Friday 27 November 2020

சங்கரின் சாவு எப்படி நிகழ்ந்தது?

 சங்கரின் சாவுக்கு திகதி குறிக்கப்பட்டுவிட்டதையும், அது புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப்போவதை அறியாமல் தான் 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் யாழ்பாணத்தின் காலை விடிந்தது என தொல்லியற்துறை மாணவன் திபாகரன் எழுதியுள்ள வரலாற்றின் பதிவுகள் ஆவணத்தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.




அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1982ல் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவப்பொருட்களை வணக்கத்துக்குரிய பிதா சிங்கராயர் அவர்கள்தான் கொள்வனவு செய்திருந்தார்.

அவரது ஆச்சிரமத்தை எதிர்பாராதவிதமாக சோதனையிட்டபோது பொலிஸாரிடம் அம்மருந்துப் பொருட்களுக்கான பற்றுச்சிட்டைக்கள் அகப்பட்டுவிட்டன.

அதனால் கைதாகிய பிதா சிங்கராயர் கொடுமையான விசாரணயின் போது உண்மைகளைச் சொல்லிவிட்டார்.

போராளிகளுக்கு சிகிச்சையளித்த அருட்சகோதரரும், வைத்தியருமான இரட்டையர்கள் சின்னராசா, குருகுலராசா ஆகிய இருவரும் கைதாகினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட கடுமையான விசாரணையின் போது யாழ். பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சிகிச்சையளிப்பட்மை தெரியவந்துள்ளது. உடனே அவர் வீட்டை நோக்கிப் படையினர் பாய்ந்தனர்.

அன்று நல்லுரில் நாவலர் வீதியும், டக்கா வீதியும் சந்திக்கும் சந்தி மூலையிலுள்ள பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயமடைந்த சீலன் உள்ளிட்ட நான்கு போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வெளியேறும் போது மகிழ்ச்சியின் நிமித்தம் புலி வீரர்களுக்கு விருந்துபசாரம் நிகழ்ந்துள்ளது.

போராளிகள் இருவர் இருவராக சென்று உணவருந்திவிட்டு திரும்பிவிட்டனர். மாலை 3:30 மணியளவில் இறுதியாக அங்கு சென்ற லெப்.சங்கர் வீட்டினுள்ளே விரிவுரையாளருடன் உணவருந்திக் கொண்டிருந்தார்.

அவ்வேளை வீட்டனுள் சிங்களப்படை திடீரென தேடுதல் வேட்டைக்காக புகுந்துள்ளனர். உடனே சங்கர் வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று கிலுவை வேலியை வேகமாக பாய்ந்து தாண்டும்போது இராணுவத்தின் துப்பாக்கி ரவை ஒன்று சங்கரின் அடிவயிற்றுப் பகுதியில் படுகாயப்படுத்தியது.

இரத்தம் பீறிட்டுக்கொண்டிருக்க டக்கா வீதியில் குதித்து ஓடிக்கொண்டிருந்த சங்கரை அவ்வீதியால் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஈரோஸ் இயக்க உறுப்பினரும், பல்கலைக்கழக மாணவருமான செல்வின் தனது கரங்களால் தாங்கிப்படித்து மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வேகமாக திருநெல்வேலியில் உள்ள போராளிகளின் மறைமுக முகாம் நோக்கி விரைந்தார். மாலை 4 மணிக்கு குமாரசாமி வீதி 41ம் இலக்க மறைமுக முகாம் வீட்டில் பாதுகாப்பாக சங்கர் சேர்க்கப்பட்டார்.

மாலைநேரம் போராளிகளும், ஆதரவாளர்களும் விரைவாக தொழிற்பட தொடங்கினர். மருத்துவர் கெங்காதனிடம் அவசர உதவி கோரப்பட்டது. அன்றைய பதற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியாது.

ஆகையால் தனியிடத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர் இசைந்ததற்கிணங்க தீவிர ஆதரவாளரும், பல்கலைக்கழக மாணவருமான ஜெயரெட்டி தனது காரில் ஏற்றிக்கொண்டு செல்ல சங்கருக்கு தனியிடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் உள்ளக இரத்தக்கசிவுக்கு யாழ்பாணத்தில் வைத்து சிகிச்சையளிப்பது பாதுகாப்பற்றது என்பதை காரணம் காட்டி தமிழகம் கொண்டு செல்லும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கினார். அன்றிரவு சங்கர் கொக்குவில் அம்பட்டப்பலத்தடியில் உள்ள ஒரு வீட்டில் (ரவிசேகரின் அறையில்) பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.

ஐந்து நாட்களாக தமிழக படகுப்பயணம் பல்வேறு தடைகளால் தாமதப்பட்டு நவம்பர் 26 இரவு தமிழகம் நோக்கி பயணப்பட்டார். சங்கரை மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு செல்ல அன்று இயக்கத்திலிருந்து விலகியிருந்த அன்ரன் சிவா (சிவகுமார் தற்போது கனடாவில்) நியமிக்கப்பட்டார்.

27ம் நாள் அதிகாலை தமிழக கரையினை அடைந்த சங்கரை இயக்க ஆதரவாளாரான மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்க வைத்துவிட்டு அன்ரன் சிவா, தலைவரை சந்திக்க மதுரைக்குச் சென்று தகவல் சொல்லி மதுரையில் இருந்து போராளிகள் வாகனம் ஒன்றை கொண்டு சென்று சங்கரை தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரகசியமாக அனுமதித்தனர்.

எனினும் ஏற்கனவே மூதாட்டி வீட்டில் படுகாயத்தின் வேதனையில் முனகிக்கொண்டிருந்த சங்கர் தாகம் மேலிட தண்ணீர் கேட்க மூதாட்டி கோப்பி தயாரித்து வழங்கியுள்ளார்.

கோப்பி அருந்தியதும் ஒவ்வாமையால் விரைவான உள்ளக இரத்தப்பெருக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்த சங்கர், தம்பி தம்பி என தலைவரை நெடுநேரம் அழைத்துக் கொண்டே மாலை 6:05க்கு தமிழகத்தின் மதுரை மண்ணில் அவர் மூச்சு நின்று போனது.

