Wednesday, 29 April 2020

பிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள்

தற்பொழுது பிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள் காத்தான்குடி சம்பவம் மட்டக்களப்பு போன்ற ஏனைய சம்பவங்களை முன்னெடுத்து கொண்டு தமிழின தேசியத்தலைவர் பிரபாகரன் பெயரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்...




முஸ்லிம்களை தற்போது இருக்கின்ற திராவிட கட்சிகள் எப்படி மூளைச்சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகின்றனவே..

அது போலவே #இலங்கையிலும் சிங்கள அரசு அதாவது இலங்கை_அரசு  
விடுதலைப்புலிகளை நேரடியாக போரில் வெற்றி கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்து தமிழினத்திலிருந்து இஸ்லாத்தை மட்டும் பிரித்து அவர்களுக்குள் இனக் கலவரம் ஏற்படுத்த பல்வேறு செயல்களைச் செய்தனர்..

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் பலர் விடுதலைப் புலிகளில் இணைந்து சிங்கள அரசுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்தனர்..

இது சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது..

சில இஸ்லாமியர்களை தங்கள் கையிட்டு கொண்ட சிங்கள அரசு தவறான வழிநடத்தல் காரணமாக விடுதலைப் புலிகளில் இருந்து இஸ்லாமியர்களை பிரிப்பதற்கு பல சூழ்ச்சிகளை செய்தனர்..

அதன் விளைவாகவே...

1981 செப்டம்பர் 21 இல் இலங்கை முசுலிம்களுக்கெனத் தனியான அரசியல் கட்சி #சிறீலங்கா_முஸ்லிம்_காங்கிரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கை முசுலிம்கள் தமிழரில் இருந்து வேறுபட்ட இனம் என்ற கோட்பாடு மீண்டும் தலைதூக்கியது...




இதனால், 

[1]தமிழீழம் என்ற நாடு உருவாகினால் தாம் அந்த நாட்டில் சிறுபான்மையினராக ஆகிவிடுவீர்கள் என்ற அச்சத்தை முசுலிம்களிடையே இலங்கை அரச விதைத்தது..

[2] இலங்கை அரசு முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து தமிழீழக் கோட்பாட்டை #முசுலிம்_காங்கிரசு_கட்சி பலமாக எதிர்த்து வந்தது...

[3] அத்துடன் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முசுலிம்களின் பகுதிகளில் #முசுலிம்_ஊர்க்காவல்_படைகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அளித்து விடுதலை புலி மற்றும் தமிழர் இனங்களுக்கு எதிராக கலவர நிலையை வளர்த்து விட ஆரமித்தது.....

IBC தமிழ் கீழே குறிப்பிட்டுள்ள காணொளியில் கூறியது போன்று சிங்கள அரசின் ஆதரவோடு சில இஸ்லாமியர்களின் தவறான வழிகாட்டுதலோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தொடங்கியது இந்த வழி தவறிய சில இஸ்லாமிய அமைப்பு...

இதனை அறிந்த தலைவர் பிரபாகரன் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித தாக்குதல்களும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்தார்...

காத்தான்குடி மசூதி தாக்குதல் நடைபெற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் இது ஒரு துன்பியல் சம்பவம் என ஒரு மாநாட்டில் குறிப்பிட்டார்..

ஆனாலும் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியவர்கள் அல்லது தமிழ்தேசிய பற்றுள்ளவர்கள் தங்களுடன் இத்தனை நாள் இருந்த இஸ்லாமியர்கள் தற்போது நமக்கு எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடு கிறார்கள் என்று சில கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்...

ஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் தலைவர் பிரபாகரன்..

இதுகுறித்து கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பின் போது சில முஸ்லிம்கள் ஈழத்தில் எங்களுக்கு எதிராக போராடி இருந்தாலும் பரவாயில்லை
போரில் வெற்றிபெற்றதும் முஸ்லிம்களுக்கு
தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறினார்..
அந்த செய்தியாளர் சந்திப்பின் காணொளியின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது..

(https://youtu.be/BAKgnN8F7R0)

இதை நான் இப்போது ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல இஸ்லாமியர்கள் எங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற தமிழின தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்து வருகின்றனர்...

இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது..

அந்த நாள் முதல் இந்த நாள் வரை உங்களை ஈழப்போரில் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிங்கள அரசாக இருந்தாலும் சரி தற்போது தமிழகத்தில் ஆளுகின்ற திராவிட கட்சிகள இருந்தாலும் சரி அவர்கள் உங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொடுப்பது போல் கொடுத்துக்கொண்டு..

உங்களுக்குள்ளேயே பல முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கி உங்களுக்குள்ளே மோதவிட்டும் மற்றும் தமிழ் தேசியத்தலைவர்களை இழிவுபடுத்தும் செயலுக்கு உங்களை கருவியாக  பார்க்கின்றனர்..

இப்போது நடந்த முகநூல் சண்டையில் இறைத்தூதரையும் இஸ்லாத்தையும் தவறாக சித்தரித்தவர்களை கண்டித்துள்ளார்கள் எல்லாரும்..

ஆனால் தவறாக தலைவர் பிரபாகரனை சித்தரித்த அவர்களுக்கு ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் பலர் விடுதலைப் புலிகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் இன்னமும் கட்டமைத்துக் கொண்டும் பிரச்சினைகளை வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது...

தமிழ் தேசியத்தையும்,பிரபாகரனையும் ஏற்றுக் கொண்ட சிலரை தவிர பெரும்பான்மையான முஸ்லிம்கள் இன்னும் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களுக்குத் தான் இந்த விளக்கம்..
எல்லோரும் இனமாக ஒன்று சேர்வோம்..

No comments:

Post a Comment