமிஷனில் சாட்சி சொன்னான்..

சந்திராசாமி சொன்னபடியே ராஜிவ்காந்தி இறந்தார். அதற்கும் நாங்கள் அழுதோம். அந்த சந்திராசாமியை விசாரிக்காமல் கடந்த பத்தாண்டுகால காங். ஆட்சியில் காலாட்டிக்கொண்டே இருந்துவிட்டு இப்போது வந்து புலிகளால் உயிருக்கு ஆபத்து என்பது அயோக்கியத்தனம் இல்லையா.

(#காங்கிரஸ்கட்சி தலைமை #மன்மோகன் சிங்கை பத்தாண்டுகள் பதவியில் வைத்து அழகு பார்த்ததே சீக்கிய இனத்தின் கோபத்தை தனிக்கத்தான் என்பது உண்மையா?)
ஆக, இப்படியாக நீங்கள் வடக்கே பழி தீர்த்த பல இனக்குழுக்களின் கோபம் மிச்சம் இருக்கலாம். அவர்கள் யாரேனும் உங்களை பழி தீர்க்கலாமே ஒழிய புலிகள் ஒரு போதும் உங்களை சீண்ட மாட்டார்கள்.

அதுவும் கூட்டுச்சேர்ந்து ‘முற்றாக அழித்து ஒழித்து விட்டோம்’ என அறிவித்துவிட்ட பிறகு எப்படி பழி தீர்ப்பார்கள்.? டிஆர்பாலுதான் சொல்ல வேண்டும்.
சொக்கத்தங்கம் சோனியா மீது இவ்வளவு அக்கறை இருக்கும் திமுக பிறவிகள் என்ன செய்திருக்க வேண்டும்.?

ராஜிவ் கொலையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையில் பிரதமர் வாஜ்பாய் அமைத்த #CBI-யின் #MDMA- விசாரணை குழு இன்றும் ‘விசாரிப்பதாக’ உள்ளதே. கடந்த பத்தாண்டு கால காங்.கட்சி ஆட்சியில் அதை விசாரிக்கச் சொல்லி போராடியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
போகட்டும்...

திமுக-வின் டி.ஆர். பாலு அப்படி பேசியதைப் போன்று, யாராவது ஒரு சீக்கிய எம்.பி எழுந்து, ‘சீக்கிய தீவிரவாத அமைப்புகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று பேசிவிட்டு ஊர்போய் சேரமுடியுமா?

ஆனால், தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் அப்படி பேசிவிட முடிகிறது என்றால் இங்கு உணர்வாளர்களாக இருக்கும் திராவிட கம்பெனிகள் பலவும் ‘டபுள் ஏஜன்ட்’ தொழிலில் இருப்பதுதான் காரணம்..

பா.ஏகலைவன்

Saturday 9 November 2019

பெர்லின் சுவர் : உடைப்பும் பின்னணியும்..

ஜெர்மனி என்ற ஒரே நாடாக இருந்ததை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்தது மட்டுமல்லாமல், தாய் ஒரு பக்கம், பெற்ற பிள்ளைகள் ஒரு பக்கம் என குடும்பத்தையே இரண்டாக பிரித்து, பெர்லின் மக்களை கதற வைத்தது பெர்லின் சுவர்.




உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறுபோட்டுக் கொண்டன.


மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது 1949ம் ஆண்டு.


வல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி பொருளா தாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது. ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது. இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின் மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப் படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே குடியேறினர். இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, "பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.


பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.


இதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும். அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான் செல்ல வேண்டும்.


இந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர் ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப் பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு, மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத் தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.


எதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர். 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும் பழையபடி ஒன்றாக இணைத்தனர். 


நாட்டையே கூறுபோட்ட அந்த பெர்லின் சுவரை மக்கள் இடித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியில் ஜெர்மனி மக்கள் கொண்டாடினர்; இன்றும் அந்நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

Friday 1 November 2019

தமிழக தலைவர்கள் கோமாளிகளா அல்லது தமிழக மக்கள்தான் ஏமாளிகளா? surjith

தப்பு செய்தவனுக்குத் தண்டனை தருவதற்குப் பதிலாகப் பரிசு தருவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடியது

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன.. ஆனால் இது போல் பல நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்தும்  நாட்டை ஆளும் அரசுகள் மெத்தனமாகவே இருக்கின்றன. இதற்குக் கட்சி வேறுபாடுகள் இல்லை....