அன்றைய காலச்சூழலில் சங்கரின் வித்துடலை பூரண மரியாதைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்ய முடியாது.

எனவே சங்கரை தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து இரவுநேரம் எடுத்துச்சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில் மூத்த போராளிகளான பேபி, பொன்னம்மான், தேவர், கிட்டு மற்றும் நெடுமாறன் ஐயாவும் அவரின் கட்சித் தொண்டர்கள் சிலரோடும் சென்று அப்பையா அண்ணர் சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்.

பின் அஸ்தியை சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து மாவீரர் விதைப்பு உதயமாகியது. இன்று அந்த நவம்பர் 27 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் குறியீட்டு நாளாய் பரிமாணமித்திருக்கிறது. சங்கரின் அடிச்சுவட்டை பின்பற்றி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேசத்தின் புதல்வர்கள் தாயக விடிவிற்காக தம்மை ஆகுதியாக்கி விடுதலைப் போருக்கு உரமாயினர்.

இம்மாவீரர்கள் தம் இளமைக்காலத்தை துறந்தவர்கள், பணம், பதவி, பட்டம், புகழ், ஆசைகளை புறந்தள்ளியவர்கள், இலட்சிய வேட்கையேடு நெருப்பாற்றில் நீந்தியவர்கள், சொல்லணாத்துன்பங்களை தோளில் சுமந்து தமிழ் மக்களுக்கு ஒளியூட்டியவர்கள், எதற்கும் விலைபோகதவர்கள், அவர்கள் விலைமதிப்பற்றவர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவையும் நெஞ்சில் சுமந்து களமாடியவர்கள் இத்தகைய மாவீரர்களின் கனவு சுமந்து நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்நாளில் தமிழிழ மக்கள் உறுதிகொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tuesday 17 November 2020

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள்

 இலங்கையில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியிலே தமிழ்மொழி பேசுவோர் பல நூற்றாண்டுக்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வரலாறு கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. எமக்கடுத்த தலைமுறையினரின் ஆய்வுகளும் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவருகின்ற ஆய்வுகளும் அண்மையில் கந்தரோடையிலும் போர்க்காலத்தில் இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட அய்வுகளும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.




ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளரிற் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையிலே தமிழர் வாழும் பிரதேசங்களைப் பற்றியும்  தமிழ்மொழி வழங்கும் பிராந்தியங்களைப் பற்றியும் தாம் நேரடியாகக் கண்டும் கேட்டும் அறிந்தவற்றையும் சில சமயங்களில் ஆவணச்சுவடிகளிற் பதிவாகியுள்ளவற்றைப் பார்த்தும் மிகத்தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் வர்ணித்துள்ளனர். 'நீர்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினம் வரையுள்ள பகுதிகளில் வாழ்கின்றவர்கள் தமிழ்மொழியை சீராகப் பேசுகின்றனர். இலங்கையில் அவர்களே அதிக தயக்கமின்றி க் கிறிஸ்தவ சமயத்தை ஒப்புக்கொண்டவர்கள்' என்பது இலங்கை பற்றிப் 17ஆம் நூற்றாண்டில் ஒரு விரிவான வரலாற்று நூலை எழுதிய பாதிரியாரான பெர்ணாஓ த கேறோஸ் என்பவரின் குறிப்பாகும். 

இதனைக் காட்டிலும் உலாந்தக்காரரான  பிலிப்பூஸ் வோல்டே என்னும் பாதிரியார் கூறுவன மிகவும் அழுத்தமானவை. அவர் மேல்வருமாறு எழுதகின்றார். 

'இலங்கையில் வாழ்கின்றவர்கள் சிங்களத்தை மட்டும் பேசவில்லை, அவர்கள் தமிழ்மொழியினையும் பேசுகின்றார்கள். நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, களுத்துறை, கவருவலை, அலுத்கம, காலி, வெலிகம, மாத்தறை, தேநுவரை முதலான இடங்களில் உள்ளவர்கள் சிங்களத்தைப் பேசுகின்றார்கள். சோழ மண்டலக் கரைக்கு அண்மையிலுள்ளனவாகிய, இலங்கையின் மற்றெல்லாப் பகுதியிலும் வழங்கும் மொழி தமிழேயாகும். சோழ மண்டலத்திலுள்ளவர்கள் முற்காலங்களில் சென்று தங்கள் தேசத்திலே குடியேறினார்கள் என்றும், அதன் விளைவாகவே தங்கள் ஆதியான முன்னோர்களின் நாட்டுக்குரியதான தமிழ்மொழி அங்கெல்லாம் வழங்குகிசதென்றும் யாழ்ப்பாணப் பட்டினத்தவர்கள் சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்' 

கண்டி இராச்சியத்தில் நெடுங்காலம் தடுப்புக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரித்தானியரான ரொபர்ட் நொக்ஸ் எழுதிய 17 ஆம் நூற்றாண்டுக்குரிய நூலிலுள்ள குறிப்பு இதனை மேலும் தெளிவுப் படுத்துகின்றது. அவர் தமிழரின் தேசம் என்பதைப் பற்றி மேல்வருமாறு குறிப்பிடுகின்றார். 

'நாங்கள் வியாழக்கிழமை பொழுது மதியத்தைக் கடக்கும்வரை பிரயாணஞ்செய்தோம். அப்பொழுது குருந்து ஓயா என்று சொல்லப்படுகின்ற ஆற்றைக் கடந்தோம். அது நீராட்டமின்றி வரட்சியான நிலையில் காணப்பட்டது. அது கண்டி அரசனுடைய இராச்சியத்திற்கும் தமிழரின் தேசத்திற்கும் இடையிலான எல்லையாகும், எனினும் நாங்கள் தமிழர்கள் வாழும் நாட்டை அடைந்துவிட்டதால் சற்று ஏக்கமடைந்தோம். அந்த மக்களின் புரவலனாகிய வன்னியனார் அச்சத்தின் காரணமாக உலாந்தக்காரருக்கு திறை செலுத்துகின்றான், ஆயினும் அவன் கண்டி அரசன்மேற் கூடிய அனுதாபங் கொண்டவனாவான்.'