அமெரிக்காவில் இதே நிகழ்வு 1987 ல் நடந்தது குழந்தை  58 மணிநேரத்திற்குப் பின்பு காப்பாற்றப் பட்டது குழந்தை பெற்றோரிடம் உயிரோடு கொடுக்கப்பட்டது அதே நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடந்திருக்கிறது  என்ன குழந்தைக்குப் பதிலாகப் பெற்றோர்களுக்கு லட்சக் கணக்கில் அரசு பணம் கொடுத்து இருக்கிறது. அமெரிக்க நாடும் மக்களும் சுயநல மிக்கவர்கள்தான் ஆனால் இந்தியர்களைப் போலப் பண வெறி பிடித்தவர்கள் அல்ல..

இப்போது சுர்ஜித்துக்கு நடந்த நிகழ்விற்குப் பின் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து எமர்ஜின்ஸிகால அடிப்படையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட  நடவடிக்கை எடுக்காமல்   அரசியல் சுயநலம் கருதி இறந்தவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசு பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்றது

பொறுப்புடன் தன் பிள்ளையையே பார்த்துக்கொள்ளாத பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அவர்களுக்கு லட்சக் கணக்கில் அதுவும் அரசு பணத்தை தன் சொந்த பணம் போல அள்ளிக் கொடுக்கிறார் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் சரி அவர்தான் அப்படி என்று பார்த்தால் அதைக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் அவர் பங்கிற்கு அவரும் லட்சத்தில் அள்ளிக் கொடுக்கிறார்  .  மக்களின் எமோசனலை தங்களின் சுயனலங்களுக்காக் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் வேற எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மிக நல்ல ஆஸ்டியை தருவேன் என்றும் ஸ்டாலின் சொல்லுகிறார். தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் இவரும் எடப்பாடியைப் போலவே செயல்பட்டால் எடப்பாடி ஆண்டால் என்ன ஸ்டாலின் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்


தண்டனை கொடுக்க வேண்டியவர்களுக்குத் தண்டனைக்குப் பதிலாகப் பணத்தை அள்ளிக் கொடுத்ததால் சுர்ஜித்தி அம்மா இப்போது சுர்ஜித்திற்கு கோவில் கட்ட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம் என்பதைப் பேட்டியில் சொல்லுகிறார்..


டேய் நீங்கள் எல்லாம் லூசா அல்லது தமிழக மக்கள்தான் லூசாடா?


 அமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான் சின்ன  நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன்...


 அமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான்  பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்...

எனது குடியிறுப்பு பகுதியில் நடந்த சம்பவம் இது.. எனது குடியிறுப்பு பகுதியில் மழை நீர் ஒடுவதற்காக சிறிய கால்வாய் ஒன்று உண்டு இதில் எப்போதும் அரை அடியில் இருந்து ஒரு அடிவரை தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கும் இந்த கால்வாயில் சிறு பாறைகளும் மரம் செடி கொடிகளும் உண்டு.. அந்த பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் இடு ஒடிக் கொண்டிருக்கிறது,,,, சம்பவம் நடந்த வீட்டின் பின்னால் பெரிய நிலப்பரப்பும் அதை ஒட்டி சற்று சரிவுடன் கூடிய இந்த கால்வாய் இருக்கிறது சம்பவதன்று  பக்கத்துவீட்டு பெண்மணியிடம் அந்த குழந்தையின் தாயார் நின்று பேசிக் கொண்டிருந்தார்.. அவரின் 2 வயது குழந்தையும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.. இந்த 2 பெண்மணிகளும் இந்திய பெண்மணிகள்தான்.. இந்த பெண்கள் பேச்சு சுவாராஸ்யத்தில் குழந்தையை கவனிக்கவில்லை . விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறி அந்த் கால்வாயில் விழுந்து இறந்துவிட்டது . சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய பெண்மணி கால்வாயில் அவரின் குழந்தையை  பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுக்க உடனே ஆம்புலன்ஸ் போலீஸ் அனைவரும் வந்து பார்த்து குழந்தை இறந்துவிட்டதை உறுதிபடுத்திவிட்டு உடனே அந்த பெண்மணியை குழந்தையை பொறுப்புடன் பார்த்து வளர்க்க தெரியாததால் கைது செய்ததுடன் வீட்டில் இருந்த மற்றொரு குழந்தையையும் நீங்கள் வளர்க்க தகுதி இல்லாதவர் என்று தூக்கி சென்றுவிட்டது.. அதன் பின் கணவர் வந்து நல்ல வக்கிலை அமர்த்தி வாதாடி நாங்கள் இந்தியாவிற்க்கே போய்விடுகிறோம் குழந்தையை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்  பேசி இறுதியில் குழந்தையுடன் இண்டியா சென்றுவிட்டார்கள்.