தமிழரின் தேசம் என்று ரொபர்ட் நொக்ஸ் குறிப்பிடுவது அடங்காப்பற்று வன்னியிலுள்ள மிகப்பெரிய பிரிவான பனங்காமம் பற்று என்பதாகும். வேறோரிடத்தில் தமிழர் தேசம் என்பதை கொய்லத் வன்னிநாடு (கயிலாய வன்னி நாடு) அவர் குறிப்பிடுகின்றார். கயிலாய வன்னியன் அடங்காப்பற்று வன்னியில் மிகவும் பிரசித்தமானவன். யாழ்ப்பாணம் மீது போர்த்துக்கேயர் படையெடுத்துச் சென்ற போது அங்கு எதிராக போரிட்ட சங்கிலி குமாரனுக்கு துணையாகவிருந்த வன்னியரிற் கயிலாய வன்னியன் முதன்மையானவன். போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும் கயிலாய வன்னியன் நல்லூருக்குச் சென்று திறைசெலுத்த மறுத்துவிட்டான். மற்றைய வன்னிபங்களும் அவனின் தலைமையை ஏற்றுக்கொண்டதோடு பறங்கியரிடம் சென்று திறை செலுத்துவதை மறுத்துவிட்டன.

தென்னிந்தியாவிலிருந்தும் காலாகாலமாக கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாக இலங்கையின் கரையோர மாகாணங்களிற் பெருங் கற்பண்பாட்டு மக்கள் குடியேறினார்கள்.அவர்கள் அமைத்த குடியிருப்புக்களை அடிப்படையாகக் கொண்டு ளகிராமங்கள், நகரங்கள், பண்டமாற்று நிலையங்கள், குறுநில அரசுகள் என்பன உருவாகின. ஆடங்காப்பற்று வன்னியிலுமு; இந்த மாற்றங்கள் இடம்பெற்றன. ஆங்கு காணப்படும் பிராமிச் சாசனங்கள் அதற்குரிய ஆதாரங்களாகும்.

இராசதானிகளை மையமாகக் கொண்ட, பரம்பரை வழியான குடியாட்சி முறை வலுப்பெற்ற பொழுதிலும் பூர்வகாலத்தில் உற்பத்தியான சிற்றரசுகள் ஏதோவொரு வகையில் தொடர்ந்தும் நிலைபெற்றன. சுயாட்சி உரிமையும் அதிகாரமும் கொண்ட அந்நிலப் பிரிவுகளைப் 13ஆம் நூற்றாண்டு முதலாக வன்னி என்று குறிப்பிட்டனர். அது தமிழ்,சிங்களம்,பாளி ஆகிய மொழிகளில் அமைந்த நூல்களிலே பொது வழக்காகி விட்டது. தமிழகத்திலுள்ள மரபொன்றின் மூலமாகவே இவ் வழமை இலங்கையில் ஏற்பட்டது.

தமிழர் வாழும் பகுதிகளான  அடங்காப்பற்று, திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்புப் பிரதேசம் என்பவற்றில் வன்னிச் சிற்றரசுகள் நெடுங்காலம் நிலைபெற்றன. யாழ்பப்hணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சில காலம் சாவகர் ஆட்சி புரிந்தனர். அவர்கள் திருகோணமலையினைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர் போலத் தெரிகின்றது. தம்பலாகாமத்தில் நிலை கொண்டிருந்த ஜகதப்ப கண்டன் என்னும் பெயருடைய படை கலிங்க மகானைச் சிறைப் பிடித்ததென்பதை அங்குள்ள கல்வெட்டொன்றின் மூலம் அனுமானித்துக் கொள்ளமுடிகின்றது.

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் அடங்காப்பற்று என்பதையே வன்னி என்று குறிப்பிட்டனர். அதிற் பனங்காமம், கரிகட்டுமூலை, கருநாவல் பத்து, முள்ளியவளை, மேல்பத்து, தென்னமரவடி என்னும் ஆறு பிரிவுகள் இருந்தன். ஆவற்றின் ஆட்சியாளர் வன்னிபம்ஃவன்னியனார் என்ற பதவிப் பெயர்களை பெற்றவர்கள். முற்காலங்களில் அவர்களின் ஆட்சியுரிமை சந்தன வழிமுறையாகுமு;. ஆதனை ஒல்லாந்தர் ஒப்புக் கொள்ளாதமையும் இரு சாராருக்கும் இடையிலே தகராறுகள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஆவர்களுக்குச் சில சீர்வரிசைகளும் அதிகாரங்களும் உரித்தானவை. முற்காலங்களில் அவர்கள் தங்கள் ஆட்சிப் புலங்களில் எல்லா விதமான அதிகாரங்களையுங் கொண்டிருந்தனர்.அவர்கள் நல்லூர் இராசதானிக்குப் போகும் சமயங்களிலே வரிசைகளோடும் வாத்தியங்களோடும் செல்வது வழமை. அரசாங்கத்தில் அரசனுக்கு அடுத்தபடியிலுள்ள நிலை வன்னிபங்களுக்குரியதாகும். ஆவர்கள் அரசரைப் போல முடிசூடிக்கொள்ளவில்லை. நாணயங்களை வழங்கவில்லை. முற்றெல்லா வகையிலும் அரசரைப் போன்றவர்கள் என்பதால் ஜரோப்பியரிற் சிலர் வன்னிபங்களை 'அரசர்' என்று குறிப்பிட்டனர். தமிழரசர் காலத்தில் செட்டிகுளம் பற்றிலும் வன்னியரின் ஆட்சி நிரவியது. ஆனாற் போர்த்துக்கேயர் அதனை கைப்பற்றி, வன்னியரின் ஆட்சியை ஒழித்து விட்டனர்.

தமிழ் நூல்களில் அடங்காப்பற்று வன்னியின் வரலாறு தெளிவாக விளக்கப்படவில்லை. திருகோணமலை பிரதேசத்திலும் வன்னியரின் ஆட்சி நிலவியது. அங்கு திருகோணமலை, தம்பலாகாமம், கட்டுக்குளம், கொட்டியாரம் என்னும் நான்கு பற்றுக்கள் வன்னியரின் ஆட்சியின் கீழ் இருந்தன. அந் நான்கு பிரிவுகளிலும் தலைமுறை தலைமுறையாக ஆட்சிபுரிந்த வன்னியரின் பெயர்ப்பட்டியல்கள் கோணேசர் கல்வெட்டு என்னும் ந}லில் அமைந்திருக்கின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவர்களில்  இருவரின் பெயர்கள் சாசனங்களில் பதிவாகியுள்ளமையும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பழுகாமம், போரதீவு, மட்டக்களப்பு, உன்னரசகிரி, நாடுகாடு, சம்மாந்துரை, பாணமை, கோறளைப்பற்று என்னும் வன்னிப்பரிவுகள் முற்காலத்து மட்டக்களப்பு தேசத்தில் அடங்கியிருந்தன. அங்கு 17ஆம் நுற்றாண்டிலே கண்டி மன்னரின் மேலாதிக்கம் ஏற்பட்ட பின்னும் வன்னிபங்கள் சுயாட்சி உரிமை பெற்றிருந்தது குறிப்பிடற்குரியது. ஊள்ளூர் நிர்வாகம், இறைவரி நிர்வாகம், நீதிப்பரிபாலனம் என்பன அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. கனிசமான அளவு படைகளையும் அவர்கள் கொண்டிருந்தனர். இராச்சியத்தின் பிரதானமான விடயங்கள் தொடர்பாகத் தேசத்துப் பிரதானிகள் இராசதானியிற் கூடிய பொழுது கிழக்கிலங்கை வன்னிபங்களும் இராசதானிக்கு அழைக்கப்பட்டனர்.

வன்னி நிலப்பகுதியிலே தமிழ்மொழியே வழங்கியதென்றும் அம்மொழியைப் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களே அங்கு வாழ்ந்தனரென்றும் அங்கு ஒரு காலகட்டத்தில் ஆட்சி புரிந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த அதிகாரிகளும் அவர்களின் தேசங்களை சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானியர் ஆட்சியிலும் அதற்கு பின் 1956ஆம் ஆண்டு வரையிலும் இந்நிலை தொடர்ந்தும் காணப்பட்டது என்பதை குடித்தொகை மதிப்பீட்டு விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இங்கு வழங்கும் தமிழ் மொழியிலே சிங்கள மொழிக் கலப்பு சிறிதளவேனும் ஏற்படவில்லை என்பது மொழியியல் ஆய்வுகளின் முடிவாகும். புத்தளம், கற்பிட்டி, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டகளப்பு தேசம் என்பன இந்நிலப்பகுதியில் அடங்கிய தனித்துவமான பிரதேசங்கள, புவியியல்சார் நிலைகளும் வரலாற்று அம்சங்களும் ஒவ்வொரு பகுதுpயுமு; சிறப்புக்களுக்கு ஏதுவானவை. வாணிபம,; பண்பாடு, சமய நெறிகள், சமூகவழமைகள் ஆகிய துறைகளில், இந்நிலைப்பகுதியிலே தென்னிந்தியச் செல்வாக்கு காலகாலம் ஏற்பட்டுள்ளது. அது ஆதிகாலம் முதலாகத் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒன்றாகும்.

இங்கு வரையறை செய்யப்பட்ட ஜந்துநிலப்பகுதிகளில் புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலே தமிழ்மொழி பேசுவோரின் நிலை பெருமளவிற்கு பலவீனமாகிவிட்டது. மொழி மாற்றம், குடியேற்றத்திட்டங்களின் மூலம் குடித்தெகையில் ஏற்பட்ட மாற்றம், சமயமாற்றம் முதலியன இதற்கான காரணங்களாகும். அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்சிகளின் விளைவாக இதற்கமைய மாற்றம் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மையப் பகுதியிலும் ஏற்படக் கூடிய சாத்தியம் தென்படுகிறது.

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலம் முதலாகவே அப்பகுதிகளிற் சுயாட்சி உரிமை கொண்ட குறுநில அரசுகள் இருந்தன. ஜரோப்பியரின் ஆட்சிக் காலங்களில் அவை பலவீனமாகிக்; காலப்போக்கில் அழிந்து விட்டன. இப்பகுதிகளில் விளங்கிய குறுநில பகுதிகளைப் 13ஆம் நூற்றாண்டு தொடக்கம், தமிழக வளமையினை அடிப்படையாகக் கொண்டு வன்னி என்றும் அவற்றின் அதிபர்களை வன்னியனார் இலல்து வன்னிபம் என்றும் குறிப்பிட்டனர். ஆதனால் வன்னிகள்   13ஆம் நூற்றாண்டில் உற்பத்தியானவை என்ற கருத்து வரலாற்று ஆய்வாரள்களிடையே நிலவி வந்துள்ளது. அந்தக் கருத்தினைமுற்றாக நிராகரிக்க வேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்நிலை புதிய ஆய்வுகளின் விளைவாக உருவாகியுள்ளது. வன்னிகளின் வரலாறு, பூர்வ காலத்து சிற்றரசுகளின் உற்பத்தியோடு தொடர்புடையதாகும். அது கிறிஸ்தாப்தத்திற்கும் முற்பட்டது.