இங்கே எல்லாம் இப்படித்தான் இங்கு தண்டனைகள் கிடைக்கும் சில சமயங்களில் யாராவது குழந்தையை காரில் வைத்துவிட்டு அவசர அவரமாக கடையில் உள்ளே சென்று ஏதாவது வாங்க சென்று இருந்தால் அதை பார்த்து  யாரவது போலீஸில் ரிப்போர்ட் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோருக்கு தண்டனை கிடைப்பது மட்டுமல்ல  அவர்களின் குழந்தையை ஃபாஸ்டர் பேரண்ட்ஸ்சிடம் (Foster parents are people who officially take a child into their family for a period of time, without becoming the child's legal parents. The child is referred to as their foster child. 0கொண்டு போய்விட்டுவிடுவார்கள்.  இந்தியாவில் அப்படி செய்யாமல் தவறு இழைத்த பெற்றோர்களுக்கு தண்டனை தறுவதற்கு பதிலால பரிசை கொடுத்தால் குற்றங்கள் கூடத்தானே செய்யும்..


சுர்ஜித்திற்கு நடந்த சம்பவம் போல அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது மிட்லேண்ட் நகரம். அங்கு 1987 ஆம் ஆண்டு ஜெஸிகா மெக்லியூர் என்ற ஒன்றரை வயது குழந்தை தன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. தாயின் கண்காணிப்பில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென வீட்டின் பின்னால் இருந்த மூடப்படாத 22 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.

உடனே  தாய் மீட்புக்குழுவிற்கு தகவல் சொல்ல, விரைந்து வந்தது தீயணைப்புத் துறை வாகனங்களும், மீட்புப் படையும். எளிமையாக மீட்டுவிடலாம் என நினைத்த மீட்புப்படைக்கு நம் ஊரைப் போலவே அங்கிருந்த பாறைகள் சவாலாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் அறிமுகமாகியிருந்த வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்கவாட்டில் துளையிட்டு மீட்புக்குழு வீரர் ஒருவர் உள்ளே இறங்கினார். கிட்டத்தட்ட 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜெஸிகா மெக்லியூர் உயிருடன் மீட்கப்பட்டாள். நாடே அதனைக் கொண்டாடியது. தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெஸிகாவிற்கு இப்போது வயது 33 ஜெஸிகாவை மீட்ட கையோடு நாட்டில் கவனிப்பின்றி கிடந்த அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் போர்க்கால அடிப்படையில் மூடியது அமெரிக்க அரசு. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அமெரிக்காவில் ., ஜெஸிகாவிற்கு பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளைக் கிணறு விபத்து கூட நிகழவில்லை...


சுஜித்தின் மரணத்திற்கு பிறகாவது விழிக்குமா இந்தியா

Thursday 24 October 2019

மானம் காத்த மருதுபாண்டிய மன்னர்கள்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோயில் ஆகும்.



ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.

மானம் காத்த மருதுபாண்டிய மன்னர்கள் :

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் பூலித்தேவன். அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், வீர மருது சகோதரர்கள், போன்றவர்கள்.

இதில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம், வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் திறன் படைத்தவர் பெரிய மருது.

பெரிய மருது மிகப் பெரிய வீரர் நாணயத்தை சாதாரணமாக கை விரல்களால் வளைக்கும் திறன் கொண்ட மாவீரர். மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்ததோடு, ஒரு அங்குல இடத்தை கூட விட்டுத்தர மறுத்தார்கள். கப்பம் எல்லாம் செலுத்த முடியாது, வேண்டுமானால் மோதிப் பார்த்துவிடலாம் என்று எழுத்து மூலமாக ஆங்கிலேயரை போருக்கு அழைத்தவர்கள் இந்த மாவீரர்கள்.

ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்திற்கு முன்னாள் வேல்கம்பு, வீச்சரிவாள், மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவனுக்கு ஆங்கிலேயரை போருக்கு வா” என்று கேட்க தைரியம் வேண்டும். அந்த தைரியம் தீரர் #திப்புசுல்தானுக்கும், #மருதுபாண்டிய மன்னர்களுக்கு மட்டுமே இருந்தது.

(வளரி என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர் பெரிய மருது. தொடு வர்மக்கலையிலும் மிகப்பெரும் வல்லவராவார். பெரிய மருதுவிடம்தான் கர்னல் வெல்ஷ் என்பவர் வளரி சுற்ற தான் கற்றுக் கொண்டதாக தனது நாள் குறிப்பில் எழுதியுள்ளார்.)

ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு மருதுகளின் மீது போர் தொடுத்தது. போரின் முடிவில் மாவீரர் சின்ன மருது ஒரு மிருகத்தை போல் வேட்டையாடப்பட்டதையும், தொடையில் காயமுற்று காலொடிந்து சிறையிலடைக்கப்பட்டதையும், கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கிலேய தளபதி தனது ராணுவ நினைவு குறிப்புகளில் பதிந்துள்ளார் என வரலாற்று ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ண்ன் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். 1813-ல் கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய மருது பாண்டியர் வரலாற்றிலும் இவை பற்றி விளக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த வரலாற்று ஆசிரியர் #மீ__மனோகரன் தனது மருது பாண்டிய மன்னர்கள் நூலிலும் இதை விவரித்து எழுதி உள்ளார்.

“கிஸ்தியெல்லாம் தர முடியாது. வேண்டுமானால் மோதிப்பார்த்து விடலாம்” என்று கூறுவதற்கு தைரியமும் ஆண்மையும் வேண்டும். அதுவும் வெள்ளையனின் அதிநவீன ஆயுதங்களுக்கு முன்பு எழுத்து மூலமாக கேட்பதற்கு தைரியம் வேண்டும். அது போன்றதொரு தைரியம் மருது சகோதரர்களுக்கு இருந்ததில் வியப்பேதும் இல்லை.

1801-ம் வருடம் விதியால் வெல்லப்பட்ட மருதுவின் குடும்பத்தினர் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர், பின்பு எந்த விசாரனையும் இன்றி உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். போர் முடிந்த நேரம் மருதுவின் குடும்ப வழியில் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டார்கள் . சுருக்கமாக சொன்னால் ஒரு வம்சத்தையே “மேஜர் அக்னியு” தூக்கிலிட்டு கொன்றழித்துள்ளான்..

மொத்தமாக மருதுவின் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளான். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளான்.. நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.

சின்ன மருதுவை பிரத்தியேகமாக இரும்பு கூண்டு ஒன்றை தயாரித்து அதில் திருப்பத்தூர் அழைத்து வந்து அந்த கூண்டோடு தூக்கிலியிட்டுள்ளான் “மேஜர் அக்னியூ”. (அப்போது வழக்கத்திற்கு வந்த வார்த்தைதான் கூண்டோடு ஒழித்து விடுவேன் என்ற வார்த்தை.)

பின்பு சின்ன மருதுவின் மகன் துரைசாமி “தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15. (தனது தந்தை சின்ன மருது தூக்கிலிடப்பட்டதையும், தனது வம்சத்தினர் அனைவரும் கொல்லப்பட்டதையும் உணர்ந்தே கைதியாக தூத்துக்குடி வந்த அந்த 15 வயது பாலகன், தனது தீவாந்திர பயணத்திற்காக விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட தருணத்தையும், அமைதியாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவனைப் போல் நின்ற கோலத்தையும் வாசிக்கும் எவருக்கும் கண்களில் கண்ணீரை பெருக்கெடுத்து ஓட செய்யும்.) 1802, பிப்ரவரி, 11-ல் தளபதி வெல்ஷ் துரை சாமியை நாடு கடத்த தூத்துகுடியில் கப்பலில் ஏற்றிய தருணத்தை இப்படி கூறுகிறார்.




“என் ஆத்மார்த்த நண்பர் சின்ன மருதுவின் மகனை என்னால் தப்பிக்க வைத்திருக்க முடியும், ஆனால் அவருடன் சேர்த்து மொத்தம் 72 பேரை நாடு கடத்தும் உத்தரவை பிரிட்டிஷ் அரசு எனக்கு ஆணை பிறப்பித்து இருந்ததால், பொறுப்பு அதிகாரியான என்னால் நண்பரின் மகனை தப்பிக்க வைக்க முடியவில்லை, வேறு ஒருவரின் பாதுகாப்பில் மருதுவின் மகன் இருந்திருந்தால் நிச்சயம் நான் துரைச்சாமியை தப்பிக்க வைக்க முயன்றிருப்பேன், ஆனால் என் பொறுப்பில் துரைச்சாமியை ஒப்படைத்தது திட்டமிடலா, தற்செயலா என தெரியவில்லை” என்கிறார். பின்பு 17 ஆண்டுகள் கழித்து “தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” தீவிற்கு சென்ற வெல்ஷ் துரைசாமி இருந்த கோலத்தைப் பார்த்து கண்கலங்கி உள்ளார். (33 வயது துரைசாமி 60 வயது கிழவர் போன்று தோற்றமளித்துள்ளார்.)

“தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” தீவில் வெல்ஷ் இருந்த போது ஒரு கிழவன் அவர் முன்னே வந்து நின்றிருக்கிறான். அப்போது வெல்ஷ் அவனிடம் “யார் நீ என்ன வேண்டும்” என்று மிரட்டலாக கேட்டுள்ளார். அவன் அளித்த பதிலில் தீயை மிதித்தவர் போல் மிரண்டு போய் தனது இருக்கையை விட்டு எழுந்துள்ளார். நெஞ்சே பிளந்தது போன்று தூக்கிவாரி போட்டுள்ளது.

சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்த அந்த கிழவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வழிய விட்டு, துரை”’சாமி”’யா”’ என்றுள்ளான். துடி துடித்து இருக்கையை விட்டு எழுந்த வெல்ஷ் உற்று நோக்கி விட்டு வேதனையில் துடித்துள்ளார். “துரை”சாமி” என்று அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த தருணத்தை என் வாழ்நாளில் சாகும் வரை நான் மறக்க முடியாது” என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார் வெல்ஷ்.

தான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் என்பது குறித்து தன் வம்சா வழியினருக்கு ஒரு கடிதம் தருவதாகவும், அதை தன் வம்சா வழியினரிடம் சேர்ப்பிக்குமாறும், துரைசாமி வெல்ஷிடம் கேட்டுள்ளார். ஆனால் தான் பிரிட்டிஷ் அதிகாரியாக வந்துள்ளதால், தன்னால் அதை செய்ய முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அந்த உதவியை செய்ய முடியாமல் போனதை நினைத்து வெல்ஷ் வருந்தியுள்ளார்.

மறவர் சீமையை ஆண்ட மருதுவின் மகனால் ஒரு கடிதத்தைகூட அனுப்பமுடியாத கையறும் நிலைக்கு ஆளாகி நின்ற துயரமான தருனம், நிச்சயம் வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்தான். விதியின் வசத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மருது சகோதரர்களை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் மானத்துடன் வாழ்ந்த மருது சகோதரர்களின் வீரத்தையும், புகழையும் எவராலும் என்றும், மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது..

மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

முதலில் அஞ்சா நெஞ்சன் சின்ன மருது மக்கள் இதயம் துடி துடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்த மகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. கடைசியாக சின்ன மருதுவின் மகன் பதினைந்து வயது பாலகன். வயதை காரணம் காட்டி அவனை தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டி விட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை காண வைத்தது கொடுமை. அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இருப்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டி விட்டிருந்தார்கள். இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச் சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு. அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டும் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.



அந்த வீரன் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவர், முதன்மையானவர். மாவீரன் பூலித்தேவன், மருதுபாண்டியர் காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத் தளபதிகளாகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. ராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று, “மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் தர்மகுணவான் இபுராமு சாகிபும் தம்பி இசுமாலு ராவுத்தனும்…” என்று கதைப் பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு – 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்ன மருதுவின் படைத் தளபதி சேக் உசேன் குறிபிடப்படுகிறார்.

தெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்ன மலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர். ‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப்படைப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன் தான். வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகமும், நாட்டுபற்று, நிர்வாகத்திறன் என்று சகல திறமையும் வேண்டும். அந்த செயலை செய்து தன்னை போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.

சின்ன மருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர் மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையர் கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்ன மருதுவின் படைத் தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்கு சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.

இரும்பு குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச் சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்கு தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய் நாட்டையும் 15 வயது துரைச் சாமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் என்று உறுதிபுண்டார். கடலிலே நாட்டுகள் பல கடந்தன.

சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்த தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது. உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்!’ ‘கிளிங்!’ என்று சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிற மொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், அவரால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கி விட்டனர். எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவு கூட தராமல் காலம் தள்ளியது கொடுமை. ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்க சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு சேக் உசேன், “என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்ச மாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர அந்தச் செயலை மட்டும் செய்ய மாட்டேன்” என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக் கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது. இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, “எனது இராணுவ நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர் தான் உலகிற்கே தெரியும். இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகப் போராடிய சேக் உசேன் போன்ற தன்மானம் மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வர வேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்.

வாழ்க்கைக் குறிப்பு :

இன்றைய விருதுநகர் மாவட்டம் #நரிக்குடிக்கு அருகில் உள்ள #முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.

இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.

சிவகங்கைச் சீமை மீட்பு :

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

ஒற்றுமை :

மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.

இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம் :

1801 ஜுன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை :

கட்டபொம்முலு தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.

1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நினைவிடம் :

மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது.



கார்த்திகேயபாண்டியன்