வன்னியும் நாகரும்

வன்னியில் மலைப் பாறைகளில் வெட்டப்பட்ட பிராமிக்கல்வெட்டுக்கள் ஐம்பத்து நான்கு இது வரை அடையாளங் காணப்பட்டுள்ளன. அவை மகாகட்சக்கோடி(04), எறுப்பொத்தானை(12), பெரியபுளியங்குளம்(35), வெடிக்கிநாறிமலை(03) ஆகிய இடங்களில் உள்ளன. அவை யாவும் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

பூர்வீகமான நுண்கற்காலப் பண்பாடு, தென்னிந்திய உற்பத்தியுடைய பெருங்கற் பண்பாடு, பௌத்த சமயம், அதன் தொடர்பு மொழியான பிராகிருதம் ஆகியவற்றின் சங்கமத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பண்பாட்டு மாற்றங்கள், அரசின் உருவாக்கம் என்பவற்றை அவை பிரதிபலிக்கின்றன. எனவே ஆவணங்களை அடிப்படையாக கொண்ட வன்னி நாட்டு வரலாறு இவற்றைப் பற்றிய ஆய்வு முயற்சிகளோடு ஆரம்பமாகின்றது. ஆனால் வரலாற்றறிஞர்கள் இக்கண்ணோட்டத்தில் இந்த ஆவணங்களை ஆராய முன்வரவில்லை. காலநிலை இதற்கொரு காரணமாகலாம். இங்கே குறிப்பிட்ட சாசனங்கள் அனைத்தும் பிரகிருத மொழியில் அமைந்தவை. இலங்கையின் ஏனைய பகுதிகளிற் கிடைத்துள்ள சாசனங்களைப் போல இச்சாசனங்களும் பௌத்த சமயம் தொடர்பானவை. சங்கத்தாருக்கு உபாசகர் நிலையில் உள்ளவர்கள் குகைகளைத் தானம் பண்ணியமை பற்றியவை.

வவுனியா மாவட்டத்துச் சாசனங்கள் ஒரு பல்லினப் பண்பாட்டுச் சமூகத்தின் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. சங்கத்தாரின் இலக்கிய மொழியும் பிரகிருதம் என்பதால் அதிலே சாசனங்களை எழுதியுள்ளனர். பிடக நெறியிற் புகுந்த உபாசகரின் பெயர்களும் பிரகிருத மொழிப் பெயர்களாகி விட்டன. அது சைவர்களினதும் வைணவர்களினதும் பெயர்கள் பெரும்பான்மையும் சமஸ்கிருத மொழி வழியான பெயர்களாக உள்ளதைப் போன்றது. பிற்காலங்களில் இஸ்லாமியராக மாறியவர்களின் பெயர்கள் அரபுமொழிப் பெயர்களாகவும், கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர்களின் பெயர்கள் மேனாட்டுப் பெயர்களாகவும் மாறிவிடுவதுண்டு. 

எனவே ஒருவரின் பெயரினைக் கொண்டு அவரதும் அவரது முன்னோர்களினதும் பேச்சு வழக்கு மொழியினை அடையாளப்படுத்தலாகாது. ஆயினும் பௌத்தம் பரவியதன் விளைவாகப் பிரகிருதம் அமோகமான செல்வாக்கைப் பெற்றது. தென்னிலங்கையிற் பழைய பூர்வீகமான மொழி வழக்கு மெல்ல மெல்ல மறைந்து விட்டது. பிரகிருதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய மொழி காலப்போக்கில் உருவாகியது. அதுவே சிங்களம்ஃ கலப்பு மொழியான பிரகிருதத்தின் அம்சங்கள் அதிலும் உள்ளன. 

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிற் பௌத்தம் மூலமாகப் பிரகிருதம் பெருஞ் செல்வாக்குப் பெற்றபோதும் அங்கு பிரகிருதமயமாக்கம் ஏற்படவில்லை. அங்கெல்லாம் பரவிய பூர்வகுடிகளோடு கலப்புற்ற பெருங்கற் பண்பாட்டு மக்களின் மேலோங்கிய செல்வாக்கினாலே தாய்மொழி வழக்கு உறுதியாகிவிட்டது. வன்னிநாட்டு இடப்பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்கள். அவற்றிலும் 90 வீதமானவை குளம் என்பதை பின்னொட்டாக கொண்டவை. பிராகிருதத்திற் சொற்கள் மெய்யெழுத்தில் முடிவதில்லை. எனவே உயிரேறி வரும். எனவே குளம் எனுஞ்சொல் குளம என்றாகிவிடும். வடமத்திய மாகாணத்தலும் வடமேல் மாகாணத்திலும் குளம என்ற சொல்லுடன் முடியும் பெயர்கள் அனேகமானவை. வன்னி நாட்டில் குளம் குளம என்று மாற்றம் பெறாமை அங்கு நாட்டார் மொழி வழக்கில் பிராகிருத மயமாக்கம் ஏற்படவில்லை என்பதன் அறிகுறியாகும்.

பொதுவாக ஆதிவாசிகளின் மொழி வழக்கிலுள்ள பெயர்கள் நெடுங்காலம் நிலைபெறுவதுண்டு. ஆயினும் இலங்கையின் தொன்னைக்காலத்து ஆதிவாசிகளான நுண்கற்கால மக்கள் நிலையான குடியிருப்புக்களையும் அவற்றின் பயனாக உருவாகக் கூடிய ஊர்களையும் குளஙடகளையும் அமைத்திருக்கவில்லை. எனவே கிராமிய வாழ்க்கையும் அதற்கு ஆதாரமான உற்பத்தி முறையும் செயற்கை முறையிலான நீர்நிலைகளும் பெருங்கற் பண்பாட்டு மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தியதன் விளைவாகவே தோன்றின. அவர்கள் தமிழ் திராவிட மொழியில் பேசியதால் நீர் நிலைகளைக் குளமென்று குறிப்பிட்டனர். வன்னியிலுள்ள ஊர்கள் பெரும்பான்மையும் குளம் என்ற சொல்லை பின்னொட்டாக கொண்டவை. குளத்தை ஏரி என்று சொல்வதும் தமிழ் வழக்கு. ஏரி என்பதன் தமிழ் வழக்கு சிங்கள வடிவம் ஏரிய என்பதாகும். மின்னேரிய என்பது அதற்கு உதாரணமாகும்.

பெருங்கற் பண்பாட்டு மக்களின் ஆதியான குடியிருப்புக்களின் அண்மையிற் செயற்கை முறையிலான நீர்த்தேக்கங்கள் தென்னிந்தியப்பிரதேசங்களிற் காணப்பட்டன. அப்பண்பாட்டிற்குரிய மக்கள் இலங்கையிற் சென்று குடியேறிய பொழுது அவர்கள் உருவாக்கிய குடியிருப்புக்களிலே தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நீரினைப் பெறுவதற்கும் பயிர்ச்செய்கைக்கும்  வேண்டிய  சிறிய குளங்களை அமைத்துக் கொண்டனர் என்பது பொருத்தமான சிந்தனையாகும். அவர்களுக்கு முன் அங்கு வாழ்ந்த நுண்கற்காலப்பண்பாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இது சாலக்காரியம் ஏன்எனில் அவர்கள் உற்பத்தி செய்யாதவர்கள் உலோகக் கருவி பயன்படுத்தாதவர்கள் எனவே பெருங்கற் பண்பாட்டின் செல்வாக்கின் விளைவாகவே வன்னியிலே கிராமங்களும் அவற்றுக்கு வேண்டிய குளங்களும் உருவாகின கிராமங்களும் அவற்றின் வயல்களும் குளங்களை ஆதாரமாக கொண்டு அமைந்ததால் குளம் என்பது அவற்றின் பெயர்களில் ஒரு பகுதியாகியது. 

இலங்கையிலே காணப்படும் பிராமிக்கல்வெட்டுக்களில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவற்றிலே தான் தமிழ்மொழியின் செல்வாக்கு மிகக் கூடுதலாகக் காணப்படுகின்றது. அவற்றிலே வேள், வேலு, பருமக(ன்), பருமகள், அபி(அவ்வி) எனும் சொற்கள் வருகின்றன. தமிழர் இனப் பெயர் குறிக்கும்  ஒரு சாசனங்கள் அவற்றிடையே காணப்படுகின்றன். தமிழ் பிராமி வடிவங்களுக்கு சிறப்பான ழ,ற,அ,ம,ளி என்னும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. ள என்னும் எழுத்து இவற்றிடையிலே தான் மிகக்கூடுதலான் இடங்களில் காணப்படுகின்றது. அது பருமகள், பருமக நுகுய வேள், சிகரமள, நுகுயமள, பருமக அஸ அதேக வேள் என ஐந்து இடங்களிலே சொற்களின் இறுதி எழுத்தாக அமைந்துள்ளது. அஸ அடேக வேள் என்ற தொடரிலுள்ள இறுதிச் சொல்லை ஒரு பதவிப் பெயரைக் குறிக்கும் சொல்லாக கொள்ளலாம். அச் சொல் அடங்கிய கல்வெட்டு மேல்வருமாறு அமைந்துள்ளது. 

பருமக அஸ அதே வேளஸ ஜாயா திஸாய லெணே

(பருமகனும் குதிரைகளின் அதிபதியுமாகிய வேளாது மனைவி திஸாவின் குகை)
இதில் வரும் வேள் என்ற சொல்லை இருவிதமாக விளக்கலாம். ஒன்று அவன் குதிரை அணி ஒன்றைக் கண்காணிப்பவன் அதனால் வேள் என்னும் பட்டம் பெற்றவன். மற்றது வேள் அவனது இயற்பெயர் என்பது நாக பரத என்னும் சமூப்பெயரட்கள் இலங்கைப் பிராமிச் சாசனங்களிலே சில இடங்களில் ஆட்களின் இயற்பெயராகவோ அப்பெயரின் ஒரு பகுதியாகவோ இடம்பெறுவது குறிப்பிடக்குரியது. அவன் குதிரைகளின் அணி ஒன்றுக்கு பொறுப்பானவன் பிரதேசத்து அரசனிடமிருந்து அவன் அப் பதவியைப் பெற்றிருத்தல் கூடும். அவன் பருமகன் என்ற பட்டம் பெற்றவன் குதிரைகளைப் பற்றிய சாசனக் குறிப்பு பெருங்கற்பாண்டுச் சின்னங்களை நினைவுபடுத்துவதாகும்.

இச் சாசனம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. அதில் வரும் பருமகன் வேள்(வேள் என்ற சொல்லின் பிராகிருத வடிவம்) என்பன தமிழ்ச் சொற்கள்.
தமிழ் மொழிக்குச் சிறப்பாக உரிய ளகரம் வேறொரு கல்வெட்டில் மூவரின் பெயர்களில் வருகின்றது, அதன் வாசகம் மேல்வருவதாகும்:

    பறுமக நுகுய வேள புதந
    ஸிகற மளஸ ச நுகுய மளஸ ச வெணே

    (பறுமகன் நுகுய வேளின் புதல்வாரன ஸிகரமள,நுகுயமள என்போரின் குகை)
ஏன்பன இரு சகோதரரின் பெயர்கள்.அவற்றிலே பின்னொட்டாக வரும் மள என்பது மள்ள(ன்) என்னுந் தமிழ்ச்சொல்லின் பிராகிருத வடிவம் என்று கருதலாம்.பிராகிருதத்திற் சொற்களின் இடையே வரும் மெய்யெழுத்துக்கள் இரட்டிப்பதில்லை.தமிழ் பிராமிச் சாசனங்களிலும் அதுவே நிலையாகும். எனவே மள்ள என்னும் திராவிடஃதமிழ் மொழிச் சொல் பிராகிருத ஆவணங்களில் மள என்றே வரும். முள்ளன் என்பது அம் மொழியில் மள ஆகிவிடும். இவ்வடிப்படையில் நோக்குமிடத்து மள்ளர் என்னும் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கி.மு,இரண்டாம்,முதலாம் நூற்றாண்டுகளிலே தெற்கு வன்னியில் வாழ்ந்தனர் என்று கருதமுடிகின்றது.பழந் தமிழ் தமிழ் நூல்களில் மள்ளரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்யமை இங்கு கவனித்தற்குரியது.

நுகுய என்னுஞ் சொல் மேற்குறித்த சாசனத்தில் இருவரின் பெயர்களின் முற்பகுதியாக வருகின்றது.அதனைப் பிராகிருதச் சொல்லாகவோ கொள்ள முடியவில்லை.அது பூர்வீகக் குடிகளான நுண்கற்காலப் பண்பாட்டு மக்களின் மொழி வழக்கிலிருந்து வந்த ஒன்றாகலாம்.வேறு பல பெயர்களும் இவ்வண்ணமானவை என்பது ஆழமான ஆய்வுகளின் மூலமாக உறுதியாகும் .
வேல் என்ற சொல் ஒருவரின் பெயரின் பின்னொட்டாக வருகின்றது.அது பஸிதவேல் என்பவனின் மகளான றோகிநி ஸிமுநி என்பவள் குகையொன்றைச் சங்கத்தாருக்கு கொடுத்தமையினை மேல்வருமாறு வர்ணிக்கின்றது.

பறுமக.மித-ஜயா பறுமக-ஸதந ஸத-ஜித(h)பறுமகள் புஸாய லெணே

பருமக(ன்) என்னும் பட்டம் பெற்றவன் பருமகன் மிதனுடைய  மனைவியும் பறுமகன் ஸதந் ஸத (சாத்தன்) சா(த்)தனுடைய மகளுமான புஸாவின் குகை  பறு(ரு)மக என்னும் பட்டத்திற்குரிய பெண் ஒருத்தியை பறுமகள் என்று குறிப்பிடுகின்றமை இச்சாசனத்திற்குரிய சிறப்பம்சமாகும். பறுமகள் என்பது சாசனங்கள் பலவற்றிலே பரு(று)மக என்று சொல்லப்படும் பட்டப்பெயரின் பெண்பால் வடிவம் என்பது இதனாலே தெளிவாகிறது. இலங்கைச் சாசனங்களிலே தமிழ்மொழிக்கு சிறப்பாக உரிய எழுத்துக்களில் ஒன்றான ள இடம்பெறுவதை ஒப்புக்கொள்ளாத பரணவிதான அவற்றிலே காணப்படும் இந்த எழுத்தை லு என்று பிழையாக அடையாளங் கண்டுள்ளார்.ஆனால் அவர் வெளியிட்ட பிராமிச்சாசனங்கள் பற்றிய தொகுப்பு நூலில் லு என்ற எழுத்து என்றவாறு அமைந்துள்ளது. 

பரு(று)மக என்ற சொல்லின் பெண்பால் வடிவமான பருமகள் என்பது தமிழ்சொல் என்பதாற் பரு(று)மக என சாசனங்களில் இடம்பெறும் சொல். பரு(று)மகன் என்ற தமிழ் திராவிட மொழிச் சொல்லின் பிராதிக வடிவம் என்று கருதுகின்றது. பருமக என பொதுவாக சாசனங்கள் குறிப்பிடும் சொல் பருமகன் என்ற கோலத்தில் இருசாசனங்களில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று றிற்றிகல ஆண்டியகந்த எனும் இடத்தில் உள்ளது.அதன் முற்பகுதியினை பருமக உதி புதஹ என்று பரணவிதான வாசித்துள்ளார். ஆயினும் அச்சாசனத்தின் புகைப்படத்தில் பருகம எனும் சொல்லை அடுத்து தமிழ் பிராமிக்குரிய ன என்னும் எழுத்தின் வடிவம் காணப்படுவதால் சாசனத்தின் முதலாவது சொல்லை பருமகன் என்று அடையாளம் காணலாம் இரண்டாவதுசாசனம் அண்மையில் எம்மால் அடையாளம் காணப்பட்ட வெல்லாவெளி கல்வெட்டு; அது இரு சொற்கள் அடங்கிய குறும் கல்வெட்டு.அதன் வாசகம் 'பருமகன் ஸமுத' என்பதாகும் இதில் இரு சொற்கள் மட்டுமே காணப்படுகின்றன அதில்  ஸமுதஹ என்பவனின் பெயர் எழுதப்பட்டுள்ளது. பருமகன் என்பது அவனுக்குரிய அடைமொழியாக வருகின்றது. தலைமகன் என்பதைக் குறிக்கும் பரு(று) மகன் என்ற தமிழ்சொல் வடிவத்திலே பிராகிருதமயப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றமை சாசனத்துக்குரிய சிறப்பம்சம். இக்கல்வெட்டு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக்காலத்திலே தமிழ்மொழி பேசியோர் வெல்லாவெளியில் வாழ்ந்தமைக்கு இச்சாசனம் சான்றாகும். அதன் 'ற,ம,ன' என்னும் மூன்று எழுத்துக்களும் தமிழ் பிராமிக்குரிய வரிவடிவங்களாகும். 

வவுனியா மாவட்டத்தில் உள்ள 54 கல்வெட்டுக்களிலே 18 கல்வெட்டுக்கள் பரு(லு)மக(ன்) என்ற பட்டப்பெயரைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் நான்கில் அச்சொல் இரண்டு வௌ;வேறான இடங்னளில் காணப்படுகிறது. அந்நான்கினுள் ஒன்றிலே பறுமகள்  என்ற சொல் 'பறுமக' என்பதன் பெண்பால் வடிவமாக மேலதிகமாக வருகின்றது. 

எருப்பொதானையிற் காணப்படும் கல்வெட்டில் ஆண்கள் இருவர் பறுமக என்று வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இயற்பெயர்கள் மித, சா(த்)த(ன்), சாத்த(ன்) என்பனவாகும். அவை பிராகிருதமயமான தமிழ்ப்பெயர்கள் போல தெரிகின்றன. அவர்கள் மாமன் மருமகன் முறையானவர்கள். அந்த முறைக்கு ஏதுவானவள். பருமகள் எனும் பட்டம் பெற்ற புஸா. அவள் பறுமக எனும் பட்டம் பெற்ற மித என்பவனின் மனைவி. மற்றவன் அவளுடைய தகப்பன். பருமகஃபறுமக என்ற பட்டம் பெண்களுக்கும் உரியது என்பதற்கு இச்சாசனம் சான்றாகிறது. ஆனால் அது அவளுக்கு பாரம்பரியமாக வந்ததா? அல்லது பருமகன் ஒருவனின் மனைவி என்ற வகையில் அவளை பருமகள் என்று அழைத்தனரா? என்பது வருங்கால ஆய்வுகளின் மூலம் தெளிவாக்கப்படவேண்டியது. 

அரச குடும்பத்து இளைஞரை அ(ய்)ய என்றும் இளம்பெண்களை அபி என்றும் சொல்லும் வழமையினை பிராமிச்சாசனங்கள் மூலமாக அறியமுடிகிறது. இச்சொற்கள் தமிழ்ஃ திராவிட மொழிமூலமானவை என்பதும் இங்கு கவனத்துக்குரியது. 

பருமக(ன்) என்பது ஒரு நிர்வாகப் பதவிப்பெயராகச் சாசனங்களில் பயன்படுத்தப்படவில்லை. அது தலைமகனைக் குறிக்கும் பட்டப் பெயராகவே வருகின்றது. இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சாசனங்களில் ஒன்றில் மட்டுமே பருமக என்பது இனக்குழுவின் பெயரோடு தொடர்புபடுத்தப்பட்ட வகையில் சொல்லப்படுகின்றது. அது நாகருக்கும் உரியதென்பதை அதனால் அறியமுடிகின்றது. குறிக்கிட்ட சாசனம் 'உபாஸாகியான நாகை' என்னும் பெண்ணை 'பருமக ஹடகன்' என்பவனின் மனைவி என்று வர்ணிக்கின்றது. 
இருவிடயங்களில் பருமக என்ற அடைமொழி வேள் எனும் பெயர்ஃபதவி பெற்றவர்களின் அடைமொழியாக வருகின்றது. (பருமக நுகு ய வேள், பருமக அஸ அதேக வேள்) தெற்கு வன்னியில் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் வேள் என்ற சொல் சிலவிடங்களில் பதிவாகியுள்ளதால் பல ஊர்கள் அடங்கிய ஆட்சிப்புலங்களில் வேள் நாடுகள் உருவாகியிருந்தனவென்று கருதுவதற்கு இடமுண்டு. அத்தகைய அமைப்புக்கள் ஒருசிறு இராட்ச்சியமாக அமைந்துவிட்டன. 

நாகர் அங்கு இராட்ச்சிமொன்றினை அமைத்து விட்டனர். ராஜநாகனைப் பற்றிய குறிப்பு பெரிய புளியங்குளத்திலுள்ள நான்கு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. அவற்றின் வாசகங்களில் அதிக வேறுபாடுகள் இல்லை. அவற்றுள் ஒன்றின் முற்பகுதி மேல் வருமாறு உள்ளது. 

ராஜநாக ஜிதா – ராஜ உதி ஜாயா
அபி அநுராதி ச ராஜா உதி ச
காராபித ஸே இமே லெணே
சதுதி ஸ ஸகாய    
      
 (நாஜநாகனின் மகளும் ராஜா உதியின் மனைவியுமான அபி அநுராதியும் ராஜா உதியும் செய்வித்த இந்தக்குகை நாற்திசை சங்கத்தாருக்கும் உரியது.) 
கணவணும் மனைவியும் இணைந்து குகையினைத் தானம் பண்ணினார்கள். கணவன் அரசன் என்பதால் அவனை ராஜா  என்று சாசனம் குறிப்பிடுகிறது. அவனது மனைவியான அநுராதி அபி எனும் சிறப்புப் பெயர் கொண்டவள். அரச குலத்துப் பெண்களை அபி என குறிப்பிடுவது சாசன வழக்கு. தென்னிலங்கையில் உள்ள பிராமிச் சாசனங்கள் பலவற்றில் அபி எனும் பெயர் காணப்படுகின்றது. அவற்றில் அது அய(அய், ஐ)  என்ற சொல்லின் பெண்பால் வடிவமாகவே வருகின்றது. கீழ்வரும் வாநகம் நல்ல உதாரணமாகும். 

த மராஜ புத ம'hதிஸ அய'
ஜிதா அப ஜவேரா
அயப ய புத திஸ அய'ஜாயா'
அபி ஸவேராய தாநே  ஸக ஸ
தி நே 

(தமராஜனின் மகனான மஹாதிஸ அய்யனின் மகள் அபி ஸவேரா. அய்(யன்) அபயனின் மகன் திஸ அய்யனின் மனைவியான அபி ஸவேராவினால் சங்கத்தாருக்கு தானம் வழங்கப்பட்டது.)

இந்தச் சாசனம் அரசனின் மகனான மஹதிஸ எனும் இளவரசனை அய்(அய்) என்றும் அவனது மகனான ஸவேராவை அபி என்றும் குறிப்பிடுகிறது. அவளது கணவன் திஸ அய்யன். அவன் அய்(யன்) அபயவினுடைய மகன். அய்(ஐ) அபி(அவ்வி) என்பன திராவிட மொழிச்சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரிய புளியங்குளத்துச் சாசனம் ராஜா என்ற பதவி நிலையிலுள்ள இருவரை குறிப்பிடுகின்றது. அவர்கள் இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மாமன் மருமகன் என்ற உறவு முறை கொண்டவர்கள். ராஜநாகனின் பின்பு அவனது மருமகனாகிய உதி, ராஜா என்னும் பதவியைப் பெற்றான். அவர்களின் பதவிப் பெயரான ராஜா என்பது சம காலத் தமிழகத்து வேளிர் எனும் பட்டத்தினைப் போன்றது. ஏறக்குறைய இரண்டாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பு வன்னியிற் குறுநில அரசுகள் தோன்றி விட்டன. அவற்றில் ஒன்றைப் பற்றி மட்டுமே சாசனங்கள் மூலம் அறிய முடிகின்றது. நாகர் குலத்தவர் அதிகாரம் செலுத்திய அரசினைப் பற்றிப் பெரிய குலத்துக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. பிற்காலத்து வன்னி இராச்சியங்களுக்கு இவையே மூலமானவை.  சமகாலத்தில் நாகர் அதிகாரம் செலுத்திய குறுநில அரசுகள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பு தேசத்திலும் தோன்றின. வேறுசில இடங்களிலும் அவை தோன்றியிருந்தன.  


பேராசிரியர்.சி.பத்மநாதன்
வரலாற்றுத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்